Tuesday, April 22, 2014

நன்றி குங்குமம் தோழி..fb page.

வணக்கம்...and Welcome to
செல்லியுடன் ஒரு chai

தோழிகளுடனான செல்லியின் கலக்கல் பேட்டி
__________________________________________________


செல்லி :உங்கள நீங்களே அறிமுகப் படுத்திக்கிட்டா எப்படி அறிமுகப் படுத்திப்பீங்க?

கிர்த்தி :இடத்துக்கு தகுந்தாப் போல..மனைவியா, தாயா, மருமகளா, மகளா, கற்றவளா, ஏதும் அறியாதவளா, வசதி படைத்தவளா, வசதி குறைந்தவளா, எளிமையா, பெருமையா எங்கு எப்படி வேண்டுமோ அப்படித்தான் என்னை அறிமுகப்படுத்திப்பேன்.

செல்லி :உங்க வெற்றிக்கான ரகசியம் என்ன..?

கிர்த்தி :எதையும் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்பது. என்னால் முடியாவிட்டால் உலகத்தில் யாராலும் முடியாது என நம்புவது.

செல்லி :உங்க முன்னாடி கடவுள் தோன்றி மூன்று வரங்கள் கேட்கச் சொன்னா என்ன கேப்பீங்க.?

கிர்த்தி :
1.உலக எல்லைகளை அழிக்கணும்.
நாடுகளே இருக்க கூடாது.
2.மனிதர்கள்.., அழிவுப் பணிகளை மறந்து
ஆக்கப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
3.அந்த உலகம் முழுவதும் என் காலடித் தடம் பதிய வேண்டும்.[ஆனா இந்தியாவில் நடக்கும் அரசியல் நடைப் பயணம் போல அல்ல..]

செல்லி :உலகத்துல எந்த எடத்துக்குப் போகணும்னு ஆசை..ஏன்?

கிர்த்தி :ஆசைன்னா மார்ஸ் தான்..போனாப் போவுது உங்களுக்காக விருப்பத்தை குறைச்சுக்கறேன்.. அமேசான் காடுகள்.
அந்த மாசுமருவற்ற இயற்கையை ரசிக்கணும்.அதில் நடக்கணும்..

செல்லி :வாழ்வு ங்றத எப்படி டிஃபைன் பண்ணுவீங்க?

கிர்த்தி :நம்முடைய இன்று--ம் இப்பொழுதும்-தான் ரசனையாய், மகிழ்ச்சியாய் வாழும் தருணம். நாளை நமக்கெதுக்கு ?

செல்லி :FBல உங்களுக்குப் பிடித்த மூன்று நண்பர்கள் ..
எதனால் அவங்களப் பிடிக்கும் ?

கிர்த்தி:நிறைய பேரப் பிடிக்கும்... குறிப்பிட்டுச் சொல்றது கஷ்டம்
எனினும் மூணே மூணு பேருன்னு சொன்னதுனால வட்டத்தை குறுக்கிக்கொண்டு சொல்றது..

வடுவூர் ரமா :
Vaduvur Rama
_______________
மனம் விட்டு பாராட்டுபவர் ..மிக இயல்பாய் இருக்கத் தெரிந்தவர். என்னைப் பொறுத்தவரை வாழ்வில் மிகக் கடினமான விஷயம் - இயல்பாய் நாம் நாமாய் வெளிப்படுவதுதான். அது ரமாவால் முடியும்.

ஆத்மார்த்தி :
Aathmaarthi RS
____________
ஆத்மா மிகக் குறுகிய காலத்தில் தன் எழுத்தால் மேலே வந்தவர். அவரின் உழைப்பின் மூலம் சாதித்துக் கொண்டு இருப்பவர். அவரின் வித்யாசமான யோசிக்கும் பாணியும் , உழைப்பும் ,தமிழை எல்லாவிதங்களிலும் கையாளுவதும் பிடிக்கும்.

ரத்னவேல் ஐயா:
________________
நல்ல எழுத்துகளை தேடிப்பிடித்து பாராட்டுவதில் வல்லவர். எந்த நல்ல ப்ளாக் இருந்தாலும் அவர் அங்கு இருப்பார். நல்ல வாசிப்புக்கு அடையாளம் அவர்தான். மனசு விட்டு அவர் அளிக்கும் பாராட்டுகள் பல பேரை ஊக்குவித்து மேலும் எழுத வைக்கும். முகநூலில் ஒரு அரிய, பெரிய மனிதர் நம் ஐயா.



செல்லி :பெண்களுக்கு பாதுகாப்பு தருவது எதுன்னு நினைக்கறீங்க?

கிர்த்தி :அவர்களுடைய தன்னம்பிக்கைதான்.
கழிவிரக்கம் அவர்களை அழித்துவிடும்.

செல்லி :உங்க பலம் என்ன ?பலவீனம் என்ன?

கிர்த்தி :ரெண்டுமே ஒண்ணுதான். ரொம்பப் பேசுவேன்.

செல்லி :உங்கள் மனம் கவர்ந்த தமிழ் திரைப்பட இயக்குநர் யார்?..மத்த இயக்குநர்களிடம் இல்லாத ஒரு அம்சமா அவரிடம் பாராட்டுவது எது?

கிர்த்தி :மணிரத்னம். எல்லாவற்றையும் open ஆக காட்சிப்படுத்தாமால் சில நுணுக்கங்களை ஒளித்து வைத்து பார்வையாளனுக்கு யோசிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுப்பது.

செல்லி :உங்களுக்குப் பிடித்த உடை எது ?ஏன் பிடிக்கும்?

கிர்த்தி :ஜீன்ஸ்தான் ....துப்பட்டா, முந்தானை என்று கால் தடுக்கும் சமாச்சாரங்களும் Continuous Conscious Confusion சமாச்சாரங்கள் ஏதும் இல்லாததாலும்..

செல்லி : ஒரு மகள்,மனைவி ,தாய் இதில் எந்த பாத்திரம் கடினம் ஏன்?

கிர்த்தி :மகளோ,தாயோ சில காலங்களில் அந்த கடமை முடிந்துவிடும். அதுவும் இல்லாமல் அதில் இருக்கும் ரத்த பந்தம் ஒரு ஈர்ப்பைக் கொடுக்கும். ஆனால் மனைவி என்பது திருமணம் ஆன அன்றில் இருந்து ஆரம்பிக்கும். நிறைய விட்டுக்கொடுத்தல், அனுசரிப்பு, பழக்கவழக்கம் மாறுதல் என்று கடைசி வரை சமன் செய்து கொண்டு போக வேண்டிய உறவு அது. இந்த காலத்தில் ஒரே அலைவரிசையில் ஒத்துப் போய் செய்யும் மனைவி ரோல் கடினமானது.

செல்லி : ஒரு நாள் மட்டும் வேறு ஒருவராக இருக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் யாராக இருக்க விரும்புவீர்கள் ?ஏன்?

கிர்த்தி :ஐ.நா பொதுச் செயலராக..
உலக நாடுகளைக் கூட்டி இலங்கையில் நடந்த ...............களை,அநியாயங்களை ஓரளவுக்காவது
தட்டிக் கேட்க முயற்சிப்பேன்.

செல்லி : வாழ்க்கையில் இனி நீங்க எதிர் பார்க்கும் விஷயம் அல்லது தருணம் எது?

கிர்த்தி :இப்போதைக்கு ஒரு தாயாக பையனின் கல்லூரி அட்மிஷன்தான்..வேறென்ன இந்த வருஷம் யோசிக்க முடியும்..?

செல்லி :உங்களுக்கு மிகப் பிடிச்ச இந்த உலகின் மிகச் சிறந்த ஆண்மகன் யார் ..?ஏன்?

கிர்த்தி :என் பெரிய பையன் நிகின். அவன் யோசனைகள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கும். திருமணம் ஆனால் மனைவியை எப்படி நடத்துவாய் என்று கேட்டதற்கு இரு தனி மனிதர்கள் ஒரு இடத்தில் வாழ இடம் கொடுப்பதே உண்மையான திருமணமாக இருக்க முடியும் என்று சொன்ன ஒரு சிந்தனைக்காகவே நான் அவனை அதிகம் ரசிக்கிறேன்.. வியக்கிறேன்
என் பையன் என்பதால் அவன் சிறந்த ஆண்மகன் ஆகிவிடவில்லை தெளீந்த சிந்தனையால் மட்டுமே ஆண்கள் சிறந்த ஆண்மகன்கள் ஆகிறார்கள்.

செல்லி: நீங்கள் கடைசியாக அழுதது எப்போது?

கிர்த்தி :ஐயே ...இன்னாமே இது..
ஒரு பொம்பள எப்பஅழுவான்னு கேட்டுக்கினு..
..எப்ப வேணாலும் அழுவுறதுதான்...நீ இப்ப நான் ஓன் ஃப்ரென்ட் இல்லைன்னு சொன்ன வச்சுக்க அதுக்கும் அழுதுடுவேன்..அதனால் கட்ச்சி இப்பவா வேணாலும்.இருக்கலாம்..ஆனா பிறக்கிறப்ப அழுதுட்டு உடனே சிரிச்சிட்டேன்..அது இன்னிக்கு வரைக்கும் தொடருது .. ஏன்னா .தொட்டில் பழக்கம்.எதுவரைக்குமோ தொடருமாமே..?

செல்லி : ஒரு பெண் தன்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள்..?

கிர்த்தி : அர்த்தநாரியாக...வெளியே ஆணாகாவும் வீட்டில்
தாய்மையுடனும்..

செல்லி: நன்றி கிர்த்தி
கிர்த்தி: நாந்தாம்ப்பா சொல்லணும். எனக்கும் சந்தோஷம்பா.. and one more thing.. டீ சூப்பர்.. ஒங்க பொடவையும் தான்..


An interview by chelli sreeni
Set and Properties-CS bavan BGLRE
Guest-MsKirthika Tharan
HOSTED BY -THOZHI fb
Template Design ByKannappan Nmr
Creative Head in assistance- Annapurani Narayanan
 — with Vaduvur Rama,Aathmaarthi RSAnnapurani NarayananN.Rathna VelKannappan NmrChelli Sreenivasan and Kirthika Tharan.

No comments: