Tuesday, April 22, 2014

நன்றி குங்குமம் தோழி..

agnostic மண்டையும்
acoustic மண்டையும்
_________________________

அது ஒரு கொரியர் கலெக்க்ஷன் இடம்.
அங்கு இருந்த வயதானவரிடம் கோந்து வாங்கி ,
முகவரியை எழுதிக் கொடுக்கப் போனா..,
இந்த இருக்கையில் உக்காரும்மா என உக்கார வைத்து
மின்விசிறியைப் போட்டு ஏக வசதி செய்து கொடுத்தார்.

பிறகு ஹிந்துஸ்தானி இசை தெரியுமா என்று கேட்டுவிட்டு
பதிலுக்குக் காத்திராமல் பாடகர்களின் இசையை
யூ ட்யூபில் வழிய விட்டார்.
மெய் மறந்து க்யா பாத்..க்யா பாத்..
என்று கையைத் தூக்கி ரசித்த
அவரின் ரசனையை ஏனோ ரசிக்கத் தோன்றியது.

அடானா ராகம் ..அது ,இது என்று ஆரோகணத்துக்குப் போய்
பின் அவரோகணத்துக்கு வந்து
இசையை மேலே சுழலவிட்டு
கீழே தள்ளிவிட்டு என
நான் அங்கே இருந்த நேரத்துக்குள் ஏக இசை ரகளைகள்..

ஆனா பாவம்..
நான் இருந்த அவசரத்துல
என்னாலதான் எதையும் ரசிக்க முடியவில்லை.

பாடல்களைப் போட்டுவிட்டு
அப்பாடல்களைப் பாடிய பாடகர்களோடு
எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றையும்
ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் எனக்குக் காட்டினார்

என்ன செய்தும் என்ன செய்ய ?
என் அவசரம் எனக்கு..

\கடைசியாக வருகிறேன் என்று சொல்லும்பொழுது
அவர் சுழலவிட்ட கன்னட பக்திப் பாடல்கள் அனைத்தும் அருமை..
எனினும் உருகி, உருகி பக்தி செய்ய முடியாத
என் அக்னாஸ்டிக் மண்டையைக் குட்டிக் கொண்டேன்.
சற்றே குறை சொல்லிக் கொண்டேன்..

அப்புறம் முக்கியமான ஒரு விஷயம்..
அவருக்கு இசையையும், தன் இசை ரசனையும் பகிர்வதில் அத்தனை ஆர்வம்.
கூடவே பொக்கிஷமாகப் பேணி பாதுகாத்துவரும் அந்த
புகைப்படங்களையும்
யாருக்கேனும் காட்டி மகிழ வேண்டும்.

ஆனா இதையெல்லாம் கேட்கவும் பகிரவும் மனிதர்கள் வேண்டுமே.
ஹாங்....நல்ல ஐடியா
அதற்கு பேஸ்புக்தான் சரி..
அடுத்த தடவை போகும்பொழுது
அவரை ஒரு ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பிக்க
பரிந்துரைக்க வேண்டும்..

அப்போதுதான் நம்மைப் போன்ற மனிதர்களைப் பார்க்காமல்
தானுண்டு தன் ஜோலியுண்டு என
வெளியுலகே அறியாது
செல்பேசியில் இல்லாவிடில் கணினியில் மூழ்கி இருப்பார்.

No comments: