Tuesday, December 2, 2014

காவியத் தலைவன்..

காவிய தலைவன்.. சினிமா..

போட்டியும்  பொறாமையும்  எந்த கோடில் பிரிகிறது?. கோடு அறியத்தான் முடியுமா..

எதனாலும் பிரிக்க முடியாத நட்பை பிரிக்கும்  விஷயம் எது.?

கலை, தொழில், காதல் நட்பில் செய்யும் பிரச்சனைகள் என்ன?

இதை வைத்துக்கொண்டு களம் புறப்பட்டு இருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்..

களம் பிரிட்டிஷ் கால நாடக காலம்..

அதிகம் மிகைபடுத்த வில்லை...

மீசையை முறுக்கி வீர வசனங்கள் இல்லை..


மனம் அதிரும் பல இடங்களில்..

இசையும் இசைந்தே இருக்கிறது...

கண் முன்னே நம்புமாறு பழங்காலத்தை  கொண்டு வருவது அத்தனை எளிதல்ல..

கதை இதற்க்கு மேல் வேகமாக சென்றால் அந்த காலத்தை ஒட்டி பயணிப்பதில் தடைப்படலாம்..

எப்பவும் வேகம், வேகம் என்று இல்லாமல்..கொஞ்சம் மெதுவாக, அழகாக ஒரு படத்தை ரசிக்க செய்யலாம்..

ஹேட்ஸ் ஆப் ..இந்த  படத்தை கொடுத்து துணிச்சலுக்கு..

மிக அதிக இடைவெளிக்கு பிறகு ரசித்த தமிழ் படம்..

கலர்புல் படமும்..சித்தார்த், பிரித்வி நடிப்பு பட்டையை கிளப்புகிறது..பொன்வண்ணன்..நாசர்..ஒருவரும் வீணாகவில்லை..

பிரித்வி இன்னும் மனசில் நிற்கிறார்..மிக இயல்பாக..நம் மனதை நமக்கே தெரியாமல் பிரிதிவியுடன் ஒப்பிட்டு கொள்ளும் அளவுக்கு மிக அழகான கேரக்டர் வடிவமைப்பு..

பொறாமை என்பதை கையில் எடுத்தால் கத்தி எடுத்த கதை..கத்தியை  எடுத்ப்பதை விட பொறாமையை எடுத்தவன் கதை மோசமாக போகும்..

அவனுக்கு வாழ்க்கை தொலையும் ..ஒரு நிமிடம் கூட தூங்க முடியாது..மிக பரிதாபத்துக்கு உரிவர்கள் இவர்கள்..ஆனால் மிக ஆபத்தனாவர்கள்..

நல்ல படம் தொடர்ந்து மனதில் ஓடும்..ஓடுகிறது காவியத்தலைவன்..

1 comment:

Avargal Unmaigal said...

இப்படி நல்ல விமர்சனம் எழுதினால் போதுமா? அதை பார்க்க டிக்கெட் எடுத்து அனுப்புங்க அல்லது திருட்டு டிவிடி வாங்கி அனுப்புங்க... அதை பார்த்துட்டு அந்த டிவிடியை உங்கள் பையனுக்கு அனுப்பி வைக்கிறேன்