Tuesday, April 22, 2014

அப்பா-15

அப்பா-15..

கும்பகோணத்தில் ஒரு விசேஷம்... அக்கா, அம்மா, அப்பா மூவரும் போய் இருக்காங்க. அம்மாக்கும், அப்பாக்கும் பயங்கர வாக்குவாதம். உனக்கு உங்கப்பா(ன்) புத்தின்னு திட்டிட்டார் அம்மாவை..அப்படிதான் நினைவு..பொது இடத்தில....இதுல தாத்தாவும், அப்பாவும் பயங்கர க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்..எந்த முக்கிய முடிவும் இருவரும் கலந்து ஆலோசித்தே செய்வார்கள். மாமனார் , மருமகன் உறவுக்கு உதாரணம்.

அப்ப அக்கா கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்ச வயசு..அவளுக்கு பயங்கர கோவம்..நீயும் அந்த தாத்தாவை திட்டுன்னு அம்மாக்கு
சொல்லிக்கொடுத்து இருக்கா..பெண்கள் மாமனாரை எதுவும் சொல்லாத காலம். அப்பாகிட்டவும் பேசல..

அப்பாக்கு நாம பாசமா இருக்கிற பொண்ணு நம்மை இப்படி சொல்லிட்டாளேன்னு வருத்தம். ரெண்டு பேரும் பத்து நாள் பேசிக்கல..

ஒரு நாள் அம்மாக்கிட்ட என் பொண்ணை நினைச்சு பெருமைப்படறேன். நாளைக்கு போற இடத்துல என்னை விட்டுக்கொடுக்கமாட்டான்னு சொல்லிட்டு..இனிமே அப்படி பேசலேன்னு சொல்லி அக்காவோட சேர்ந்துட்டார்..

அதுக்கு அப்புறம் அம்மாவை அப்படி திட்டுவதை விட்டுட்டார் ..ஆனால் அப்பாவின் பாசம் பொண்ணு என்ன சொன்னாலும் அதை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ள வைத்தது.

பெண் குழந்தைகள் பெற்ற அம்மாக்களும் கொடுத்து வைத்தவர்கள்.

No comments: