Tuesday, June 4, 2013

நீங்களும் ஆகலாம் பிரபல ப்ளாகர்..

நானும் ப்ளாக் ஓபன் செஞ்சுருக்கேன் பேர்வழின்னு ஓபன் செஞ்சாச்சு..என்ன பண்றது..அப்ப அப வந்து ஒட்டடை அடித்து,பெருக்கி துடைச்சி வச்சாதானே யாராவது வந்தா பார்க்க பளபளன்னு சுத்தமா இருக்கும்..

அடுத்து இன்னொரு பிரச்சனை..நானே என் ப்ளாக் க்கு வராட்டி வேற யார் வருவா ? அதுக்காக அப்பஅப்ப வரதா புத்தாண்டு தீர்மானம் போல எடுத்து வச்சுருக்கேன்..

சரி அப்பப்ப பரபரப்பா சில விஷயங்களை கொளுத்தி போட்டதானே நானும் ப்ளாகர்ன்னு சமூகம் ஒத்துக்கும்..எழுத்தாளர் மட்டும் இல்லை..ப்ளாகர்குள்ளையும் நிறைய அரசியல் செஞ்சாதான் நாமும் பிரபலம் ஆகலாம்..இப்ப ரெண்டு பேர் இருக்கணும் ..ரஜினி,கமல் மாதிரி ,அஜித் ,விஜய் மாதிரி..பிரிஞ்சு நிக்கோணும்..(உள் குத்து பத்தி எல்லாம் சொல்லபிடாது) நீ அடிக்கற மாதிரி அடி..நான் அழுவுற மாதிரி அழுவுறேன்ன்னு டீலிங்..

இந்த டீலிங் வச்சுக்கிட்டு நம்மளை மாதிரி நாலு ஏமாளிகள் ரெண்டு பக்கமும் சேருவாங்க..இந்த பக்கத்தை அங்க திட்டறதும் அவங்களை இவங்க பதிலுக்கு வம்பு செய்யறதும்..இதை பத்தி பக்கம்பக்கமா பேஸ்புக் ,ட்விட்டர் ன்னு பரபரக்க வைக்கரதும்னு செஞ்சுகிட்டே இருக்கணும்..

இப்படி ரெண்டு பக்கத்தையும் உற்சாகபடுத்த நல்லா தீனி போட்டுகிட்டே இருக்கணும்..அப்பப்ப செய்திகள்,சர்சைகள்னு அறிக்கை விட்டுகிட்டே இருக்கணும்..இல்லாட்டி ப்ளாக் ல திட்டி எழுதணும்..விமர்சினம் வந்தா ரொம்ப சந்தோசம்..கன்னாபின்னா ன்னு திட்டுவாங்க.அது ரொம்ப முக்கியம்..எத்தனைஎத்தனை திட்டு வாங்கரங்களோ அத்தனை நல்லது..பிரபலம் ஆக ..

சரி நல்லா திட்டு வாங்கினா கஷ்டமா இருக்காதான்னு கேக்கபிடாது..இருக்கும்..கொஞ்ச நாள் ஆனா பிரபலம் ஆக கொடுத்த விலைன்னு நினைச்சா அப்புறம் நினைக்கவே மாட்டோம்..அந்த அளவுக்கு ஆகிடுவோம்..அதுக்கும் ஒரு வழி இருக்கு..நம்மளை திட்டி போட்டா நாமளும் பதிலுக்கு நல்லவைங்க மாதிரி எழுதி விளக்கம் கொடுக்கலாம் இல்லாட்டி திருப்பி திட்டி போடலாம்..ஆனா ரெண்டு அணியா இருக்கணும் அது ரொம்ப முக்கியம்.

இப்படி பரபரப்பா ப்ளாக் எழுதனும்னு எனக்கும் ஆசை..யாரவாது எனக்கு எதிரா திரும்பி ஏதாவது சொல்ல மாட்டாங்களான்னு ஏங்கிகிட்டு இருக்கேன்..ஆனா நான் எது எழுதினாலும் எல்லாரும் சிரிச்சிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி போறாங்களே ஏன் இந்த கொடுமை ?

நீங்க இப்ப பிரபல ப்ளாகர் ஆகணுமா ..வாங்க கோதா ல இறங்குவோம்..ரெண்டு அணியா பிரிவோம்..டீல் சரியா போட்டுபோம்..நாலு வார்த்தை நான் திட்டினா நீங்களும் நாலு தடவை திட்டலாம்னு..இப்படியே நூல் பிடிச்சி பிரபலம் ஆயிடுவோம்..

இப்போ நீங்களும் ஆகலாம் பிரபல ப்ளாகர்..

உதட்டளவில் தங்கள் கீழ்ப்படிந்த மாணவன் (கல்வி விகடன் கட்டுரை)

    மதிப்புக்குரிய ஆசிரியர்களுக்கு,
    நான் இப்போது பனிரெண்டாம் வகுப்பு செல்லும் மாணவன். உங்கள் மொழியில் என்னைப்பற்றி குறிப்பிடவேண்டும் என்றால், 'நன்கு படிக்கும் மாணவன்'.

    உங்களுக்காக எழுதும் இந்தக் கடிதம், ஏதோ ஒரு காலக்கட்டத்தில், ஏதோ ஒரு சூழலில் உங்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறேன். இதை ஒரு இ-மெயில் கடிதமாகக் கருதினால், கல்வி அமைச்சருக்கு CC; பெற்றோர்களுக்கு BCC இட்டிருப்பதாகக் கருதிக்கொள்ளுங்கள்.

    நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். இது, என் கதை மட்டும் அல்ல; பள்ளியில் படிக்கும் பல மாணவர்களின் அனுபவம்.

    நான் சிறுவயதில் மாற்றுமுறை பாடத்திடம் உள்ள  பள்ளியில் சந்தோஷமாக இருந்தவன். அங்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் இருந்ததால், வழக்கமான தனியார் பள்ளிகளுள் ஒன்றில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன்.
    புதிய பள்ளியில் சில மாதங்கள் நகரமாகக் கழிந்தது. அங்கு அட்ஜஸ்ட் செய்துகொள்ளவே முடியவில்லை. பிறகு, இதுதான் 'பள்ளி' என்று உணர்ந்து பழகிக் கொண்டேன்.

    சுதந்திரமாக பாடம் கற்று கொண்டிருந்த என்னை, டீச்சர்கள் அறையில் அடைத்துவைத்து எப்பவும் 'படி... படி...' என்று கூறுவது, பக்கம் பக்கமாய் வீட்டுப் பாடம் செய்யவைப்பது என்று எல்லாமே வேதனைக்குரியது ஆனது.
    இவையாவது பரவாயில்லை... 40 நிமிடங்கள் அவர்களுக்குத் தெரிந்ததை கொட்டிவிட்டு போவார்கள். புரிந்ததோ, புரியவில்லையோ உட்கார்ந்து நாம் கவனமா கேட்கவேண்டும்.போர் அடித்து, அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பினால் திட்டு விழும். ஒழுக்கத்தை போதிக்கறேன் என்று எங்களை ஜெயில் கைதி போல நடத்துவார்கள்.
    எங்கும் ஸ்ட்ரிக்ட்... எதை செய்தாலும் பனிஷ்மென்ட்... எங்களை கண்காணிக்க வேறு இன்னும் சிலர் சுற்றிக்கொண்டு இருப்பார்கள். யாரும் எதுவும் ஸ்கூல்ல பேசி சிரிச்சிடக்கூடாது. நண்பர்களை ஸ்கூலில் பார்க்காமல் எங்கு பார்க்க முடியும்? சக மாணவிகளிடம்கூட நட்புடன் சகஜமாகப் பேசமுடியாது. மீறிப் பேசினால், தண்டனைகூட உண்டு.

    ஆசிரியர்கள்  மாணவர்களை மூன்று வகையாகப் பிரித்து வைத்திருப்பார்கள். மிக நன்கு படிப்பவர்கள், ஆவரேஜ், மந்தமானவர்கள். முதல் மற்றும் மூன்றாம் வகையினர் பத்து சதவிகிதம் இருப்பார்கள். மீதி உள்ள எல்லாரும் சராசரியில் வருவார்கள்.

    கடைசியாக வரும் பத்து சதவிகித மாணவர்களை 'டேக்' செய்து, முத்திரைக் குத்தி இந்த ஆசிரியர்கள் படுத்தும் பாடு இருகிறதே... சொல்ல முடியாத அளவுக்கு மாணவர்கள் வேதனைப்படுவார்கள்! வீட்டிலும் சொல்ல முடியாமல் மனதுக்குள் புழுங்கி ஒரு வித தாழ்வு மனப்பான்மை வந்து விடும். அப்படி ஒரு நெருக்கடியில் சிக்கி, மிகத் திறமையான மாணவர்கள்கூட வீணாக போய்விட்டதை பார்த்து இருக்கிறேன்.

    ஒரு சில ஆசிரியர்களைத் தவிர, அனைவருமே மார்க்கை வைத்துதான் மாணவர்களை எடை போடுகிறார்கள். குறைந்த மார்க் வாங்கும் மாணவர்களை, 'ஒன்றுக்கும் லாயக்கு இல்லை' என்று அடிக்கடி திட்டி, மட்டம் செய்து, நிஜமாக அவர்களை மோசமான நிலையை எட்ட செய்து விடுகிறார்கள். அதனால, அவர்களில் சிலர் கெட்டப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவதும் நடக்கிறது.

    ஆசிரியர்கள் நினைத்தால் எங்களை உற்சாகப்படுத்தி, எந்த உயரத்துக்கும் கொண்டு செல்ல முடியும். ஆனால், அவர்களுக்கு நிறைய மார்க் எடுக்கும் டாப் 10 சதவிகிதம்தான் முக்கியம். மற்றவர்கள் முக்கியம் இல்லை. மிகுந்த பாரபட்சம். ஒரு மாணவனுக்கு ஒரு பாடம் மட்டும் வரவில்லை என்றாலும், எதுவும் வராது என்று முடிவு கட்டும் பழக்கமும் உண்டு.

    அப்புறம் இன்னொரு விஷயம்... அவர்களுக்கு தெரியாத எதையும் நாங்கள் கேட்டுவிட கூடாது. கேட்டால் அவ்வளவுதான். 'தெரியாது... கற்றுக்கொண்டு வருகிறேன்' என்று கூறினால், அவர்களுக்கு மரியாதை போய்விடும். சந்தேகம் கேட்டால்கூட அவர்களுக்கு தெரிந்ததை மட்டும் கேட்கவேண்டும். புரியாத, தெரியாத விஷயத்தை கேட்டாலோ, விவாதம் செய்தாலோ 'அதிகப்பிரசங்கி' என்று கூறி நம்மை அடக்கி விடுவார்கள்.

    நாமாக எதுவும் செய்யக் கூடாது; கேட்கக் கூடாது. அவர்களும் புத்தகத்தை, அன்றைய தனி பாடத்தைத் தவிர வேறு எதுவும் சொல்லித்தர மாட்டார்கள். அதுவும் அவர்களுக்குப் பிடித்த மாதிரி சொல்லி கொடுத்துவிட்டு போவார்கள். நாம் புரியவில்லை என்று கூறினால், 'மக்கு' பட்டம் வந்துவிடும். பிறகு, டியூஷன் சென்று திரும்ப புரிந்துப் படிக்கணும். அப்புறம் எதற்கு எட்டு மணி நேரம் வெறும் பாடங்கள்?

    சில பள்ளிகளில் விளையாட்டு பீரியட்கள்கூட கேன்சல் செய்து பாடங்கள் எடுப்பார்கள். ஆனால், சில ஆசிரியர்கள் மட்டுமே நன்கு நடத்துவார்கள். பிறகு, பள்ளி செல்ல எங்களுக்கு எப்படி பிடிக்கும்?

    நாங்கள் இப்போது இருக்கும் தகவல் தொழில் நுட்பப் புரட்சியில் யூடியூப்பிலும், கூகிளிலும் இதை விட நன்றாகக் கற்று கொள்வோம். அப்படி இருக்கையில், எங்களை சோர்வடைய விடாமல் சுவாரசியமாக, நன்றாக கற்றுத் தருவது ஆசிரியர்களின் கடமை. ஆனால், அவர்கள் அதை உணர்ந்து கொள்வதே இல்லை. மார்க் வந்தால் போதும். அது எப்படி வந்தது என்ற கவலை இல்லை அவர்களுக்கு. புரிந்ததா, புரியவில்லையா என்ற பிரச்னை அவர்களுக்கு இல்லை.

    பிறகு, பள்ளிகளும் மாணவர்களை வதைப்பதை சந்தோஷமாக செய்கின்றன. ஸ்ட்ரிக்ட் பள்ளிகள் என்று பெயர் எடுக்க, தேவை இல்லாத தண்டனைகள் எங்களுக்கு உண்டு. பெரிய வகுப்பு செல்லச் செல்ல நிறைய ஆசிரியர்களின் தரம் சொல்லி கொள்ளும்படி இல்லை. ஆனால், எங்களை அடக்குவதில் யாரும் சளைத்தவர்கள் இல்லை.

    எனக்குத் தெரிந்து பள்ளியை விட்டு நின்ற, கெட்டப் பழக்கங்களுக்கு ஆளான மாணவர்கள் நிறையபேர் உள்ளனர். அதில் பெரும்பாலோர் ஆசிரியர்களின் மதிப்பீடுகளால் ஒரு வித தாழ்வு மனப்பான்மைக்கு சென்று வழி தவறி விடுகிறார்கள். மாணவர்களை நல்வழியில் ஈடுபடுத்தும் கடமையை விட்டுவிட்டு, அவர்களை மட்டம் தட்டி வழிமாறச் செய்வதில் என்ன சாதிக்க முடியும்? இது போன்ற மாணவர்களை நான் உதாரணமாக காட்ட முடியும். கண்ணால் பார்தததைதான் சொல்லுகிறேன். இதுதான் ஆசிரியர்கள் செய்யும் சாதனைகளா?

    கட்டமைப்பு, தொழில் நுட்பம், நல்ல விசாலமான அறிவு எல்லாம் இருந்தாலே இந்த காலத்து மாணவர்களின் அறிவுக்கு ஈடு கொடுக்க முடியாது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இவை ஏதும் இல்லை. எங்களை சொந்தமாக ஒரு ப்ராஜக்ட்கூட செய்ய விடுவது இல்லை. அவர்கள் சொல்லுவதை கேட்டு, ஆட்டு மந்தை போல தலையாட்ட வேண்டும். எங்களை யோசிக்கவிடாமல் செய்வதில் அத்தனை சந்தோஷம்.

    இப்படி இருந்தால் நாட்டுக்கு எப்படி ஆராய்ச்சியாளர்கள் கிடைப்பார்கள். எந்தத் தனித்துவமும் இல்லாத மாணவர்களை உருவாக்கி, என்ன சாதிக்கப் போகிறார்கள்? அனைவரும் நூற்றுக்கு நூறு வாங்கினால் சமுதாயம் முன்னேறிவிடுமா? இந்த ஐந்து பாடங்களில் மட்டும் வாழ்கைக்கு தேவையான அத்தனையும் கற்று கொள்ள முடியுமா?

    பதினைந்து வருடங்கள்... வாழ்கையில் முக்கியமான வருடங்களை காலையில் இருந்து சாயங்காலம் வரை பள்ளியில் செலவு செய்கிறோம். ஆனால், என்ன கற்று கொள்கிறோம் என்றால், மிக குறைவே. ஆனால், அதைவிட அதிகமாக வெளியில்தான் கற்றுகொள்கிறோம். நல்லதோ, கெட்டதோ வெளியில் கற்றுக்கொள்வதை விட செலவிடும் நேரத்தில் பள்ளியில் கற்றுக்கொள்வது மிகக் குறைவு.

    எனக்குத்தான் இப்படியெல்லாம் தோன்றுகிறதோ என்று எண்ணி, இதுபற்றி என் நண்பன் ஒருவனிடம் விவாதித்தேன். அவன் வன்முறையை கையில் எடுக்கும் அளவுக்கான மனநிலையை இந்தக் கல்வி முறை போதித்து உள்ளது என்பதை உணர்ந்தேன்.

    என்னைப் போன்ற பெரும்பாலான மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் 'இந்த காலத்து பிள்ளைகள்' என்று  குறைசொல்வதில் என்ன பயன்?

    கல்வி சீர்திருத்தம் தேவையான ஒன்று. அது நடக்காவிட்டால் பெரும் கலாசார சீரழிவை எதிர்நோக்க வேண்டி இருக்கும் என்று உங்களுக்கு புரிய வைக்கவே இந்தக் கடிதம். இன்னும் எத்தனையோ இருக்கு... ஒரே கடிதத்தில் அத்தனையும் கொட்ட முடியவில்லை.

    ஆசிரியர்களாகிய நீங்கள், மாணவர்களாகிய எங்கள் நிலையில் இருந்து கொஞ்சம் யோசித்துப் பார்த்து செயல்படுங்கள்.

    இனி, இந்தியாவை ஒளிர வைக்கும் பங்கு யார் கையில் என்று தீர்மானம் செய்யுங்கள்!
    இப்படிக்கு,
    உதட்டளவில் தங்கள் கீழ்ப்படிந்த மாணவன்,
    கார்த்திக்.
    * மாணவர் கார்த்திக் விவரிக்க, எழுதியவர்: கிர்த்திகா  

உயர்கல்விக்கு வெளிநாடு செல்ல விருப்பமா..? - ஒரு நிமிஷம்! கல்வி விகடன் கட்டுரை.


    வெளிநாட்டுப் படிப்பு 
    உயர்கல்விக்கு வெளிநாடு செல்ல விருப்பமா..? - ஒரு நிமிஷம்!
    என்றால், மேற்படிப்புக்கும், ஆராய்ச்சிப் படிப்புக்கும்தான் எனும் நிலை மாறி, இப்பொழுது பட்டப்படிப்புக்கே வெளிநாடு செல்ல மாணவர்கள் படையெடுக்கிறார்கள். இதன் முக்கியக் காரணம்... இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகள்கூட உலகத் தர வரிசையில் 200-க்கும் கீழே இருப்பதுதான். அந்த கல்லூரிகளில் இடம் கிடைக்க மிகுந்த போட்டி.

    உதாணத்துக்கு, ஐ.ஐ.டி. - மும்பைதான் இந்திய மாணவர்களின் முதல் தேர்வு. ஆனால், அது, உலக அளவில் கவனத்துக்குரிய தரவரிசைப் பட்டியலில் 200-க்கும் மேல் என்ற நிலையில்தான் உள்ளது.

    சிங்கப்பூர், சீனா, தைவான், ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் மட்டுமின்றி, மலேசியா, சவுதி அரேபியா, கொரியாவில் உள்ள பல்கலைகழகங்கள்கூட நமக்குமேல் இருப்பது, நாம் எந்த அளவுக்கு கல்வித் துறையில் பின்தங்கி இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

    இந்தியாவில் இருக்கும் டாப் 10 கல்லூரிகளில், அது எந்தத் துறையாக இருந்தாலும் இடம் கிடைப்பது அத்தனை எளிதும் இல்லை. உலகிலேயே மிகவும் போட்டி வாய்ந்த தேர்வுகளில் ஒன்று... ஐ.ஐ.டி. தேர்வு. அதுவும் லட்சகணக்கான மாணவர்கள் எழுதினால், தேர்ந்து எடுக்கப்படுவது என்னவோ சில ஆயிரம் மாணவர்கள் மட்டுமே. சரி என்று மதிப்பெண்கள் வழியாக தேர்ந்து எடுக்கும் கல்லூரிகள் பக்கம் போகலாம் என்றால், 100 சதவிகித மதிப்பெண்கள்தான் பல கல்லூரிகளில் கட் ஆஃப். அவர்களும் என்னதான் செய்வார்கள் பாவம். நம் நன்கு படிக்கும் இந்திய மாணவர்கள் பெருகி கொண்டே போகிறார்கள். அதேசமயம், தரமான கல்வி கொடுக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவு. எப்படியாவது வடிகட்டும் முறையே இப்போது கல்லூரிகளில் உள்ளதே தவிர, மிகச்சிறந்த மாணவர்களைத் தேர்ந்து எடுக்கும் முறை இந்தியாவில் அதிகம் இல்லை.

    சிறந்த கல்லூரிகளில் 100 இடங்கள் இருந்தால், அதற்குக் குறைந்தபட்சம் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் வரும். 98 சதவிகித மாணவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். உலகில் எங்கேயும் 99% மாணவர்கள் தேர்ந்து எடுக்கப்படாதது இந்தியாவில் மட்டுமே சகஜமாக நடக்கும் நிகழ்வு. பெற்றோர்களும் இதைப் புரிந்து கொள்ளாமல் மாணவர்களைக் குறை கூறுவதும், அந்த கல்லூரிகளில் இடம் கிடைக்க போராடுவதும் நடக்கிறது.

    இதைப் புரிந்துகொண்ட பள்ளிகள், கோச்சிங் சென்டர்கள் பணம் கொழிக்க கல்வி வியாபாரக் கடைகளை திறந்து வைத்துக்கொண்டு இருக்கின்றன. பெற்றோர்களும் அந்த வலையில், வேறு வழி இல்லாமல் விழவேண்டிய நிலைமை. கற்றுக் கொடுக்கும் இடம் போய் வியாபாரக் கேந்திரமாக பள்ளிக் கல்வியைக்கூட மாற்றிய நிலைமை நம் இந்திய கல்வி அமைப்பையேச் சேரும்.

    வெளிநாட்டுக்கு செல்வது மிகுந்த பொருட்செலவு. அடுத்தது, மாணவர்கள் 18 வயதில் இருந்து 25 வயது வரை எங்கு வாழ்கிறார்களோ, அந்த கலாசாரம், மொழி, உணவு அனைத்தும் அவர்களின் உணர்வோடு கலந்துவிடுவது சகஜம். இதனால், அந்நிய கலாசாரம், உணவு என்று பல விதத்தில் ஊடுருவல் இருப்பது உணராமல் இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாத் தொலைக்கும் அபாயமும் கண்கூடு.

    பட்டப் படிப்புக்கு வெளிநாடு செல்லும் பல மாணவர்கள் இந்தியாவை மறந்துவிடுவதும் நிஜம். அங்கு வளரும் இந்தியக் குழந்தைகளை இந்தியப் பெற்றோர்களுடன் வளர்வது வீட்டில் ஒரு இந்திய சூழலை உணர முடியும். ஆனால் இங்கிருந்து செல்லும் சிறு வயது மாணவர்கள் பக்குவம் வருவதற்கு முன்பே அந்தச் சூழலில் சிக்கிக் கொள்வதால் ஏற்படும் சங்கடங்களும் பல இருக்கின்றன. ஆனால், மாணவர்களின் முன்னேற்றத்துக்காக பெற்றோர்கள் கொடுக்கவேண்டிய விலை? அந்த இந்தியக் குழந்தையைப் பாதி இழக்கும் மிகப்பெரிய விலையை கொடுக்கிறார்கள்.

    நாம் தரமான கல்வி நிறுவனங்களை நிறுவாவிடில், வசதி உள்ளவர்கள் வெளிநாடு செல்வதால் நமக்கு அந்நியச் செலவாணி இழப்பு மட்டும் அல்ல, நல்ல வேலைவாய்ப்புகள் வெளியே செல்கிறது. அதைத் தவிர மிக நன்கு படிக்கும் மாணவர்கள் வெளிநாடு சென்று அங்கேயே தங்குவதால் நம் நாட்டுக்கு மூளை இழப்பு  ஏற்படுகிறது. திறமையானவர்கள், வெளிநாடு செல்வதால் இந்தியாவின் முன்னேற்றமே பாதிக்கப்படுகிறது. இதை நம் அரசு எப்போது புரிந்துகொண்டு, நாம் எப்போது நல்ல பாதையில் செல்வோம் என்பதே இப்போதையக் கேள்வி.

    - கிர்த்திகா

AIEEE, AIPMT பரிட்சைகள் பற்றி ஒரு சிறு அலசல்

இந்திய அளவில் நடக்கும் தேர்வுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகும் மாணவர்கள் மிக குறைந்த அளவே இருக்கின்றனர். இன்று AIEEE, AIPMT பரிட்சைகள் பற்றி ஒரு சிறு அலசல்.
இப்போது தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி சீர்திருத்தத்தை விட CBSE போர்டில் நடக்கும் குழப்பங்களும்,குழப்படிகளும் அதிகம். அதுவும் கடந்த வருடங்களாக போட்டி தேர்வுகள் பற்றிய அறிவுப்புகள் மாறி,மாறி வந்து கொண்டிருக்கிறது..பெற்றோருக்கும்,மாணவர்களுக்கு யாருக்குமே என்ன நடக்கிறது என்ற விளங்காத குழப்பத்தில்தான் இருக்கிறார்கள்.
இந்தியாவில்தான். மாநிலத்துக்கு ஒரு பாடத்திட்டம் ,மத்தியில் ஒரு பாடத்திட்டம்,என்று வித விதமாக முப்பதுக்கும் மேற்பட்ட பாடத்திட்டங்கள் உள்ளன. அதனால் அனைத்தையும் சேர்த்து ஒரே பாடத்திட்டமாக மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கு பல மாநிலங்கள் ஒத்து கொள்ளவில்லை.
இப்போது முதல் முயற்சியாக பதினொன்று ,பன்னிரெண்டாம் பாடங்களை மட்டும் இந்தியா முழுமைக்கும் பரிந்துரைத்து உள்ளது மத்திய அரசு. இப்பொழுது கர்நாடகம் உள்பட சில மாநிலங்கள் அந்த பாடத்திட்டத்தை எடுத்து கொண்டு இருக்கின்றன. வழக்கம் போல நம் தமிழ்நாட்டில் ஏற்று கொள்ளப்படவில்லை. அறிவியல்,கணித பாடங்களை ஒன்று படுத்தினால் மாணவர்களுக்கு இந்திய அளவிலான போட்டி தேர்வுகள் எழுத வசதியாக இருக்கும்.
6 m - -Way-to-graduation- kiruthika
தற்பொழுது IITMain என்றும் அதில் தகுதி பெற்றவர்கள IIT Advance என்று இரு தீர்வுகளாக பகுக்க பட்டு இருக்கிறது. முதலில் IITMain பரீட்சையில் தேர்வானால்தான் IITAdvance எழுத முடியும். இந்த வருடமும் அடுத்த வருடமும் இந்த முறை உள்ளது. இப்போது அனைத்துக்கும் பொதுவான் தேர்வை இரண்டு IIT கள் ஒப்பு கொள்ளாததால் இரு தேர்வாக இந்த வருடமும் தொடரும். இந்திய கல்வித்துறையின் சீர்த்திருத்தபடி அனைத்து பள்ளிகளும் ஒரே சிலபஸ், இந்தியா முழுமைக்கும் ஒரே போட்டி தேர்வு என்று கொண்டு வர மாநிலங்களின் முழு ஒத்துழைப்பு தேவை..அப்போதுதான் சமச்சீர் கல்வி என்று நாம் அழைக்க முடியும்.
இப்போது உள்ள முறையின் படி போட்டி தேர்வில் இருந்து 60% இருந்தும் பன்னிரெண்டாம் வகுப்பில் இருந்து 40% மதிப்பெண்கள் கணக்கில் கொள்ள படுகின்றன..இதன் மூலம்NITs, Centrally Funded Technical Institutions (CFTIs) like IIITsமற்றும் பல கல்லூரிகளுக்கு செல்ல இந்த போட்டி தேர்வு.இதன் மூலம்முதல் ஒன்றரை லக்ஷம் இடத்திற்குள் வரும் தகுதியானவர்கள் மட்டுமே IIT advance எனும் IIT க்கான தனி தேர்வை எழுத முடியும்.
அதை தவிர்த்து AIPMT எனப்படும் அனைத்திந்திய மருத்துவ கலோரி போட்டி தேர்வும் இரண்டு பகுதிகளாக நடைபெறுகிறது.பிரிலிமினரி தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மெயின் தேர்வை எழுத முடியும். இப்போதுNEET என்று அழைக்கபடுகிறது. இதுவும் மிக போட்டி வாய்ந்த தேர்வாகும்.மிகுந்த கடின உழைப்பும் சரியான் வழிகாட்டுதலும் தேவை.இந்தியாவின் தலை சிறந்த மருத்துவ கல்லூரிகளுக்குள் இந்த தேர்வின் மூலம் நுழைய முடியும்.
AIIEE கல்லூரிகள் விவரம்.
Colleges Under All India Engineering Entrance Examination (AIEEE)
National Institutes of Technology(NIT)
1. National Institute of Technology (NIT), Agartala
2. Motilal Nehru National Institute of Technology, Allahabad (U.P.)
3. Maulana Azad National Institute of Technology, Bhopal (Madhya Pradesh)
4. National Institute of Technology, Calicut (Kerela)
5. National Institute of Technology, Durgapur (West Bengal)
6. National Institute of Technology, Hamirpur (Himachal Pradesh)
7. Malviya National Institute of Technology, Jaipur (Rajasthan)
8. Dr. B R Ambedkar National Institute of Technology, Jalandhar (Punjab)
9. National Institute of Technology, Jamshedpur (Jharkhand)
10. National Institute of Technology, Kurukshetra (Haryana)
11. Visvesvaraya National Institute of Technology, Nagpur (Maharashtra)
12. National Institute of Technology, Patna (Bihar)
13. National Institute of Technology, Rourkela (Orissa)
14. National Institute of Technology, Silchar (Assam)
15. National Institute of Technology, Hazartbal, Srinagar (J & K)
16. Sardar Vallabhbhai National Institute of Technology, Surat (Gujarat)
17. National Institute of Technology, Surathkal (Karnataka)
18. National Institute of Technology, Tiruchirapalli (Tamil Nadu)
19. National Institute of Technology, Warangal (Andhra Pradesh)
20. National Institute of Technology (NIT), Raipur (Chhattisgarh)
Indian Institutes of Information Technology (IIIT) and Indian Institute of InformationTechnology and Management
(IIITM)
1. Indian Institute of Information Technology, Allahabad (U.P.)
2. Atal Bihari Vajpayee Indian Institute of Information Technology & Management, Gwalior (M.P.)
3. Pandit Dwarka Prasad Mishra Indian Institute of Information Technology, Design & Manufacturing, Jabalpur (M.P.)
4. Indian Institute of Information Technology, Design & Manufacturing, Kanchipuram, Tamil Nadu
Self Financed Deemed Universities/University
1. International Institute of Information Technology, Hyderabad (A.P.)
2. Birla Institute of Technology, Mesra, Ranchi (Jharkhand)
3. Birla Institute of Technology, Patna (Bihar)
4. Shri Mata Vaishno Devi University, Gandhinagar, Jammu Tawi (J & K)
5. Kalinga Institute of Industrial Technology, Bhubhaneswar (Orissa)
6. The Shanmugha Arts, Science, Technology & Research Academy (Sastra), Thanjavur (Tamil Nadu)
7. The LNM Institute of Information Technology, Jaipur (Rajasthan)
8. Sri Chandrasekharendra Saraswati Viswa Mahavidyalaya, Kanchipuram (Tamil Nadu)
9. Dr. M.G.R. Educational and Research Institute, Chennai (Tamil Nadu)
10. Faculty of Engineering & Technology, Gurukul Kangri Vishwavidyalaya, Haridwar (Uttarakhand)
Other Central Government Funded Institutions
1. Indian Institute of Carpet Technology, Bhadohi (U.P.) (IICT, Bhadohi)
2. School of Planning and Architecture, I.P. Estate, New Delhi (SPA, Delhi).
3. National Insitute of Foundary & Forge Technology, Ranchi (Jharkhand), (NIFFT, Ranch)
4. Assam University, Silchar (Assam)
5. J.K. Institute of Applied Physics & Technology, University of Allahabad, Allahabad- 211002 (U.P.)
States/UTs
At the time of Preparation of content the States/Institutes listed below were likely to use AIEEE ranks to fill seats through their own counselling.
1. Haryana
2. Uttarakhand
3. Himachal Pradesh (All India Quota will be filled through Central Counselling Board)
4. Army Institute of Technology, Pune, Maharashtra
5. Tezpur University, Napaam, Assam
ஐஐடி தேர்வு பற்றிய லிங்க்http://en.wikipedia.org/wiki/Indian_Institute_of_Technology_Joint_Entrance_Examination
AIPMT மருத்துவ கல்லூரிகள் விவரம் .
Institution Code
Name of State Medical Colleges
Assam
AS 01
Assam Medical College, Dibrugarh
AS 02
Guwahati Medical College, Guwahati
AS 03
Silchar Medical College, Silchar
AS 04
JMC, Jorhat
Bihar
BR 01
AN Magadh Medical College, Gaya
BR 02
Darbhanga Medical College, Laheriasarai
BR 03
Jawahar Lal Nehru Medical College, Bhagalpur
BR 04
Nalanda Medical College, Patna
BR 05
Patna Medical College, Patna
BR 06
SK Medical College, Muzaffarpur
Chandigarh
CH 01
Govt Medical College,Chandigarh
Chattisgrah
CG 01
Pt. JNM Medical College, Raipur
CG 02
GMCNDMG, Jagdalpur
Delhi
DL 01
Lady Hardinge Medical College,New Delhi (for Girls only)
DL 02
Maulana Azad Medical College, New Delhi
DL 03
University College of Medical Science, Delhi
DL 04
V M Medical College &Safdarjung Hosp.,New Delhi
Goa
GA 01
Goa Medical College,Panaji
Gujarat
GJ 01
B.J Medical College,Ahmedabad
GJ 02
Government Medical College, Surat
GJ 03
NHL Municipal Medical College, Ahmedabad
GJ 04
Medical College,Baroda
GJ 05
M.P Shah Medical College, Jamnagar
GJ 06
Pandit DDU Medical College, Rajkot
GJ 07
Govt Medical College,Bhavnagar.
Haryana
HR 01
Pt Bhagwat Dayal Sharma Medical College, Rohtak
Himachal Pradesh
HP 01

Indira Gandhi Medical College, Shimla
HP 02
Dr R P G Medical College, Tanda
Jharkhand
JH 01
MGM Medical College, Jamshedpur
JH 02
Rajendra Medical College, Ranchi
JH 03
Patliputra Medical College, Dhanbad
Karnataka
KA 01
Bangalore Medical College, Bangalore
KA 02
Vijaynagar Institute of Medical Science, Bellary
KA 03
Karnataka Institute of Medical Science, Hubli
KA 04
Mysore Medical College, Mysore
KA 05
Belgaun Institute of Medical Sciences, Belgaun
KA 06
Mysore Medical College, Mysore
KA 07
Mandyn Institute of Medical Sciences, Mandyn
KA 08
Raichur Institute of Medical Sciences, Raichur
KA 09
Shimoga Institute of Medical Sciences, Shimoga
KA 10
Bidar Institute of Medical Sciences, Bidar
Kerala
KL 01
Calicut Medical College, Calicut
KL 02
Government Medical College, Trivandrum
KL 03
T.D Medical College, Alleppey (Allappuzha)
KL 04
Government Medical College, Trichur
KL 05
Medical College,Kottayam
Manipur
MN 01
Regional Institute of Medical Sciences, Imphal
Maharashtra
MH 01
B.J Medical College, Pune
MH 02
Dr. V.M Medical College,Sholapur
MH 03
Govt Medical College,Aurangabad
MH 04
Govt Medical College, Nagpur
MH 05
Grant Medical College,Mumbai
MH 06
Indira Gandhi Medical College, Nagpur
MH 07
L.T.M. Medical College, Mumbai
MH 08
Miraj Medical College,Miraj
MH 09
Seth G.S Medical College,Mumbai
MH 10
SRTR Medical College, Ambajogai
MH 11
T.N Medical College,Mumbai
MH 12
Govt Medical College,Nanded
MH 13
Shri Vasant Rao Naik Medical College, Yavatmal
MH 14
Shri B.H. Govt Medical College, Dhule
MH 15
R.G.M.C & Chap S.M Hospital, Thane
MH 16
R.S.C.S.M GMC, Kolhapur
MH 17
Government Medical College, Akola
Meghalaya
ME 01
Neigrihms, Shillong
Madhya Pradesh
MP 01
Gandhi Medical College,Bhopal
MP 02
Netaji SCB Medical College, Jabalpur
MP 03
G.R Medical College, Gwalior
MP 04
M.G.M Medical College,Indore
MP 05
S.S Medical College, Rewa
MP 06
BMC, Sagar
Orissa
OR 01
MKCG Medical College, Berhampur, Ganjam
OR 02
SCB Medical College, Cuttack
OR 03
V.S.S. Medical College, Burla Distt, Sambalpur
Punjab
PB 01
Govt Medical College, Patiala
PB 02
Guru Govind Singh Medical College, Faridkot
PB 03
Govt Medical College, Amritsar
Rajasthan
RJ 01
Dr. S.N Medical College, Jodhpur
RJ 02
JLN Medical College, Ajmer
RJ 03
SMS Medical College, Jaipur
RJ 04
S.P Medical College Bikaner
RJ 05
R.N.T Medical College, Udaipur
RJ 06
Govt Medical College, Kota
Tamilnadu
TN 01
Chengalpattu Medical College,Chengalpattu
TN 02
Coimbatore Medical College, Coimbatore
TN 03
Kilpauk Medical College, Chennai
TN 04
Madras Medical College &Research Institute
Chennai
TN 05
Madurai Medical College, Madurai
TN 06
Stanley Medical College, Chennai
TN 07
Thanjavur MedicalCollege, Thanjavur
TN 08
Tirunelveli Medical College,Tirunelveli
TN 09
Govt. MKMM Medical College, Selam
TN 10
K A P V G Medical College, Tiruchurapalli
TN 11
T M C, Thoothukudii
TN 12
K M C, Asaripallam
TN 13
G V M C, Vellore
TN 14
Theni M.C., Theni
TN 15
G D M C, Dharampuri
TN 16
G M C, Thiruvarur
TN 17
G M C, Villupuram
Tripura
TR 01
A G M G, Agartala
Uttarakhand
UT 01
G G M S & R, Srinagar, Pauri, Garhwal
UT 02
UT. FHTMC, Haldwani
Uttar Pradesh
UP 01
BRD Medical College, Gorakhpur
UP 02
GSV Memorial Medical College, Kanpur
UP 03
King George’s M University, Lucknow
UP 04
LLR Memorial Medical College, Meerut
UP 05
Rani Lakshmi BaiMedical College, Jhansi
UP 06
MLN Medical College, Allahabad
UP 07
S.N Medical College,Agra
UP 08
R I M S & R, Safai, Etawah
UP 09
I M S, BHU, Varanasi
West Bengal
WB 01
Bankura Sammilani Medical College Bankura
WB 02
Burdwan Medical College, Burdwan
WB 03
Kolkatta National Medical College,Kolkatta
WB 04
Medical College,Kolkatta
WB 05
NRS Medical College,Kolkatta
WB 06
North Bengal Medical College P.O Sushrutanagar Darjeeling
WB 07
R.G KAR Medical College, Kolkatta
WB 08
I.P.G.M.E.R., Kolkatta
WB 09
M.G.M.C. & H.
படம் : Radmila Dijcinovic


எஞ்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் மட்டுமா உலகம்?

என்ஜினியரிங், மெடிக்கல் மட்டுமா உலகம்..அதை தாண்டி எத்தனை எத்தனையோ உலகத்தில் வேலைகள் உள்ளன. சில மாணவர்கள் மிகுந்த கலைதிறனுடன் வடிவமைப்பில் ஆர்வத்துடன் இருப்பார்கள். அதற்கெனவே மிக புகழ் பெற்ற கல்லூரிகள் இந்தியாவிலேயே இருக்கின்றன. இங்கும் எப்போதும் போல சீட் கிடைக்க பெரும்பாடுதான் பட வேண்டும். முடிந்தவர்கள் தானாகவே உள்ளே போகிறார்கள்..இல்லாவிடில் இருக்கவே இருக்கு கோச்சிங் கிளாஸ்கள்.
13 - Kiruthika Career-After-12th
NID தேர்வு.
நேஷனல் இன்ஸ்ட்யுட்ஆப் டிசைன் NID மிக்க புகழ்பெற்ற டிசைன் கல்லூரி. அதற்கென்று தனியாக நுழைவு தேர்வு எழுத வேண்டும்.இங்கு முக்கியமாக படைப்பு திறன் அதாவது கிரியேட்டிவிட்டி பார்த்தே தேர்ந்து எடுகிராகள்.அதற்கேற்றவாறு கேள்விகள் வடிவைமக்க பட்டிருக்கும். இங்கு டிப்ளமா இன் டிசைன் நான்கு வருடம் ப்ளஸ் டூ பிறகு படிக்கலாம். அதில சில பிரிவுகளும் இருக்கின்றன. மேற்படிப்புக்கு நான்கு வருட டிப்ளமா இல்லாவிடில் அந்த துறை சம்பந்தப்பட்ட டிகிரி தேவை.மிகப்பெரிய வேலை கிடைத்தவர்கள் கூட வேலையில் சலிப்பு வந்து இங்கு சேர்ந்து படித்த கதைகள் உண்டு. நம் படைப்பு திறனுக்கு தீனி போடும் படிப்புகள். அகமதாபாத் ,பெங்களூர் கல்லூரிகள் சிறந்து விளங்குகிறது.
மேலும் விளக்கங்கள் http://www.admissions.nid.edu/gdpd-pgdpd.html#gdpd
NIFT நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி.
இந்திய அரசாங்கம் மூலம நடைபெறும் புகழ்பெற்ற பேஷன் டெக்னாலஜி படிப்பு கல்லூரிகள்.
இப்போது பேஷன் டெக்னாலாஜி துறை அதிகம் வளர்ந்து வருகிறது.அதில் தேசிய அளவில் புகழ்பெற்ற பேஷன் டெக்னாலஜி படிப்பை தரும் கல்வி நிறுவனம் நுழைவு தேர்வின் மூலம மாணவர்களை தேர்ந்து எடுக்கிறது. இங்கு பாசிலர் படிப்புக்கு
B. Des GAT 2 Hrs 40% க்கும் CAT 3 hrs. 40%க்கும்
Situation Test
(Second tier) 20% க்கும் தேர்வு நடைபெறுகிறது..
B.F Tech GAT 2 hrs 60% க்கும்
MAT 2 hrs 40% ஆக தேர்வு நடைபெறுகிறது. அதை தவிர மேற்படிப்புகளும் உள்ளன.
இங்கு லெதர் டிசைன், கணித் வேர் டிசைன்,பேஷன் ப்ரொடக்ஷன்,பேஷன் டெக்னாலஜி பிரிவுகள் உள்ளன. பெங்களூர்,சென்னை உள்பட பதினாறு இடங்களில் சென்டர்கள் உள்ளது.
link :http://www.nift.ac.in/theinstitute.html
NATA தேர்வு.
அடுத்து சிலர் மேற்படிப்பு வாய்ப்புகளுக்காக பி.டெக் படிப்பபை தேர்ந்து எடுப்பார்கள்..அதில் படைப்பு திறன் கலந்த வாய்ப்புகள் உள்ள ஆர்கிடேக்சர் படிப்பு .அதற்கு உள்ள இந்தியா முழுமைக்கும் உள்ள கல்லூரிகளுக்கு நேட்டா என்று கூறப்படும் NATA நுழைவு தேர்வு உள்ளது.இரு பகுதி தேர்வு முறையை அப்படியே பகிர்ந்து இருக்கிறேன்.
Drawing Test
This is a two hour paper where candidate has to attempt three questions. The drawing
aptitude is judged on the following aspects -
Ability to sketch a given object proportionately and rendering the same in
visually appealing manner.
Visualizing and drawing the effects of light on the object and shadows cast on
surroundings.
Sense of perspective drawing.
Combining and composing given three dimensional elements to form a
building or structural form.
Creating visual harmony using colours in given composition.
Understanding of scale and proportions.
Drawing from memory through pencil sketch on themes from day to day
experiences.
15.2 Aesthetic Sensitivity Test
This is computer based test where candidate has to answer 40 multiple choice
questions.
The aesthetic sensitivity test measures perception, imagination and observation,
creativity and communication along with architectural awareness and comprises of Visualizing three dimensional objects from two dimensional drawings.
Visualizing different sides of three dimensional objects.
Identifying commonly used materials and objects based on their textural
qualities.
Analytical reasoning.
Mental Ability.
Imaginative comprehension and expression.
Architectural awareness.
http://portal.nata.in/www13/default.aspx
இந்த லிங்க் மூலம எத்தனை கல்லூரிகள் நேட்டா தேர்வு மூலம எடுத்து கொள்கிறது என்று அறியலாம். எடுத்துகாட்டாக கர்நாடகாவில்மட்டும் 23 கல்லூரிகள் உள்ளது.
http://www.coa.gov.in/STATUS.pdf
CLAT தேர்வு.
அடுத்து முன்பே டாக்டர் இஞ்சினியர் அடுத்து வக்கீல என்று கூறப்பட்ட படிப்பு..அது என்னவோ நடுவில் கொஞ்சம் தேக்க பட்டு விட்டது.இன்றும் மிக விரும்பி வக்கீலுக்கு படிக்கும் மாணவர்கள் உள்ளனர். இதில பெங்களூருவில் இருக்கும் நேஷனல லா காலேஜ் மிக புகழ்பெற்றது..வழக்கம்போல கடினமான தேர்வு வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும் .இந்தியா முழுமைக்கும் உள்ள நேஷனல் லா காலேஜ் களுக்கு CLAT நுழைவு தேர்வு மூலமாகத்தான் செல்ல வேண்டும். அங்கு இந்த முறைப்படி தேர்வு உண்டு.
Total Marks 200
Total number of multiple-choice questions of one mark each 200
Duration of examination Two Hours
Subject areas with weightage:
English including Comprehension 40 Marks
General Knowledge/ Current Affairs 50 Marks
Elementary Mathematics (Numerical Ability) 20 Marks
Legal Aptitude 50 Marks
Logical Reasoning 40 Marks
http://www.clat.ac.in/index.php அதற்கான லிங்க்.

விவசாயம் மற்றும் விண்வெளி போன்ற ஆராய்ச்சித்துறைகள்

என்ஜினீயரிங், மெடிகல் படித்தும் கூட ஆராய்ச்சியில் ஈடுபடுவர்..ஆனால் அறிவியல் ஆராய்ச்சியில் விருப்பமுள்ளவர்களுக்கும் அறிவியல் சம்பந்தமாக படிக்க வேண்டும் என்றாலும் இந்தியாவில் மிக சிறந்த கல்லூரிகள் இருக்கிறது. அதில் மிக முக்கியமான கல்லூரிகள் IISC, IISER, அப்புறம் ஸ்பேஸ் பற்றிய படிப்புகளுக்கு IIST.
பிறகு விவசாயம், பயோ டெக்னாலஜி போன்ற ஆராய்ச்சி படிப்புகளுக்கும் நிறைய கல்லூரிகள் உள்ளன..
IISC ..India Institute of science.
இங்கு B.S. படிப்புகள் ஆரம்பித்து உள்ளார்கள்..இங்கு சீட் கிடைப்பதும் மிக கஷ்டமே..இங்கு kvpy போட்டித்தேர்வு, IIT போட்டி தேர்வு ,மற்றும் AIEEE மூலம மாணவர்களை தேர்ந்து எடுக்கிறார்கள்..அதை தவிர ஒலிம்பியாட் தேர்வுகளில் இந்திய அல்லது உலக அளவில்வெற்றி பெற்றிருந்தாலும் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இங்கு பாடங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஆய்வு கூடங்களில் நடத்த படுகிறது. இந்திய அளவில் அதிக கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பெருமை வாய்ந்த கல்லூரி. அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த கல்லூரி ஆகும். இங்கும் 120 இடங்களுக்கு இந்தியா முழுவதும் இருந்து முப்பதாயிரம் விண்ணப்பங்களுக்கு மேல் வருகிறது.
http://www.iisc.ernet.in
22 m - kiruthika vazhikatti
IISER
அறிவியல் துறை ஆர்வமுள்ள மாணவர்களுக்கு முன்பு B.SC,M.sc போன்றவைகளை மட்டுமே தேர்ந்து எடுத்து படிக்க முடியும்..ஆனால் இப்பொழுது IISER மூலம ஐந்து வருட B.S,M.S ஒருங்கிணைக்கப்பபட்ட படிப்பை படிக்க முடியும்..பிறகு ஆராய்ச்சி படிப்பு டாக்டோரல் படிப்பை தொடர வாய்ப்பும்உண்டு.வெளிநாட்டிலோ, உள்நாட்டிலோ ஆராய்ச்சியை தொடர முடியும். இங்கும் kvpy,IIT மற்றும் மாநில,மத்திய போர்டுகள் நடாத்தும் பன்னிரெண்டாவது மதிப்பெண்கள் மூலம் தேர்ந்து எடுக்கும் மாணவர்களுக்கு திறனாய்வு (aptitude) பரீட்சை மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர்.

அதை தவிர இந்தியா முழுவதும் உள்ள விவசாய கல்லூரிகளில் நான்கு வருட B.tech பட்டய படிப்புகள் வழங்கபடுகிறது. அங்கும் பயோ டெக்னாலஜி, பிளான்ட் டெக்னாலஜி போன்ற ஆராய்ச்சி சார்ந்த படிப்புகள் பல்வேறு துறைகளில் வழங்கப்படுகிறது . வெறும் இன்ஜினியரிங் கல்லூரிகளை மட்டும் குறிவைத்து தேடி கொண்டு இருக்காமல் பலவேறு துறை சார்ந்த கல்லூரிகள் பற்றி அறிந்து வைத்துகொண்டால் மாணவர் சேர்க்கையின் பொழுது மிகுந்த வசதியாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் வேலை வாய்ப்புகள் இன்ஜினியரிங் படிப்புகளில் மிகுந்த போட்டி வாய்ந்ததாக மாறிக்கொண்டு இருப்பதால் வேறு துறைகளுக்கு மாறும் நிர்பந்தங்கள் எற்பட்டுகொண்டு இருகிறது.
IIST
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக நிலையம் மூலம B.tech பட்டய படிப்புகள் படிக்க IIT பரீட்சை மூலம மாணவர்கள் தேர்ந்து எடுக்க படுவர். அங்கு B.Tech. (AEROSPACE ENGINEERING),B.Tech. (AVIONICS) :B.Tech. (PHYSICAL SCIENCES) ஆகிய துறைகளில் சேரலாம்.
IIITB..
International Institute of Information Technology:
இதுவும் IT சிறந்த கல்லூரி ஆகும் . இந்த கல்லூரியிலும் IIT main பரீட்சை மூலமே மாணவர்கள் தேர்ந்து எடுக்கபடுவர்கள். இங்கு M.tech ஒருங்கிணைக்கப்பட்ட படிப்பு வழங்கபடுகிறது.
http://www.iiitb.ac.in/integrated-mtech#selection-proc
இந்திய அளவில் பெருமை வாய்ந்த பல கல்லூரிகள் பெரும்பாலும் IIT Main (AIEEE) மூலமே தேர்ந்து எடுக்கபடுகிறது. அந்த நுழைவு தேர்வு மிக முக்கியமாக கருதபடுகிறது. தமிழ்நாடு மாணவர்களும் இந்திய அளவில் தயாராகி அனைத்து பரீட்சைகளையும் உடைத்து மேலே வருவதற்கு வெறும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டும் இல்லாமல் நுழைவு தேர்வுகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

SAT பரீட்சை எழுதலாமா

இந்தியாவில் இப்பொழுது பலவித காரணங்களுக்காக வெளிநாட்டு படிப்பை பனிரெண்டாம் வகுப்பு முடிந்த நிலையிலையே வரவேற்க மாணவர்கள் தயாராகி விட்டார்கள் .அப்படி அங்கு செல்ல வேண்டுமானால் சில முக்கியமான பரீட்சைகளை எழுத வேண்டும். அதிலும் அங்கு படிக்க விண்ணப்பங்கள் ஆறு மாதங்கள் முன்பே அனுப்ப தொடங்க வேண்டும் என்பதால் பதினொன்று அல்ல்து பன்னிரெண்டாம் வகுப்பு துவக்கதிலையே பரிட்சைகள் எழுதி விட்டால் விண்ணப்பங்கள் அனுப்ப மிக வசதியாக இருக்கும்.

SAT
scholastic Aptitude Test என்பதன் சுருக்கம். இதில் ஆங்கில மொழிக்கும் பல்வேறு துறை சார்ந்த சப்ஜெக்ட் சாட் என்றும் இருக்கிறது. இதற்கு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் எழுதினால் அதற்குள் அங்கு அட்மிஷன் முடிந்தே இருக்கும்..எனவே பதினொன்று அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே எழுதிவிடுவது உத்தமம்.
ஏன் SAT பரீட்சை எழுத வேண்டும் ?
வெளிநாட்டு கல்லூரிகளில் இந்திய மாணவர்கள் சேருவதற்கு பல படிகள் உள்ளன. சில பல்கலைகழகங்கள் சாட் தேர்வு மதிப்பெண்களை இணைக்க கூறுகிறது. இதில் இரண்டு வித தேர்வுகள் உள்ளன. சாட் 1 , சாட் 2 இரண்டும். இதில் சாட் 2 என்பது subject sat அதாவது தனி பாடங்கள் உள்ள தேர்வு.நாம் என்ன பாடங்கள் தேவை என்று பார்த்து எழுதலாம்.
1 - vazhikatti graph_SAT
ஒவ்வொரு கல்லூரியிலும் ,பல்கலைகழகங்களிலும் ஒவ்வொரு விதமான தேர்வு முறைகள் உள்ளன.சாட் பரீட்சையும் அதில் ஒன்று..ஆனால அதை மட்டும் வைத்து தேர்வுகள் அமைவதில்லை. அதை எழுதினால் இன்னும் பாயின்ட் அதிகம் கிடைக்கும். அதனால் எந்த கல்லூரி தேர்ந்து எடுக்கிறோமோ அந்த கல்லூரிகளின் தேர்வு முறைகளை நன்கு படித்து பார்க்க வேண்டும்.
தற்பொழுது தேர்வுக்கட்டணம் 6000 ரூபாய்க்குள் இருக்கிறது. வருடத்திற்கு ஆறு முறை நடக்கிறது. வசதி உள்ளவர்கள் நான்கு முறை கூட எழுதுகிறார்கள்.
SAT 1 ..Reasoning Test.
Critical Reading,writing mathematics(quantitative aptitude) என்று மூன்று பேப்பர்கள் உள்ளது. இதில் கணக்கு முறைக்கு கால்குலேட்டர் வைத்துக்கொள்ளும் அனுமதி உண்டு. ஆங்கில பாடத்துக்கு முறையான பயிற்சி அவசியம்..இதற்கு பல தனியார் நிறுவனங்கள் பயிற்சி கொடுக்கின்றன..அறிந்த வரையில் முப்பதாயிரம் வரை வெறும் ஆங்கில பயிற்சிக்கு மட்டுமே வாங்குகிறார்கள். நன்கு படிப்பவர்கள் தானாக படித்தும் நல்ல மதிப்பெண்கள் வாங்குகிறார்கள்.
writing பகுதியில் கட்டுரை எழுதுவதில் நன்கு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்..பிறகு ஆங்கில வார்த்தைகளில் நல்ல ஆளுமையும் தேவைபடுகிறது. ஆனால் மிகுந்த கடினமான தேர்வு அல்ல.
SAT 2..Subject Test.
சில பல்கலைகழகங்கள் SAT1 தேர்வு மட்டும் எடுத்துகொளவதில்லை..அவர்கள் SAT 2 தேர்வு மதிப்பெண்கள் வேண்டுவார்கள். எடுத்துக்காட்டாக ஹார்வேர்ட் பல்கலைகழகதிற்கு விண்ணபிக்க வேண்டும் என்றால் மூன்று சாட் பாடங்களின் மதிப்பெண்கள் தேவைப்படும்.
SAT 2..பாடங்கள்.
ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு மொழி பாடங்களை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
கணிதத்தில் இரு பேப்பர்களில் எது வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம், அறிவியல் பாடத்தில் இயற்பியல்,வேதியல் ,உயிரியல் பாடங்கள் உள்ளது. அதை தவிர வரலாற்றில் அமெரிக்க வரலாறு,உலக வரலாறு பாடபிரிவுகள் உள்ளன.
மொழி பாடங்களில் பிரெஞ்ச,ஜெர்மன,ஸ்பானிஷ் உள்பட பல மொழிகள் உள்ளன. இந்த மதிப்பெண்கள் பல்கலைகழக தேர்வுக்கு உதவும்.நம் இந்திய மாணவர்கள் தற்பொழுது சிறந்த மதிப்பெண்கள் பெறுகிறார்கள்.
குறைந்தபட்ச தகுதி எதுவும் இல்லை..ஒன்பதாம் வகுப்பில் கூட எழுதலாம்.
குறைந்தபட்ச மதிப்பெண்கள் கட் ஆப் போன்றவை இல்லை.
இந்த தேர்வை எழுத கண்டிப்பாக பாஸ்போர்ட் தேவை.
பரிட்சைகள் வருடத்தில் ஆறு முறை நடக்கும். எத்தனை முறை வேண்டும் என்றாலும் எழுதலாம். பெரும்பாலும் இரண்டு முறை எடுத்துகொள்வது சகஜமாக இருக்கிறது.
காலேஜ் போர்ட் என்ற வலை தளத்தில் விண்ணபிக்க வேண்டும்.
அவர்கள் வரிசைப்படுதப்பட்டு குறிப்பிட்டுள்ள தேர்வு மையங்களில் ஒன்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.
பெரும்பாலும் புகழ்பெற்ற இண்டர்நேஷனல் பள்ளிகளே தேர்வு மையமாக இருக்கும்.
தவறான விடைகளுக்கு நெகடிவ் மதிப்பெண் வழங்கும் முறை இருக்கிறது.
அமெரிக்க பல்கலை கழகங்கள் சாட் பரீட்சை மதிப்பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிகின்றன.
முதல் தர பல்கலைகழகங்கள் சாட் தேர்வில் 2200/2400 மேல் மதிப்பெண்களை எதிர்பார்கின்றன.
நல்ல மதிப்பெண்கள் பெற்று இருந்து சாட் தேர்விலும் முழு மதிப்பெண்கள் பெற்றால் நல்ல ஸ்காலர்ஷிப்புடன் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
இதற்காக இந்த தளத்தில் விண்ணபிக்க முடியும். http://sat.collegeboard.org/home.