Tuesday, April 22, 2014

அப்பா -19

அப்பா -19 

அடுத்து,அடுத்து.. உருகி,உருகி அப்பா பத்தி எழுதினா அப்பாவே வந்து ரொம்ப பீல் பண்ணாத,என்னை விட்டுடு, வலிக்குதுன்னு, அவ்வ்வ்வ்வ்வ்வ்...ன்னு அழுவார்..அதுக்காக அவர் செய்த ஜாலி குறும்புகள்.

அப்பா என்ஜினியரிங் படிக்கும் பொழுது ஹாஸ்டலில் இருந்தார். எப்பவும் ஹாஸ்டல் லைப்ல ஷேரிங் மற்றும் கேரிங் எல்லாம் பக்காவா இருக்கணும். அது இல்லாத பசங்களை ஒதுக்கி வச்சுடுவாங்க..அப்பா சொல்வது பதினாறு வயது வரைதான் வீட்டில் இருக்கணும் அப்புறம் ஹாஸ்டல் லைப் கண்டிப்பா வேணும்.அங்க போய் பலதரப்பட்ட பழக்கங்கள், மனிதர்கள் பார்த்து நிறைய கத்துக்கணும். அது ரொம்ப முக்கியம் பிறகான வாழ்க்கைக்கு என்று கூறுவார். அது போலவே எங்களையும் வளர்த்தார். அது மிக முக்கியம் என்று பல சமயங்களில் உணர்ந்து இருக்கேன்.

இவங்க ரூம் மேட் ஒரு பையன் பாவம்..எதுவும் தெரியாது. எதுவும் ஷேர் செய்வதில்லை. ஏதாவது வீட்டில் கொடுத்தால் ஒளித்து வைத்து சாபிடுவானாம். அவருக்கும் இப்ப அப்பா வயசு..வசதிக்காக இப்ப பையன் என்றே சொல்லுகிறேன். எல்லா பொருட்களையும் ஒளித்து வைத்து கொள்ளும் வழக்கம் இருந்து இருக்கு..எதையும் ஷேர் செய்வது இல்லை..

இது அதிக நாட்களாக இந்த பசங்களுக்கு கடுப்பாக இருந்து இருக்கு.இவர்கள் பொது பேஸ்ட், சோப்பு கூட பொதுவில் வைக்கும் பொதுவுடமை கொள்கைவாதிகள்..தனிவுடமையை கண்டால் கோவம்தான் வரும்..அவசரத்துக்கு பேஸ்ட் கேட்டு இருக்காங்க..அப்பா காலத்தை பொருத்தவரை பல்பொடி டு பேஸ்ட் காலமாற்றம் அடைந்து கொண்டிருந்த நேரம்..பேஸ்ட் எல்லாம் முக்கியமான பொருளாக கருதப்பட்ட காலம். (இப்ப இம்போர்டட் காஸ்ட்லி perfume போலன்னு வச்சுக்கலாம் ) அவன் பேஸ்ட் காலி என்று சொல்லி இருக்கான்.

அவன் போனப்புறம் அவன் பையை தோண்டி பார்த்தால் புத்தம்புதிய பெரிய பேஸ்ட் இருக்கு.இத்தனை நாள் கடுப்பு..காலையில் பேஸ்ட் இல்லாத கோவம் எல்லாம் சேர்ந்து பேஸ்ட் எடுத்து ரூம் முழுக்க கோலம் போட்டு வச்சு இருக்காங்க..போட்டுட்டு சத்தம போடாம கிளம்பியாச்சு.

உள்ளே வந்து பார்த்தா இவன் பேஸ்ட் காணும்..ரூம் முழுக்க பேஸ்ட் கோலம். பசங்களை கோவமா கூப்பிட்டு இருக்கான். டேய் ஏண்டா என் பேஸ்ட் ஐ எடுத்து கோலம் போட்டிங்கன்னு..

டேய்..என்னடா சொல்ற..உன்கிட்டதான் பேஸ்ட் இல்லையே..நாங்களே ஒரு பட்டாணி அளவு பேஸ்ட் இல்லாம கஷ்டப்பட்டோம்..யாருடா நம் ரூமை அசிங்கம் பண்ணி வச்சது..அப்படின்னு இவர்களும் சேர்ந்துகொள்ள..அவன் அவன் கொஞ்சம் யோசித்து திருந்த ஆரம்பித்தான்..

சரிப்பா அப்புறம் ஷேரிங் செஞ்சானான்னு கேட்டேன்..ஆமாம்..ஏண்டா திருந்தினான்ன்னு ஆயிடுச்சு..சட்டை, பேன்ட்ன்னு எடுத்து போட ஆரம்பிச்சிட்டான்.கடசில உள்ளாடைகள் கூட விட்டு வைக்கல..நிலைமை மோசமா போச்சுன்னு சொன்னார்..

இங்க அப்பா என்ன சொல்ல வந்தார்? நான் என்ன கத்துகிட்டேன்?.. ..இந்த கதையின் கருத்து என்னனு யாராவது கேட்டா..கெட்ட கோபம் வந்துடும்..ஆமா...

ஏன்னா..கதைக்கு கால் கிடையாது..

No comments: