Tuesday, April 22, 2014

அப்பா -9

அப்பா -9,

அப்பா விவசாயம் சார்ந்த தொழில்..நெல், உளுந்து, பயறு,எள், பருத்தி விவாசயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து மொத்த வியாபாரிகள் அல்லது பேக்டரிகளுக்கு அனுப்புவது பழக்கம்.

அப்பொழுது எல்லாம் வெறும் பேச்சுதான். போனில் பேசி முடிவு செஞ்சுடுவாங்க..அப்புறம் நேரே லோடு போய்விடும். ஒரு முறை பயங்கர ஏற்றத்தாழ்வு..குறைஞ்ச விலைக்கு பேசிட்டார்..திடீர்னு மார்க்கெட்டில் விலை அதிகரிச்சு போச்சு..விவாசயிகளுக்கு மார்கட் விலை கொடுத்தே ஆகணும். ஆனால் குறைந்த விலைக்கு விற்று ரொம்ப நஷ்டம்.

விலை வீழ்ச்சியின் பொழுது நஷ்டத்தை சமாளிக்க கொடவுனில் வைத்து விடும் வழக்கமும் உண்டு. அப்பொழுது பேசி அனுப்புவார்கள். ஒரு முறை ஸ்டாக் பேசி முடித்த ஒரே நாளில் விலை அதிகம் உயர்ந்துவிட்டது. இருப்பினும் பழைய விலைக்கே அப்பா பேசாம அனுபிட்டார். நான் கேட்டேன் ஏன்பா..கொஞ்சம் பேசி பாருங்க..விலை அதிகமா கொடுத்தா நல்லதுதானே அப்படின்னு..

அப்பா சொன்னது ..வியாபாரம் செஞ்சா கோடி ரூபாய் நஷ்டம் வந்தாலும் வாக்கு முக்கியம். வாக்கு தவறி பேர் போச்சுன்னா அதுதான் மிகப்பெரிய நஷ்டம். வாக்கு மட்டும் தவறவேக்கூடாது.
பணம் போகும் வரும்..வாக்கு முக்கியம்.

அப்பா வாக்கு தவறக்கூடாதுன்னு சொல்லிக்கொடுதார். நேற்று ஒரு நல்ல வாசிப்பாள நண்பருக்கு மொக்கை ஸ்டேடஸ் போடமாட்டேன்னு சொன்னேன். இன்னிக்கு வந்துடுச்சு..

அப்பா மன்னிப்பாராக..

No comments: