Sunday, October 12, 2014

ஜன்னல் -2

ஜன்னல் கதை 2
நேசம் மைக் பிடித்து கத்திக்கொண்டு இருந்தது.."நேசியுங்கள், மனிதர்களை, மரங்களை, விலங்குகளை, இயற்கையை..நேசம் அற்புதமானது.. நேசமே மனதின் போதை..etc ...." உணர்ச்சிவசப்பட வைத்தது பேச்சால்..கூட்டம் நேசத்தின் மயக்கத்தில்..
கி,கி,கி,கி..மூலையில் சிரிப்பு..அவனை பார்த்த அவள்..ஏன் என்பது போல..வினாகுறி பார்வையில் பதில் தேடினாள்....கொஞ்ச நாளா நான் கொடுத்த போதை பேச வைக்கிறது என்றான்.. ஆவலாக இவள் நேசத்தை விட்டுவிட்டு திரும்பினாள்..
அவன் அமர்ந்த நாற்காலி, மைக், காலையில் தின்ன பிரியாணி, இப்ப குடிச்ச சோடா, சதுர அடி பத்தாயிரம் உள்ள இடம், தண்ணீர் ,கரண்ட்,மளிகை,EMI பில்கள், போட்டிருக்கும் உடை..முச்சா போக மூன்று ரூபாய் வரை நான் இருக்கும் போதை..என்று போக.....
நீ யார் என்றாள்..
நான் பணம்..ஒரு நாள் செல்கிறேன்..மைக் கில் என்ன சொல்கிறான் என்று கேள்..என்றான்..
இரு நான் உன்கூட வருகிறேன்..அவன் கதை நமக்கெதுக்கு நான் உன்னை நேசிக்கறேன்..என்று தோள் தழுவி பென்ஸ் ல் ஏறினாள்..
நேசம் சோர்வாக மைக் கில் விக்கி அழ ஆரம்பித்தது..
DOT

No comments: