Tuesday, April 22, 2014

அப்பா-12

அப்பா-12..

ஒரு முறை ஏதோ இறப்புக்கு போயிட்டு வந்து ஒரே சோகம்..அம்மாவும், அப்பாவும் புத்திர சோகம்..கொடுமைன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க..

அப்பாக்கிட்ட ஊஞ்சல ஆடிகிட்டே கதை கேக்கறது வழக்கம்..ஏம்பா புத்திர சோகம் அவ்ளோ கொடுமையாப்பா?

ஆமாம்..எந்த கஷ்டம் வந்தாலும் தாங்கிடலாம்..புத்திர சோகத்தை மட்டும் தாங்க முடியாது..ஒரு கதை சொல்றேன் கேளு..

ஒரு தடவை புத்தன்கிட்ட ஒருத்தன் ஆசிர்வாதம் பண்ணுங்க சாமின்னு கேட்டு இருக்கான்..

அதுக்கு புத்தன்,"முதல்ல உங்க தாத்தா சாகணும், அப்புறம் உங்கப்பா சாகணும், நீ சாகணும், அப்புறம் உன் புள்ளை சாகணும்..இதான் ஆசிர்வாதம்..உனக்கு மட்டுமல்ல, உன் குடும்பத்துக்குன்னே"....

அதுக்கு அவனுக்கு செம கோவம்..நீயெல்லாம் சாமியா..ஆசிர்வாதம் பண்ண சொன்னா சாபம் விடறன்னு கோவத்துல கத்தி இருக்கான்..

புத்தன் அமைதியா இந்த வரிசையை எந்த இடத்துலே வேணாலும் மாற்றி பாரு..அப்புறம் புரியும் கொடுமைன்னா என்னன்னு சொல்லி அறிவுக்கண்ணை திறந்து வைக்க அவனுக்கு புரிஞ்சது..

அப்புறம்தான் அதன் கொடுமைன்னா என்னனு புரிஞ்சது..அது நமக்கும் வந்துடுமோன்னு பயப்படற கட்டம் ஒரு முறை அப்பாக்கும், எனக்கும் வந்தது..

தொடரும்..

No comments: