Friday, October 17, 2014

புத்தக பூச்சி.

6174 ..
பார்க்க மிக எளிதாக கடந்துவிடும் ஒரு நம்பர்..ஆனால் இன்னும் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது..கப்ரேகர் கருஞ்சுழி எண்,,,,
எந்த நாலு இலக்க எண்ணையும் எடுத்துக்கொண்டு அதன் பெரிய எண்ணிலிருந்து சிறிது வரை எழுதி..சிறிதில் இருந்து பெரிது வரை எழுதி..கழிக்க வேண்டும்..வேறு, வேறு எண்கள்.
எடுத்துக்காட்டாக " 3141 "
பெரிதிலிருந்து சிறிதாக         4311
சிறிதில் இருந்து பெரிதாக    1134
                                                        ----------
      கழித்தால்                               3177 
அதையும் திரும்ப ஏற்றமாகவும், இறக்கமாகவும் எழுதி கழிக்க..
4311-1134=3177. 
7731-1377=6354. 
6543-3456=3087. 
8730-0378=8352. 
8532-2358=6174. 
7641-1467=6174.. 
இப்படி எந்த நாலு இலக்க எண்ணையும் செய்யும் வேளையில் 6174 என்ற இலக்க கருஞ்சுழியில் மாட்டிக்கொண்டு மேலே வராது..இதை கண்டுபிடித்தவர் இந்தியர் கப்ரேகர்..
                                             
    கேள்விபட்டு இருந்தாலும் இவ்வளவு எளிதாக கப்ரேகர் கருஞ்சுழியை யாரும் விளக்கியதில்லை..    
ஒரு நாவல்  எடுத்தால் கையை விட்டு போகும் வரை அதை சுற்றியே மனம் வர வேண்டும்..முதல் அஞ்சு பக்கம் படித்துவிட்டு ஏதோ பிக்சன் வகை போல என்று வைத்துவிட்ட நாவலை திரும்ப கையில் எடுத்தேன்..அப்படியே விறுவிறுப்பு பற்றிக்கொண்டது..ஒரே நாளில், ஒரே மூச்சில் நாவல் படித்து வருடங்கள் ஆகிவிட்டது.இந்த புத்தகம் காந்தம் போல கையிலும், மனதிலும் ஓட்டிக்கொண்டு  விட்டது..அதும் இல்லாமல் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது..
டான் பிரவுன் நாவல் படிக்கும்பொழுது  (நாமும் அப்ப அப்ப இங்கிலீஷ் பேர் சொன்னாதானே நாம் தமிழர்..அதுக்குதான் பில்ட் அப் ) மட்டுமே விக்கிபிடியா பக்கத்தில் வைத்துக்கொள்வேன்..இவர் நிஜமாகவே சொல்கிறாரா இல்லை புருடா, கற்பனையா என்று..அவரின் நாவலில் எது புனைவு, எது  நிகழ்வின் சாயல் என்று பிரித்து அறிய முடியாபடி பல facts உள்ளே ஒளிந்துகொண்டு இருக்கும்..
முதன்முதலாக தமிழ் புத்தகத்துக்கு விக்கிபிடியாவை அலச வைத்தார்..அதுவே முதல் வெற்றி..இந்த நிமிடம் வரை அதில் உள்ள இடங்கள், நிகழ்வுகள் பற்றி தேடி,தேடி படித்துக்கொண்டு இருக்கிறேன்.. சுதாகர் சார்..என் நட்பு வட்டத்தில் இருக்கும் உங்களை பற்றிய பிரமிப்பு இன்னும் விலகவே இல்லை..
லெமூரியா கண்டம், குமரி கண்டம் (இன்னும் ஆராய்ச்சியில்)அழிந்து போனது பற்றி தெரியுமா?
லெமூரியா மக்களுக்கு காது நீளம் அறிவோமா?
அது தமிழ்நாட்டின் ஒரு பகுதி..அது தெரியுமா?
அதற்கும் தென்னமெரிக்க மயன் மக்களுக்கும் உறவு உண்டா?
தமிழில் மணிப்ரவாள நடை, துள்ளல் நடை என்று செய்யுள்களை அழகாக நாவலுக்குள் புகுத்த முடியுமா?
மியான்மரை பற்றி என்ன தெரியும்?
எவ்வளவு பெரிய எல்லை..இந்தியாக்கும் அதற்கும்? ம்ஹூம் தெரியாது..இதில் கொடுமை என்ன வென்றால் என் தாத்தா பர்மா போய்விட்டு  போர் சமயத்தில் திரும்பி வந்தவர்...ஆனால் பர்மா தேக்கு தவிர வேறதுவும் நாமறியோம்...அரசியல் கூட..
பிரமிடு பற்றி அறிந்துவைத்து இருக்கும் நாம் பர்மா பகோடா கோவில்கள் பற்றி அறிவோமா?
கோலங்களில் உள்ள கணக்கு அளவீடுகள் , அதனில் உள்ள சிறப்பம்சம்..ம்ஹூம்..
லெமூரியா சீட் கிறிஸ்டல் சிறப்பம்சம்..
பழங்கால வரலாற்றில் அழிந்து போன சீலகந்த்மீன் இன்னும் உயிரோடு இருக்கும் அதிசியம்..(டைனோசர் காலம்)
இப்படி வரலாறு, புவியியல், அறிவியல், தமிழ் இலக்கியம், கணக்கு என்று ஒரு டிபார்ட்மென்ட் கூட விடாமல் அனைத்தையும் தொட்டு சென்று அதை அழகிய மசாலா தடவி பரிமாற முடியுமா? அதுவும் சுத்த தமிழில்..இவர் போன்ற ஆசிரியர்கள் வந்தால் எதையும் கற்றுக்கொள்ள முடியும் மாணவர்களால்..
சுஜாதாக்கு பிறகு வந்த நல்ல அறிவியல் விஷயங்களை தொட்டு செல்லும் நாவல்..
இன்னும், இன்னும் தேடி, தேடி படித்துக்கொண்டு இருக்கிறேன்..பகோடா பற்றி, மீன் பற்றி, குமரி கண்டம் பற்றி, தேவநேய பாவானார் பற்றி..எத்தனை விஷயங்கள் தெரியாமல் இருக்கிறது..
எத்தனை தமிழ் அறிஞர்கள் செயல்பட்டு உள்ளனர்..தமிழ் தொன்மையான மொழி என்பதை நிருபிக்க..
தமிழின் வரலாறு குமரி கண்டத்தில் இருந்து தொடங்கி இருக்கிறதாம் என்று செய்தி..
அமெரிக்கா, இந்தியாவில் பல இடங்கள்,  மியான்மர் என்று பயணம் விறுவிறுப்பாக செல்கிறது..
கப்பல், அணு ஆயுதம், விண்கல் , ராக்கெட், ஏவுகணை, ரஷ்ய அரசியல் .வட கொரியா என்று எதையும் விட்டுவைக்கவில்லை..
இப்படி படிக்க படிக்க பிரமிப்பை தூவிக்கொண்டே போகிறார் ஆசிரியர்..
ஒரு புத்தகம் படித்தால்  யோசிக்க, பேச வைக்க வேண்டும்..இது வைக்கிறது..
க்ளைமாக்ஸ் முடிந்தும் முடிச்சின் விளக்கங்கள் சொல்லி இருப்பது பழைய உத்தி ஆனாலும் விஷயமுள்ளததால் ரசிக்க முடிகிறது..ஆனால் யூகிக்க முடிந்த வாசகர்கள் தாண்டிவிட முடியும்..
ஆனால் நச் முடிவு....அடுத்த பாகம் வருமோ என்ற க்ளைமாக்ஸ்..
படித்துவிட்டு பகிர வேண்டிய புத்தகம்..இது தமிழுக்கு நல்வரவு..அழகும்..
வாழ்த்துக்கள் சுதாகர் கஸ்தூரி சார்..நல்ல வாசிப்புக்கு சந்தோஷமும்,நன்றியும்..
எல்லா மிதாலஜியும் கலக்கி ஒரே குடுவையில் பரிமாறப்பட்ட சுவையான காக்டெயில்..
இது போன்ற பார் டெண்டர்கள் தமிழில் இருந்தால்..தமிழ் போதையில் மூழ்குவது வாசகர்களுக்கு எளிது..

No comments: