Tuesday, April 22, 2014

அப்பா -3

அப்பா -3,

சின்ன குழந்தை அவளுக்கென்ன தெரியும் என்ற உறவினர்களின் கமெண்ட்ஸ்ஐ காதில் போட்டு கொள்ளாத அப்பா..

நாத்தாங்கால் என்று பெயர்..நாற்றுகள் ஒரு இடத்தில விதைத்து பிறகு அதை பறித்து உழவு செய்த வயல்களில் நடுவார்கள். கிராமங்களில் திருட்டு அதிகம். அதற்காக வண்டியில் நாற்று கட்டுகளை அனுப்பும் பொழுது பின்னாடி அப்பா என்னை அனுப்புவார் சில சமயம்.

குதித்து கொண்டு ஓடினாலும், சில சமயம் அலுப்பாக வரும். என்னப்பா இங்க எண்ணிட்டு அங்க எண்ணிக்க வேண்டியதுதானே அப்படின்னு கேட்டு இருக்கேன். ஒரு நாள் இதென்ன ஆட்கள் மேல நம்பிக்கை இல்லையா என்று கேட்க அப்பா சொன்னது....

"உன் பொருளை நீ கவனமாக பாதுகாத்து கொள்ளாவிட்டால் அது உன் பொருள் இல்லை..பிறகு அடுத்தவரை குற்றம் சொல்லுவதோ, பழி சுமத்துவதோ, வாய்ப்பு கொடுத்துவிட்டு திண்டாடுவதோ கூடாது..அப்படி உன்னால் முடியாவிட்டால் அந்த பொருளை மறந்துடனும் இல்லாவிட்டா கவலைப்படாம எக்கேடு கெட்டு போனா என்னன்னு விட்டுடனும்".

மாட்டு வண்டியின் பின்னால் சந்தோஷமாக போக ஆரம்பித்தேன்..

குழந்தைகள் காரணம் சொல்லாவிட்டால் காரியம் செய்யமாட்டார்கள்.

No comments: