Sunday, October 12, 2014

விமர்சினம்..கிளாஸ் ஆப் ரவுடிஸ்..

கிளாஸ் ஆப் ரவுடிஸ் (Short Film - Class of Rowdies)
ஒரு ஏழு நிமிடம்..வாழ்க்கைகான செய்தியை சொல்ல முடியுமா?
அற்புதமா..மனதை கனக்க செய்ய முடியுமா?
சுவாரசிய மசாலா போல ஆரம்பித்து முடிவில் அழகான செய்தியை புதைக்க முடியுமா?
மாடர்ன் பள்ளி என்று நாம் அழைக்கும் பள்ளிகளில் bullyingபற்றி சின்ன ஷாட் ல் உணர்த்த முடியுமா?
ஒவ்வொரு குழந்தையின் விஷமத்தனத்துக்கும் பிறகு இருக்கும் திறமையை கொண்டு வருவதை எளிதான விஷயமாக்க முடியுமா?
இப்ப இருக்கும் ஆசிரியர்களின் ஒரு பக்கத்தை உணர செய்ய முடியுமா?
இதெல்லாம் ஏழு நிமிடத்தில் கொண்டு வர முடியுமா? முடியும்..
ஜா(சா)ரா சான்ஸே இல்லை..அமுங்கி கிடக்கும் சில்வியா பாத் மன நிலை குழந்தையை போல..கொஞ்சம் பயம் கூட வருகிறது..
அப்படியே கொஞ்ச நாளில் அந்த வகுப்பை மாற்றிய ஆசிரியையின் சாதனை..
அத்தனை பேரும் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள மறந்துவிட்டு அவர்களை நாலு சுவரில் அடக்கி வைத்து முடக்குவதால் எப்படி மாறுகிறது என்று விளக்கி இருக்கிறது படம்..
ஒரு புத்திசாலி மாணவனை, அவனுக்கு தெரிந்த விஷயத்தை அடக்கி வைத்து இதைதான் கத்துக்கணும் என்று சொன்னால் என்ன ஆகும் என்று அனுபவபூர்வமாக உணர்ந்தவள்..ஒரு மாணவன் இல்லை பலரை பார்த்து இருக்கிறேன்..
மாணவனிடம் கேட்பதே இல்லை..உனக்கு என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று..கற்றுக்கொள்ளலை அழகாக ஆக்க வேண்டும்..
ஒரு ராக்கெட் ஷாட் ல் அவர்களின் கற்றுக்கொள்ளும் சுதந்திரத்தை காட்டி பறக்க விடுகிறார்..
ஏழு நிமிடத்தில் தவறும் இருக்கு..எல்லாரும் பணக்கார மாணவர்களாக தோற்றம் அளிப்பதும்..சாரா கவிதை வாசிக்கும் பொழுது பின்னணி இசையும்..
ஆனால் மொத்தத்தில் அது பெரிய விஷயம் இல்லை..எல்லா பள்ளிகளுக்கு போட்டு காட்ட வேண்டிய படம்..முக்கியமாக ஆசிரியர்களுக்கு..கொஞ்ச நேரம் முன்பு நண்பர் சொன்னார்..கற்றுக்கொள்ள வேண்டியது மாணவர்கள் அல்ல ஆசிரியர்கள் என்று..நிஜம்.
படத்தை பார்த்து விட்டு மூன்று நிமிடமாவது மனம் கனக்கும்..கொஞ்சம் துளி சொட்டு கண்ணில் எட்டி பார்க்கும்..கமர்ஷியலாகவும் அழகு படம்..
மாற்றங்கள் வர வேண்டும்..இல்லாவிட்டால் வகுப்பின் சூழல்..நினைக்க பயமாக இருக்கு..
அட்டகாசமான படத்தை பார்க்க வைத்த ஓசை செல்லா க்கு நன்றி..

No comments: