Friday, October 30, 2015

அழகென்ற சொல்லுக்கு..

அழகென்ற சொல்லுக்கு...

பெண் என்பது இரண்டெழுத்துதான்..அதை உச்சரிக்கும் அளவுக்கு உணர்தல் அத்தனை எளிமையில்லை...பெண் எங்கு எப்படி அழகு என உணரப்படுகிறாள்? அவள் அழகு எதில் ஒளிந்து இருக்கிறது? உலகில் அனைவருக்கும் மிக அழகு தாய்..பாட்டியின் சுருங்கிப் போன விரல்கள் பேரப் பிள்ளைகளுக்கு பேரழகு..தங்கை, அக்காக்களின் அன்பில், வருடல்களில் இல்லாத அழகா என்ன..காதலித்தால் பெண் மட்டுமல்ல உலகில் எல்லாமே அழகுதான்.
ஆனால் இன்று பெண்கள் என்ன உடை உடுத்தினால் அழகு, இந்த மேக் அப் போட்டா அழகு..இந்த ஹேர் ஸ்டைல் அழகு..வாக்சிங், பேடி க்யூர் பியுட்டி பார்லர் விஷயங்கள், மேக் அப் சாதனங்கள்..இன்னும் எத்தனையோ வியாபார, விற்பனை பொருட்கள்..எல்லாம் அழகு, அழகு..அழகு வர்த்தகம்.பில்லியன் டாலர்களில் புழங்கும் இடம்.. மிக நுண்ணியமாக புகும் ஆபத்து..இதான் அழகு என்று வரவேற்பறையில் புகுத்தும் வஞ்சம்..பணம் பிடுங்கும் வழிகள்..எல்லா இடங்களிலும் துணிக் கடைகள், வளையல் கடைகள் முதல் முக்குக்கு முக்கு பியுட்டி பார்லர்கள் வரை சம்பாதித்து போகட்டும்..இவற்றை அடைய முடியாதவர்கள் என்னாகிறார்கள்..உடனே ஒரு தாழ்வு மனபான்மை..உனக்கு பருவால் தாழ்வு மனப்பான்மையா..வா..தன்னம்ப்பிக்கையா நடை போட எங்கள் பொருளை வாங்கு என்றும் வலை விரிப்பு.. தமிழக..ஏன் இந்திய பெண்களில் 95% யாரும் விளம்பர பெண் போல இருக்க முடியாது..உடுத்த முடியாது..அவை வெறும் விளம்பர கவர்ச்சி மட்டுமே.
இருப்பினும் இப்படி இருந்தால் அழகு என்று பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் போட்டப்படுகிறது, மாய எண்ணம் திணிக்கப்படுகிறது....சிறு வயதில் இருந்தே..உடனே அவன் மனதளவில் பெண் அழகு என்பற்கு எடுத்துக்காட்டாக நயன், திரிஷா, சமந்தா இல்லாவிடில் காஜல், அனுஷ்கா என்று கற்பனை வடிவமைப்பில் மூழ்குகிறான். அப்படிப்பட்ட காதலியை எதிர்பார்க்கிறான்..சூப்பர் பிகர் என்று சிலரை நினைத்து பின்னாடியே செல்கிறான்.சிலருக்கு மட்டும் டிமான்ட்..பெண்களிலும் பலர் சாதரணமாக இருந்தால் மதிப்பு இல்லை என்று தலை முடி வரை கால் விரல் நுனி வரை மாற்றிக்கொண்டு ஆணை கவர முற்படுகிறார்கள். வாழ்கை என்னதான் இருந்தாலும் எதிர்பாலின ஈர்ப்பும் இங்கு முக்கியம். அது இயற்கை. அதுவும் பெண்கள் பாதுக்காப்பு சம்பந்தப்பட்டு உளவியல் ரீதியாக ஆழமாக இருப்பதால் ஆண்களின் அன்பு அவளுக்கு தீவிர தேவையாக இருக்கிறது. தன்னை இன்னும் அழகுப்படுதிக்க முற்படுகிறாள்..இது ஒரு தீரா தலைவலியாக முடிவில்லாமல் போய்க் கொண்டு இருக்கும். நுகர்வோர் விற்பனை பல பில்லியன் டாலர்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கும்.
என்னதான் தீர்வு..சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு ..இதை செய்தால் அழகு இல்லை...அதைவிட தன்னம்பிக்கை, உள்ள செயலை சுயமாக செய்வதுதான் சிறப்பு என்று கற்றுக் கொடுக்கும் தேவை மிக முக்கியம். சுயமாக இருக்கும் பெண்கள் முக்கியமாக எமோஷனல் இன்டலிஜென்ஸ் உள்ள பெண்களை எளிதில் வீழ்த்த முடியாது.
நாம் ஐ.கியு வை இம்ப்ரூவ் செய்வதுப் போல பெண் குழந்தைகளுக்கு EQ அதாவது உணர்வு அறிவை மேம்படுத்த பயிற்சி கொடுப்பதில்லை. ஒரு ஜாதி கட்சி சேர்ந்த நண்பர் சொன்னார்..பதினெட்டு வயதில் உள்ள பெண்களுக்கு உடனே திருமணம் செய்துவிடுகிறோம்..இல்லாவிடில் வேறு ஜாதி பையன்கள் மயக்கி விடுகிறார்கள் என்றார்.. நான் உங்கள் ஜாதி பெண்களுக்கு தன் கணவனை தேர்ந்தெடுக்கும் அறிவை, தன்னம்பிக்கையை, பொருளாதாரத்தை, சுய உணர்வை அளியுங்கள். உணர்வில் பலமாக இருக்கும், சுய அறிவும், நல்லதை, கெட்டதை பகுத்துப் பார்க்கும் எந்தப் பெண் குழந்தையும் பதினெட்டு வயதில் ஓடிப்போக துணிய மாட்டாள். அதை விட்டுவிட்டு நீங்கள் எது செய்தாலும் அது சமூக தீர்வாக இருக்காது என்றேன். அடிமைத்தனம் அதிகமாகும்..இல்லாவிடில் உங்கள் ஜாதியில் பெண்ணடிமை அதிகமாகி முன்னேற்றம் தடைபடும்..கல்வி முதலியவற்றில் பின்னாடி செல்வீர்கள் ..அது இன்னும் உங்களுக்குத்தான் இழப்பு..என்று அவருக்கு ஏற்றார் போல சொன்னேன்.

எனவே தாயாய், தமைக்கையாக், மனைவியாய் இயற்கையில் உணர்வுப் பூர்வமானவள் பெண்.ஆனால் உணர்வுகளை எப்படி, எங்கு, எவ்வளவு காட்ட வேண்டும்..குறைக்க வேண்டும், மறைக்க வேண்டும், மறக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை யாருக்கும் செவிக் கொடுக்காது, எந்த நுகர்வோர் விளம்பரத்திற்கும் அசையாது..தான் இஷ்டப்படி..தனக்கு விருப்படி அன்பாக , பொறாமை இல்லாமல் இருப்பது சிறப்பும் அழகும்...ஆனால். எல்லாவற்றையயும் விட உணர்வுகளை மிகச்சரியாக தன்னம்பிக்கையுடன், சுயமாக கையாள தெரிந்த பெண்ணே மிக மிக அழகானவள்.

Monday, October 19, 2015

உணர்வின் நிழல்.

ஒரு அழகிய மாலை..உங்ககிட்ட பேசணுமே ..இன்பாக்ஸ் ஒளிர்ந்தது. அவ்வப்பொழுது சந்தித்த பெயர்தான்..ஆனால் நெருங்கிய பழக்கமில்லை. ஆனால் நம்பி நம்பர் கொடுத்து பேசத் தோன்றியது. யாரை எப்போ எதுக்கு எப்படி சந்திக்கறோம், சில விஷயங்களில் நட்பாகிறோம் என்பது புரியாத புதிர்தான்.

அவர் பேசிய விஷயங்கள் தலைக்குள் ஏற கொஞ்ச நேரங்கள் ஆனது. ஆனால் பேச பேச ஆச்சர்யம. இதிலும் இவ்ளோ விஷயம் இருக்கிறது என்று வியப்பு. அவரிடமிருந்து சில விஷயங்களை நானும்..என்னிடமிருந்து கொஞ்சம் கூடுதல் துணிச்சலையும் கொடுத்து, வாங்கிக் கொண்டோம். அந்த சமயத்தில் பலர் குழப்பி விட கடைசியில் என் நினைவு வந்து இன்பாக்ஸ் செய்து இருக்கிறார். நீண்ட நேர உரையாடலில் கொஞ்சம் இன்னும் தெளிவும் துணிவும் கூடியிருக்கலாம்.

மறுநாள் போலிஸ் பேசி உள்ளனர். ஸ்பாட் பற்றி விசாரித்து உள்ளனர். இவர் அழகாக, தீர்மானமாக பேசினார். தான் பார்த்து பார்த்து வளர்த்த குழந்தை கஷ்டப்படுவது எந்தத் தாயால் சகிக்க முடியும். எதிராளிகளை அவதூறு பேசாமல் உறுதியாக தனக்கு நேர்ந்த பிரச்சனையை மட்டும் பேசியுள்ளார். இன்னொரு விஷயம் இது கடவுள் நம்பிக்கை, மதம் சார்ந்தது என்பதால் அவர் மிகுந்த கவனமாக பேசி உள்ளார். அதைத் தவிர ஒரு அமைப்பும் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உறுதி அளித்துள்ளனர. போலிசுக்கு செல்லாவிட்டால் இதெல்லாம் குற்றமில்லை..யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..யார் வீட்டிலும் அத்து மீறலாம்..எதற்கும் அனுமதி தேவையில்லை என்றாகி விடும் என்பதே எண்ணமும்.

சம்பவம் நடந்த பொழுது பிள்ளையார் சதுர்த்தி விழா..பக்கத்து தெருவினர் மிக விமர்சையாக கொண்டாட விரும்பினர். சென்னையின் பரபரப்பான அதே சமயத்தில் கொஞ்சம் அமைதியும் உள்ள நகரத்தின் முக்கிய பகுதி. கொண்டாட்ட உற்சாகம் இப்பொழுதெல்லாம் மிகுதியாக ஆகி சிலருக்கு என்ன செய்கிறோம் என்றே தெரிவதில்லை. இவர் ஆசை ஆசையா குழந்தை போல வளர்த்த மரத்தின் ஒருப் பகுதி பிள்ளையாரை சிறிது மறைத்து உள்ளது. (அப்படி தெரியவில்லை இருப்பினும் மறைத்ததாக எண்ணி உள்ளனர்) கிளைகளை வெட்ட இவரிடம் அனுமதி வாங்கி உள்ளனர். இவர் யோசிக்கிறேன் என்று சொல்ல..மீறி கொஞ்சம் கிளைகளை வெட்டுகிறோம் என்று மரத்தில் ஏறி உள்ளனர். எல்லாரும் கொடுத்த உற்சாகத்தில் மரத்தில் ஏறிவர் இவர் சொல்ல சொல்லக் கேக்காமல் இவரின் வருத்தம், கோபம், ஆற்றாமை எல்லாவற்றையும் உதறிவிட்டு கூட்டம் கொடுத்த சத்தத்தில் கொஞ்சம் தான் செய்வது என்னவென்று அறியாமல் வெட்டியே விட்டார். எக்கச்சக்க கிளைகளை. சில கூடுள்ள கிளைகளும் அடக்கம்.


கணவரும், அவரும் வீட்டுக்கு வரும்பொழுது வைத்த மரம்..வெளியில் தெருக்காரர்களும் கார் நிறுத்துவார்கள்..அவர்களுக்கும் நிழல் கொடுத்து வந்திருக்கிறது. இவர் திரும்ப திரும்ப மரத்தை வெட்டுப்படாமல் காப்பாற்றுவது பற்றிய கவலை,, காம்பவுண்டுக்குள் அத்து மீறி வெட்டியவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சென்றது இரண்டும் இவரை பாதித்து இருக்கிறது. அதைத் தவிர அது உணர்வோடு கலந்த மரம்.

நிழல் என்ற அமைப்பு இருக்கிறது. http://www.nizhaltn.org/ அதன் ட்ரஸ்டி திரு. ஷோபா மேனன் அவர்கள் போலீசில் தகவல் சொல்ல அறிவுறுத்தி உள்ளார். சுற்றம், நட்பு எல்லாரும் இதற்கு எதிர்ப்பு. தேவையில்லாமல் அக்கம்பக்கத்தை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று. மரத்துக்கு அதுவும் கிளைகளுக்கு போய் பேச வேண்டுமா என்று.
அன்றுதான் எனக்கு போன் செய்தார். நீண்ட நேரம் பேசினோம். நான் மெசேஜில் கொடுத்தது ஒரு ஹக் அல்லது அணைப்புதான். மறுநாள் போலீசில் நிதானமாக போய் பேசினார். அவர்களை குற்றம் சொல்லாமல் மரத்தையும் அதன் பிணைப்பையும், அதன் வளர்ந்த விதத்தை..அதை வெட்டியதால் அவர்களுக்கு நடந்த மன சங்கடங்கள் ..கொஞ்சமாக வெட்ட அனுமதி அளித்தும் இப்படி அத்து மீறியது எல்லாம் தெரிவித்து இருக்கிறார்.




போலிஸ் அவர்களை அழைத்து எச்சரிக்கை செய்து இருக்கிறது. இனி வெட்ட மாட்டோம் என்று வாக்கு அளித்து இருக்கிறார்கள். வருத்தமும் தெரிவித்து கலைந்து சென்று உள்ளனர்.

மரம் வெட்டுவதை பற்றி புகார் அளித்தால் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.


மரம், மனிதம் விலங்கு என்று இல்லாமல் உணர்வோடு பிணைந்த எல்லாமே உயிரோடு இருப்பவைதான். ஏற்கனவே கான்கரிட் காடுகளில் இருக்கும் ஒன்று இரண்டு மரங்களையும் வெட்டிவிட்டு என்ன சாதிக்க முடியும்? இதில் மரம்தானே என்று விடாமல் இதற்கும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று நிருபித்த என் தோழி சுமதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

மரம் காப்போம்..கிளைகளையும் சேர்த்தே..

Friday, October 16, 2015

நான் எங்கதான் போறது?


நான் எங்கதான்  போறது?

எங்கப் போனாலும் என்னை போராளியாக்கி பார்க்காம விடறதில்லைன்னு  உலகமே கங்கணம் கட்டிகிட்டா நான் எங்கே போறது?
ஊருக்கு போயிட்டு இன்னிக்கு பெங்களூரு வந்தாச்சு..எப்பவும் OLA கார் அல்லது ஆட்டோ புக் பண்ற வழக்கம்..திடீர்னு மனசுக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற கம்புயுனிஸ்ட் பூனை முழிச்சிகிட்டு..கார்பரெட் முதலைகளை நாம் ஆதரிக்க கூடாதுன்னு மியாவ், மியாவ் ன்னு சுரண்டிச்சி..

சரி..அது கத்தினா சும்மா காதுல வாங்காம போயிருக்கனும்ல..போவாம அது சொன்ன பேச்சை கேட்டு..தனியொரு ஆட்டோவை வாழ வைச்சு பாரதத்தை காப்பாற்ற பொட்டியும் கையுமா கிளம்பிட்டேன்.

ஆட்டோக்காரர்கிட்ட "மீட்டர் ஆகித்திறே பர்த்தினி" என்றேன்.."ஒந்து ஓரை பெலகே இல்வா"..என்றார்(மீட்டர்  விலைல  ஒன்றரை பங்கு கொடுக்கணும்)

சரின்னு ஏறி உக்கார்ந்தேன்..முன்னாடி போற ஆட்டோ கூப்பிட்டு ஏம்பா இப்படி சத்தம் வருது..இது இதெல்லாம் செக் செய்ன்னு சொன்னார்..சரி நல்ல மனுஷர்..நல்ல ஆட்டோன்னு நினைச்சேன்..

ஒரு ரவுண்டு அடிச்சுது..இரண்டு கி.மீ..சரி போகட்டும்னு பார்த்தேன்.. கட கடவென்று மீட்டர் எகிறியது..விடிகாலை பெங்களூர் குளிர் உறைக்கவே இல்லை..மனசு கொதிக்குது..என்னடா இது சோதனை என்று..
போகும் பொழுது 150 ரூபாய் கொடுத்த OLA புத்தம் புது ஹுண்டாய் டாக்சி ..அவரின் பணிவு எல்லாம் மனசுக்குள் திரும்ப தூங்கப் போன  கம்ப்யூனிஸ்ட் பூனையை பெருச்சாளியாக  கடித்து குதறியது..

சரியாக வீட்டுக்கு வந்தது..325 அதைத்தவிர அதில் பாதி..கிட்டத்தட்ட ஐநூறு ரூபாய்..வெறும் பன்னிரண்டு கி.மீ க்கு..

வரும் வழியில் காமிராவை மியுட் ல் வைத்து ஆட்டோ ஓட்டுனரின் ஐ.டிய போட்டோ எடுத்துக் கொண்டேன்..இறங்கும் முன். அதற்கு முன் என்று மீட்டரின் போட்டோ எடுத்துக்கொண்டேன். வீட்டில் இருந்து ஏறிய இடம் வரை உள்ள தூரம் காட்டும் கூகிள் மேப் போட்டு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொண்டேன்.

என் பாதுகாப்பு வளையத்துக்கு வரும் வரை என் போராளி முகத்தை மறைத்து வைத்தேன். வீட்டின் அருகில் இறங்கினேன்..இது நம்ம ஏரியா..
எஷ்டு கொடு பேக்கு..என்று பேக்கு போல முகம் வைத்துக் கொண்டு கேட்டேன்..
மீட்டர் துட்டு one and half  கொடி சாக்கு..என்றார்..( இதுல போதும்னு வேற டயலாக்) களத்தில் இறங்கியாச்சு..

"இருவதினாலு கி.மீ க்கு நான் மாரத்தஹள்ளி தாண்டி போவேன்..என்ன நினைசிகிட்டு இப்படி பண்றீங்க.. எப்படி மீட்டர் இப்படி ஓடுது?
நான் வேற வழில வந்தேன்..கூகிள் வேற வழி காட்டுது

இல்ல..உங்க வழியை கூகிள் மேப் ல போட்டுதான் காட்டறேன்..சரி அப்படியே வச்சுப்போம்..என்ன சுத்தி சுத்தி போனாலும் அந்த இடம் 15 கி.மி க்கு மேல போவாது" இது நானு.

இன்னாம்மா என்னங்கற ..அப்படின்னு கொஞ்சம் அவர் எகிற..

அமைதியா  நான் எந்த நடவடிக்கைலயும் இறங்க விரும்பல..பிரச்னை செய்ய விரும்பல..இந்தாங்க  இருநூறு ரூபாய்..விடிகாலையில் ஒட்டியதுக்கு..உங்க பணம் எனக்கு வேண்டாம்..அதேப் போல அடுத்தவங்க பணத்தை நீங்க பறிக்க நினைக்காதீங்க..இப்படில்லாம் செய்யறதாலதான் பெரிய கம்பனிகளை மக்கள் நம்பறாங்க..உங்க மேல நம்பிக்கையை வளர்த்துக்க பாருங்க.(கிட்டத்தட்ட நான் நல்ல மூடுல இருக்கேன்.தப்பிச்சு போயிடு )என்ற தொனியில சொன்னேன்..
லிப்ட் ல் கால் வைக்கும் பொழுது பின்னாடி முதுகை பார்த்துக் கொண்டிருந்த இரு  கண்கள் ஆட்டோவை ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டது..


ஆமா என்னைப் பார்த்தா எப்படி தெரியுது? உலகை திருத்தறேன்னு ஏதாவது சொன்னேனா? ஜாலியாதானே இருக்க ஆசைபடறேன்..நான் வெறும் முத்து, தங்கம், பவுனு..ச்சே..டக்குனு வரல..ஆங்... மாணிக்கம்..  பாட்சா காட்ட வைக்கறீங்களே...நியாயமாரே..