Friday, September 7, 2018

பெண்ணின் காதல்.

" அபிராமி...இந்த விஷயத்தை தொட மனமில்லை. ஏன் என்றால் . கொலை, தற்கொலை எதற்காகவும் சமூக வலைத்தளத்தில் ஆதரித்தோ, எதிர்த்தோ எழுதக்கூடாது என்பது என் முடிவு.

அனிதா விஷயத்திலும் மவுனமே காத்து வந்தேன். அந்த தற்கொலை தியாகபடுத்தி அதீத செய்திகள் வந்தால் மேலும் பல மாணவர்களை கையில் எடுக்க தோன்ற வைக்குமோ என்ற பயம் உண்டு. நமக்கு தெரியாத ஒரு அதீத சக்தி எழுத்துக்கு உண்டு. அதற்கு உண்மையாக இருக்க வேண்டும்.

அபிராமியிலும் மவுனத்தை எடுக்க விரும்புகிறேன். ஆயிரம் இருந்தாலும் கொலை அளவுக்கு உச்சம் தொடும் பொழுது அதை நூறு சதவிகிதம் எதிர்க்கிறேன். 

இந்த சமயத்தில் சில விஷயங்கள்..domestic abuse பற்றிய விழிப்புணர்வு. முகநூல் வரும் பல பெண்களுக்கு வார்த்தைகளாம் நடப்பது. 

ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப பேசும் பொழுது அது உண்மையாகி விட சாத்தியமுண்டு. 

நீ ஃபேஸ்புக் வந்திருக்கிறதே சாட் செய்யவும், ஆண்களுடன் பழகவும் என்ற பார்வை பல ஆண்களுக்கு இருக்கு. ப்ரொஃபைல் எதுக்கு மாத்தனும்? ஆண்களிடம் லைக் வாங்கி அவர்களை இம்ப்ரஸ் செய்யவே..என்றும் எதுக்கு எப்போ பாரு வாட்ஸ் அப் .யார்கிட்டயோ பேசிக்கிட்டுருக்கா இப்படியும்..

ஆண்கள் இதற்காகவே வலை வீசுவது நடக்காமல் இல்லை. சிறு பாராட்டு கூட இல்லாமல் உழைத்து, சலித்து எந்த recognition ம் வீட்ல கிடைக்காத பெண்களுக்கு லைக்ஸ் கூட பெரும் வரமாய் தோன்றுகிறது. சில சமயம் அது அடிமை படுத்தும் விஷயமாகவும்..அதற்காக எதை வேண்டுமானலும் செய்து எழுதுவது..

அதாவது செய்ததை எழுதி லைக்ஸ் வாங்குவது வேறு...இதற்காகவே எதையாவது செய்து எழுதுவது..எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி..கூட்டங்களில் பங்கெடுப்பார், பிரபலங்களை சந்திப்பார்..எல்லா இடத்திலும் செல்ஃபி. தமிழில் எழுதி வாங்கி பதிவார்..அவருக்கு லைக்ஸ் கொடுக்கும் சுகம்..அதற்காக ஒரு அடி அதீதமாய் எடுத்து வைப்பார்..அவருக்கு அதுதான் மகிழ்வாக இருக்கும்..பெண்களுக்கான சமூக அழுத்தங்கள் எளிதில் புரியாது.

ஏதாவது ஒரு விதத்தில் ஆணுக்கு அங்கிகாரம் .அல்லது அதிகாரமாவது கிடைக்கும். அதிகாரமும் இல்லை..அங்கிகாரமும் இல்லை.உழைப்பும், பிள்ளை வளர்ப்பு..கூடுதலாய் நாகரிக வளர்ச்சியில் சக மனிதனின் வார்த்தைகளற்ற தனிமை வேறு..இணையம் தவிர வெளி நட்புகள் குறையும் பொழுது தனிமையின் ஆபத்து அதிகரிக்கிறது.

இதில் துணையின் வார்த்தைகள். சில  ஆண்கள் இப்பொழுதெல்லாம் பல கெட்ட வார்த்தைகளை மனைவி மீது பிரயோகிப்பதை கேள்விப்படுகிறேன்.எதுக்குடி வாட்ஸ் அப் ல அப்படி போஸ் தரன்னு ஒரு மனைவி கணவன் கேட்டதாய் சொன்னாள்.

இதுப்போன்ற விஷயங்கள் நடக்கும் பொழுது பொருளாதர, சமூக சுதந்திரம் அவசியம் தேவை. ஒரு பெண் பத்து, இருவது வருடம் வீட்டில் இருக்கிறாள். கேரியர் வளர்த்துக்கொள்ள கண்டிப்பாக சாத்தியமில்லை. காமம் பெண்ணுக்கும் இருக்கும்தானே...அந்த சமயத்தில் ஏதோ தவற வேண்டியிருக்கு. அப்பொழுது தன் தவறை உணர்ந்து சரி செய்திட ஆணுக்கு இருக்கும் வாய்ப்பு பெண்களுக்கு கிடையாது. அதாவது ஆண் மனைவிக்கு தெரியாமல் ஏதாவது செய்துவிட்டால் ஒரளவுக்கு மன்னிப்பு கிடைக்க வாய்ப்புண்டு ..திருமண பந்தத்தில் சீட்டீங் மிகப்பெரிய தவறு ..ஆனால்   இந்தியாவில் நடப்பெதெல்லாம் மனமொற்றிய திருமணமா என்ன? 

சிறு வயது திருமணம் கூட தவறுதான். இன்னும் என்னால் எல்லாம் அந்த அழுத்ததில் இருந்து வெளியேற , மன்னிக்க் முடியவில்லை. விவரம் தெரியுமுன்னே குடும்பம் .பிறகு குழந்தை. உலகமே குழந்தையோடுதான் பார்த்தேன் எனலாம் அது வரை பள்ளி,  கல்லூரி மட்டும்தான். நாலு இடம் போய் .சம்பாதிக்க அல்லல்பட்டு..தன் காலால் தானே நிற்கும் சுதந்திரம் பெண்களுக்கு இங்கு தருகிறோமா? சுயம் எந்தளவுக்கு கற்றுத் தருகிறோம்? 

காதலில் கூட பக்குவமாய் இருக்க வேண்டும் என ஏதாவது பேசுகிறோமா? எதிர்பாலின இனக்கவர்ச்சி ஐம்பது வயதில் கூட நடக்கிறது  என்பதை அறிவோமா? 

அதுமட்டுமல்ல..இணையம், உலகம், விளம்பரம், சினிமா எல்லாவற்றிலும் அதீத காமம் நிரம்பி வழிகிறது. இளைய சமூகத்திற்கு காமம் ஒரு சிறு விஷயம்.அதை தாண்டி அற்புத உணர்வுகள் உண்டு என்று உணர்வோமா?

ஒரு ஆண் நண்பர்..அவருக்கு காமம் மிக முக்கியமாய் இருக்கும். அதைதாண்டி அவருக்கு உலகம் இருக்கு என்று உணர்த்த முயற்ச்சித்தேன்..ஆனால் உலகமே அவருக்கு அதுவாக ஆனது. ஆண், பெண் ஈர்ப்புதான் உலகில் எல்லாம் என்பதை தீவிரமாக நம்புகிறார். ஏன் என்றால் அவருக்கு கற்பித்த உலகம் அது. 

நாலு நண்பர்களோடு மகிழ்வாய் இருக்க தெரிந்தவர்களுக்கு காம இச்சை கூட பிறகுதான்..மாதக் கணக்கில் சமூக சேவையில் ஈடுபட்டு இருக்கும் சுகம், குழந்தை வளர்ப்பில் ஒரு சுகம் .அதையெல்லாம் விட திறமை வளப்படுவதுதான் சுகம்  என்னைக் கேட்டால் நாள் முழுக்க இதுப்போல எழுத சொன்னால் சோறு தண்ணியில்லாமல் எழுதுவேன்..இதுப்போல் உலகில் பிறந்த அனைவருக்கும் தன்னை மறக்குமளவுக்கு ஏதோ ஒரு திறமை ஒளிந்திருக்கும்.

சச்சினுக்கு கிரிக்கெட், ஸ்ரீதேவிக்கு நடிப்பு, கமலுக்கு சினிமா , ஸ்டெபிக்கு டென்னிஸ் இதுப்போல இவர்களின் flow சிறு வயதிலியே தெரிந்து அதில் மட்டும் ஈடுப்பட்டனர்.  இந்த flow எப்படி இருக்க வேண்டும் என்றால் தானும் உலகம் மறந்து அதில் முழ்கி உலகமும் அதனால் ஈர்க்கப்படும். அகாஸ்டியின் டென்னிஸ் பந்துகள் பறக்கும் பொழுது அதை தவிர  கண் எதயும் பார்க்க விரும்பாது..அதுதான் அழகான flow energy.. இதற்கு முன்னால் காமம் எல்லாம் சிறு விஷயம்.

ஆம் இயற்கை உடலுக்கு இரு பசி அளித்துள்ளது. உடற் பசி அதீதமாவதும், அதற்கு உணவளிக்காமல் நீண்ட நாள் இருப்பதும் தவறுதான். அப்பொழுதுதான் அது தன் தேடலை ஆரம்பிக்கும். அப்பொழுது தவறுகள் நடக்க் அதீத வாய்ப்புண்டு
 என்னைக் கேட்டால் விபச்சாரம் என்ப்தை பொதுவாக்கி..அந்தப் பசி ஏற்பட்டால் ஹோட்டல் போய் சாப்பிடுவது போல் விடுதிக்கு அதாவது பாலின வேறுபாடு இல்லாத , மனதுக்கு பாதிப்பு இல்லாத, வெறும் உடல் பசி தீர்க்கும் விபச்சாரம். அவ்ளோதான்..பிறகு குளிச்சிட்டு ஹப்பாடா.முடிச்சிட்ட்டோம். வேலய் பார்க்கலாம் போன்ற ஒரு விபச்சாரம்..ஆம் இது இருபாலாருக்கும் பொதுவில் இருக்கும் உணர்வு..இருவரும் தீர்த்துக்கொள்ள சுதந்திரமும். அவ்ளோதான்..அதுக்கு மேல் காமத்தில் பேச ஏதுமில்லை.

மிக மிகச்சிறு விஷயத்தை ..அதாவது காலை உணவுப்போல அது இரவின் உடலின் உணவு..அதைபோய் புனிதம், லொட்டு, லொசுக்கு என்றுப்போய். பெண் உடலை அதீதமாக்கி அவளை உடலுக்காக ஆகா, ஓகோ என்று சொல்லி.
அவள் திறமைகளை மேலே வராமல் முடக்கி.. அவள் உடலே பிரதானம்..அதுக்காக என்ன வேணா செய்யலாம் என்று தேவையில்லாமல் போற்றி..நிஜமா வடிவேலுப் போல் ஷ்ப்ப்ப்ப்ப்ப்பா..முடில என்று தோன்றுகிறது.


சமிபத்தில் ஒரு கேள்வி பதில் இணையத்தில். பெண் ஆணை கற்பழிக்கும் வாய்ப்பு இருக்கா என்று...அதற்கு ஒரு ஆண்..அந்த கொடுப்பினை எல்லாம் எங்களுக்கு இருக்கா என்ன என்று பதில் ..நகைச்சுவையாக இருப்பினும்..காமம் என்பது ஆணுக்கு மகிழ்வை மட்டும் தருவதாகவும்..பெண்ணுக்கு அத்து மீறல், வலி போன்றவையாகவும் இருக்கு. அதில் புனிததையும் வேறு போர்த்தி..தேவடியா, கெட்டுப்போனவ, ஏமாத்துக்காரி என்ற பட்டங்கள் கொடுக்கவும் தவறுவதில்லை..இந்தப்பக்கம் போற்றல். அந்தப்பக்கம் தூற்றல்..வசவெல்லாம் பெண் சார்ந்த வன்முறை சொற்கள்..அம்மா, அக்கான்னுட்டு ச்ச்சேய். எப்படா சக மனுஷியா பார்ப்பீங்கன்னு அலுப்பு வருது.  

ஒரு ஆண் பிரபலம்..அவரோட லைக் எல்லா பெண்களின் புகப்படத்திலும் இருக்கும்
 அவள் எழுத்தில், திறமையில் கவனம் வைக்கும் ஆண் மிக குறைவு. அதை ஊக்கபடுத்தும் ஆண்களும் பசுத்தோல் போர்த்திய புலியாகவே வல்ம் வருகிறார்கள் இப்படி எல்லாத்திலும் காமத்தை, உடலைப் போற்றுவதை மட்டும் பார்க்கும் பெண்கள் அதற்கு விட்டில் பூச்சியாக மாறும் வாய்ப்புண்டு 

போகும் வேகத்தில் கணவன், மனைவி ரொமான்ஸ் என்பதையே தொலைத்துவிட்டோம். காதல் என்றாலே அது கணவன் மனைவிக்கு இல்லை என்றாகிவிட்டது போன்ற ஒரு காலகட்டத்தில் உள்ளோம்.  உறவு என்பதை டேக் இட் கிராண்டட்..என்று மிக அலட்சியப்படுத்துகிறோம்.பெரும்பாலும் பெண்களுக்கு அதிகம்..ஆணுக்கு வெளி உலகம் இருப்பதால் இதில் இருந்து தப்பிவிட வாய்ப்புண்டு. . 

இணையத்துணை, ஆபிஸ் துணை அல்லது இணையவர். ( இணையத்தில்  இணைந்ததால் :) )  என்னுமளவுக்கு ஆண், பெண் நட்புகளை இங்கு காண்கிறேன். சரியா , தவறா இதெல்லாம் புரியாத காலமாகிவிட்டது. அது குடுமபதை பாதிக்காதவரை சரி..அது அதீதமாவதும் பிர்ச்சனைதான்.  அதைதான் கள்ளக்காதல் என்று தினம் தந்தியும், பூவும் கொச்சைப்படுத்தி பெரிதுப்படுத்துகிறது. டாய்லெட் கதவை திறந்து பார்க்கும் அசிங்கம்தான். அடுத்தவரின் அந்தரங்கத்தை திறந்து பார்ப்பதும். எங்கும், எதிலும் பெண்ணுடலை மட்டும் மையப்படுத்தி..அவளை மட்டும் அசிங்கப்படுத்தும் சமூகமா மாறிவிட்டோம்.

மாணவர்களுக்கு போன அக்சஸ் போல் திறமை ஊக்கப்படுத்தும் அக்சஸ் செய்துள்ளோமா? காமத்தை மலிவாக்கியது போல அறிவியலை, கணிதத்தை, கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை சந்தோஷமாக்கி கொடுத்துள்ளோமா?  வாசிப்பதில் ஆர்வம் உள்ளவனுக்கு , ஆராய்ச்சியில் , விளையாட்டில் , சம்பாதிப்பதில் முனைபவர்களுக்கு காமம் பார்ட் டைம் கூட இருக்காது..ஜஸ்ட் லைக் தட் கடப்பார்கள். பெண்களுக்கும் இதை பொதுவாய் வைக்கிறேன்.

ஆம் காமம் தாண்டி .திறமைகளை கண்டெடுக்கும், வாசிப்பை அதிகப்படுத்தும், சமூக சார்ந்த செயல்களுக்கு தயார்படுத்தும் பணி மிக அவசியம் ..அப்பொழுதுதான் குழந்தைகளுக்கு அழகான நாட்டை நாம் உருவாக்கி தர முடியும் . அதைதான் நாம் ஒவ்வொரு செயலிலும் செய்ய வேண்டும். அதுவரை காமத்தை பேசுவதை கூட குறைத்துகொள்ளும் அவசியத்தில் உள்ளோம்.

Tuesday, April 17, 2018

விலங்குளால் விலங்கில்...பெண்

"இணையம் முழுக்க வன்புணர்வு , பாலியல் செய்திகள். தொலைகாட்சி திருப்பினால் பேராசிரியை குரல். செய்தி தாளில் வன்புணர்வு  இல்லாத நாள் குறைவு. பெண் என்பவள் நதி, தெய்வம் , தாய், புனிதம் லொட்டு , லொசுக்கு என்று பெயர்தான் ..பிறக்கும் முன்பே இன அழிப்பு அபார்ஷன்...இன்றும் நடக்கிறது. ஸ்கேன் செண்டர்களில் சட்டம் கடுமை என்பதால் வெளிநாட்டில் கூட போய் ஸ்கான் செய்து கொல்லும் அவலம். 

அதில் இருந்து தப்பி பிறந்தால் கள்ளிப்பால். அப்படியா..இக்காலத்திலுமா என்றால் இணையம் செல்லவும். இந்தியாவில் மட்டுமில்லை..சீனாக்கு 2500 வருட வரலாறு..அங்கு தண்ணி குடுவை. பெண் என்பவளின் நிலைமை எப்படியெல்லாம் வரலாறு பேசுது. பாகிஸ்தானிலும் வழக்கம் உண்டு. 

அதற்கும் தப்பி பிழைத்தால் சுற்றி வளைய வரும் பீடோஃபைல் எனும் கயவர்கள் ..அடுத்து சொந்த் பந்த அத்து மீறல்கள் ..இதியாவில் ஒரு பாலியல் தொடுகை கூட சந்திக்காத் பெண் குழந்தை இல்லை என்றே சொல்லலாம். வன்புணர்வு பள்ளியில் வீட்டில் மிரட்டலில் என்று பல்வேறு விதமாக பாயும்.  இங்கு ஆப்ரிக்க நாடுகளில் பாலியல் உறுப்பு அறுக்கும் அவலம், சீனாவில் காலை நசுக்கும் அவலம், ஒரு ஸஹரா பாலைவன நாட்டில் குண்டுதான் அழகு என்று வலுக்காட்டாய உணவு சித்திரவதை..அதாவது இருவது லிட்டர் ஒட்டக பால், இரண்டு கிலோ வென்னையுடன் மாவு இது சாப்பிடாவிடில் இரு மரப்பலகை கிடுக்கியில் விரல் நசுக்கப்படும்.  

இதிலும் தப்பித்தால் வயது பெண்.டேட்டிங் செல்லும் நாகரிக சமுதாயம் ஒரு பக்கம் கதற அடிக்கும் என்றால் கல்லூரியில் விலை பேசும் ஆண்கள், வேலை செய்யும் இடத்தில்...ஈவ் டீசிங்கில் இறந்த சரிகா ஷா மறக்க் முடியாது. இன்ஸெஸ்ட் எனப்படும் சொந்த்ங்கள் மூலம் சூறையாடப்படுவது. அடுத்து இள வயது கட்டாய  திருமணம். பாலியல் பலாத்காரம். 

அதை தவிர மாதவிடாய் கொடுமைகள். எந்தக் கொடுமையை எழுத ..விட்டு விட..கட்டாய கல்யாணம்..வல்லுற்வு திருமணம், இன்னும் சில நாடுகளில் பெண் கடத்தி திருமணம்.. இஸ்லாமிய நாடுகள், இந்தியா உள்பட கவுர்வக்கொலைகள் அதற்கும் வன்புணர்வு..சாதிய கொலைகள், டவுரி எரிப்புகள், கொடுமைகள், கணவன் செய்யும் பாலியல் பலாத்காரங்கள், அடி , அசிங்க பேச்சுகள்..அடிக்கிற கை அணைக்கும் என்ற பழமொழி வேற..லூசுங்க 

உலகில்  பெண் கொலைகளில்  38% கணவர் மூலமாகத்தான் நடை பெறுகிறதாம். இங்கு குடும்ப அமைப்பு என்பது பெண்ணுக்கு மிகப்பெரிய எதிரியாகவும் உருவாக்கப்பட்டுள்ள து. அபார்ஷன் , பிள்ளை பெறல் , குடும்பக்கட்டுபாடு அனைத்திலும் சர்வ சாதர்ணமாக அத்து மீறல் கட்டாய விபச்சாரம் , கடத்தல் ஒரு பக்கம் என்றால் போர்னோ கிராபி ..குளிப்பதில் இருந்து பல விதமாய்..கட்டாய போர்ன் வன்முறை நவீன வடிவ வன்முறை ..ஆனால் மறைமுகமாக எடுத்து வெளியிடுவது வேறு வகை. பல பெண்கள் தற்கொலை வரை போகிறது போர்ன் பிரச்சனை. இணையம் வந்தாக் ஆகா ஓஹொ என்று பேசி மயக்கி படுக்கை அழைக்கும் அல்லது ரகசியமாய் வன்புணர்வு செய்ய பெருங்கூட்டம். அதை தவிர் முகம், கால் என்று ஒன்றுவிடஃமல் புகைப்படம் பார்த்தே கிளர்ச்சி அடையும் கூட்டம். பேசி பேசி ஆன்லைன் போர்னுக்கு வலை விரிக்கும் கூட்டம் ..கவிதை , அன்பு , காதல் , நேச்ம் என்று பெயரிட்டு காரியம் ஆகி கை கழுவி தற்கொலை வரை தூண்டும் நவின வன்புணர்வு குற்றங்கள் ..

போர், கூட்ட்ம், மாப் வெறி , குடி , பழங்குடி மக்கள் , போலிஸ் , ஆர்மி என்று இன்னும் இன்னும் பெண் மேல் அவிழும் கொடுமைகள் முடிவே இல்லை. 

ஆஸிட் வீச்சு , காதல் கொலை எல்லாம் இன்னொரு பக்கம் 


படித்தா சரியாகும்னா துணை வேந்தரே படுத்தா ..கொடும் அவலம்.

கல்வி என்ன அளித்துள்ளது? பள்ளியில் ஆசிரியர்கள் மேல் பல புகார்கள்..இதில் உலகத்தில் அதிகம் பதியப்படாத உலகுக்கு வெளிவராத் கொடுமைகள் பாலியல் வன்புனர்வுதான்..

கல்லூரிகளை விபச்சார கூடங்கள் ஆக்க மும்முரமாக வேலை செய்கிறார்கள்..பட்டம் பெற்ற கல்வியாளர்கள். 

ஆணை எப்படி வளர்க்கிறோம்? நாகரிகமான ஆண் என்றால் பெண்ணை துளியும் வேறுபடுத்தி பார்க்கக்கூடாது. சக மனுஷியாக ஒவ்வொரு இடத்திலும் பார்க்க தேவை. பாலியல் கல்விகள் தேவை. கடவுள் பற்று குறைந்த ஆனாள் மனித நேயத்தில் மேம்பட்ட பல் நாடுகளில் கற்பழிப்பு மிக குறைவு.

யூ.என் செய்திப்படி உலகில் எந்த மதம், கலாச்சாரம், நாடு எதுவும் பெண் சமத்துவத்தை முழுமையாக வழங்கவில்லை. இன்னும் நூற்றாண்டுகளிலும் இதான்..

இதற்கு என்ன விடிவு? பெண் சம உரிமை மட்டுமே!! 

ஒவ்வொரு தலையும் பிறப்புறுப்பு மூலமே வந்துள்ளது . தான் வந்த இடத்தை சிதைப்பதில் என்ன மகிழ்வு கிடைக்கும்? பால் குடித்த உணவுக்கான இடத்தை  ..என்ன சொல்ல வார்த்தை வரல..பொய்யான எதோ ஒன்றை தேடியே இக்குற்றங்க்ள். ஆண்மை என்பதன் அர்த்தமே அறியாமல் மன நிலை பிறழ்த செய்ல்கள்.  எல்லாருக்கும் சட்டம் இருக்கு..ஆனால் எதையும் தடுக்க முடியவில்லை, சந்தர்ப்பம்  கிடைத்தால் மூன்றில் ஒரு ஆண் ஏதாவது ஒரு வடிவ ரேப் செய்ய தயாராக இருப்பதாய் சைக்காலஜி ஆய்வு சொல்கிறது

புக்கர்  டி வாஷிங்டன் up from slavery வாசிக்கிறேன். பல் தேய்த்து , உடுத்தக் கூட தெரியாத மாற்று நிற மனிதர்கள் அடிமையில் இருந்து மீண்டு வந்த நிஜக்கதை. சுத்ந்திரம் வந்தும் பல அடிமைகளுக்கு என்ன செய்ய என்று தெரியாமல் அடிமையாகவே இருக்க சில்ர் முதலாளி களிடம் கேட்டார்களாம்..படித்து, பெரும் பத்வி வந்தும் சம உரிமை இல்லை. இங்கு அவர்கள் போராடடம் சமூகம் நோக்கி அல்லது முதலாளிகளை நோக்கி...ஆனால் பெண் விடுதலை என்பது வேறு வடிவம்..

எனவே எழும் நேரத்தில் எல்லாம் பாசம் காட்டி முடக்கப்படுகிறாள்.. 

பெண் என்பவள் பெற்றவனை, சகோதர்களை, கணவனை, மகன்களை என்று தன் உரிமைகள் நோக்கி பேச் வேண்டி இருக்கு. குடும்ப பெண், கலாசாரம் போன்ற  சொற்களால் தன்மானம் இழக்கிறாள். . எதிர்த்தால் வெளி உலக பயம்..இல்லாவிடில் அடிமை வாழ்வு..எது சரி..பறவைகளை பறக்க விடு என்றால் பல கழுகுகள்..அதற்காக கொடும் துணையுடன் அல்லது இல்லாமல் கூண்டில் என வாழ்வு. ஆக மொத்தம் ஒவ்வொரு பெண்ணை சுற்றியும் கூண்டு., அவள் காலம் காலமாய் அன்பை அளித்து இப்போது தன் உரிமைக்காக கூண்டை விட்டு விட் விரும்புகிறாள்..அடிமை என்பதை அன்பு என்று சாயம் பூசும் குடும்ப அமைப்பு..அதில் பிறக்கும் வன்முறைகள் .,யாரை எதிர்த்து என்ன சாதிப்பாய் என்றை கேள்வியில் திரும்பவும் அடிமைத்தன் சுழ்ளில் சிக்குவாள். இங்கு பெரும் அளவில் மன மாற்றம் தேவை. 

இங்கு இதையெல்லாம் மாற்ற பெண் என்ன செய்ய வேண்டும்?

மதம் அடிமை படுத்தினால் அதை எதிர்த்து பலமாய் குரல் கொடுக்க வேண்டும், கலாச்சார பெயரில் என்றால் அது தேவையே இல்லை, குடும்ப அமைப்பு என்ற பெயரில் கட்டியபோடடால் அப்புறம் பார்த்துக் கொள்வோம் அதையெல்லாம், முதலில் வேண்டியது விடுதலை என்போம், நாட்டின் பெயரால், மொழியின் பெயரால், இனத்தின் பெயரால் , அமைப்பின் பெயரால் பல வடிவங்களில் வரும்..முதலில் தேவை சம உரிமை பிறகு அமைப்புகளை கவனிப்போம், சமுகத்தை புதிதாய் சமமாய் கட்டமைப்போம் என்று போராடும் துணிவு ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை. அமெரிக்கன் சிவில் வார் மூலம், பேருந்தில் சமாய் உக்கார வைக்காத ரோசா பார்க்ஸ் மூலம், மார்டின் லூதர் கிங் மூலம் அடிமைகள் உரிமை பெற்றனர். ஆனால் நமக்கான போராட்டம் யா செய்வார்? எப்படி செய்வார்? நாம்தான்..ஒவ்வொரு அடக்கு முறையும் எதிர்க்க வேண்டும்..சொல்லால் செய்யும் வன்புணர்வுகள், செயலால், அமைப்பால் என்று எல்லாவற்றையும் எதிர்க்கும் துணிவு வேண்டும். பெண் மேல் கை  வைக்க பயம் வேண்டும். அதற்கு ஆணின் துணை வேண்டும். 

விலங்குகளை துரத்த நாம்தான் விலங்குகளை உடைக்க வேண்டும். காப்பாற்ற யாரும் வரமாடடார்கள். ஒரு நாள் வேண்டுமானால் முகநூலில் துணை பதிவு போடலாம். தன்னம்பிக்கை, வேலை, கல்வி , உழைப்பு இவற்றை எக்காரணம் கொண்டும் கைவிடக் கூடாது. எக்காரணமும் முன்னிட்டும்  பொருளாதாரத்தில் வலுவாக இருக்க வேண்டும். கல்வியும், வேலை வாய்ப்பு, பொருளாதாரம் இருந்து கேள்வி கேக்கும் விழிப்புணர்வு வந்தால் சுதந்திரம் பற்றி பேசலாம். 

எதையும் விட தன்மானம் மிக முக்கியம் என கருத வேண்டும். நம்மை மாற்றிக்கொள்ளாமல் ஆணை சமமாக நடத்து என்று நாம் சொல்ல முடியாது. துணிவாய் சமமாய் இருக்க முயற்சிப்போம். பிறகு ஒவ்வொன்றையும் எதிர்த்து செயல்பட வேண்டும். நம் வீட்டின் ஆண்களுக்கு நாம் அடிமையில்லை என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணர்த்தும் பொழுது நாடு முழுக்க ஆண்களுக்கு ஆண்  என்றால் பெண்ணை சமமாய் நடத்துவது என்பது புரியும். அது நடந்தால் மட்டுமே பாலியல் வான் கொடுமைகள் குறையும். சக மனிதராய் மதிக்கும் வேளையில் கொடுமை செய்யும் மனம் வராது. 

அது வரை காதல், பிரியம் , நாணம் எல்லாம் ஒதுங்கி வழி விடட்டும். பொருளாதாரம் ஆம் சரி சமமாய் வேலை வாய்ப்பில் உயரத்தால், தன்மானத்தோடு வாழ் குரல் கொடுத்தல் என இருந்தால் வர்றியா என்று கேக்கும் ஒவ்வொரு ஆணையும் ஒதுக்கி வைக்கலாம். கேவலமாய் பார்க்கலாம். அவன் நம்மை உபயோகிக்க முடியாது, போகப் பொருள் இல்லை என்பதை மனதளவில் உணர்த்த வேண்டும். ஆண்  பேசினால் மயங்க கூடாது. ஆம் என் குடும்பம்தான், என் காதல்தான், பிரியம்தான் ஆனால் இன்றைய தேவை என் சுதந்திரம் , தன்மானம் என்று குரல் உயர்த்த அவசியம் உள்ளது/ சட்ட்ங்கள் சட்ட்ங்களாய்தான் இருக்கு. ஆனால் எந்த பெண்ணும் அதை தொட தைரியம் இல்லை. 

உலகெங்கும் பெண்ணுக்கு எதிரான வன்முறைகள் மட்டுமே மிக குறைந்த சதவிகிதத்தில் பதியப் படுகிறது.  ஐம்பது சாதிவிதம் மேல் கண்ணுக்கு தெரியாத வன்முறைகள். எப்படி நிறுத்த போகிறோம்?

பள்ளிக்கு அனுப்பினால், கல்லூரிக்கு அனுப்பினால் , வேலைக்கு அனுப்பினால் என்று கேள்வி கேட்டுக்கொண்டு முன்னேற விடாமல் ஓர் பகுதி செயல்படும்..ஆம் கல்லூரிக்கு அனுப்புவேன் ..அங்கு நடைபெறும் அசிங்கங்களை தட்டி கேக்கும் துணிவை ஏற்படுத்துவேன். ஆம் வேலைக்கு செல்வேன் தட்டி கேப்பேன் என்று நாடு முழுக்க இயக்கமாய் செயல்படும் பொழுது நம்மில் மாற்றம் வரும்.  நம்மை சக மனிதராய் மதித்தல் நடைபெறும். இல்லாவிடில் ஊருக்கு ஒரு தாலிபான் இயக்கம் ஏற்பட்டு இடுப்பில் தார் பூச தயாராய் இருக்கும்?

எதை தேர்ந்தெடுக்க போகிறோம்? சிறகுகளாயையா  அல்லது கூண்டையா? எனக்கும் இக்கேள்வியை கேட்டுக் கொள்கிறேன்..நாளை என் பெண்களுக்காய் தாய்மையுடன். 

எனக்கு ஒரு கனவு..

என் பெண்களும் , ஆண்களும் அரசியலில் ஒரே இடத்தில் 

என் பெண்களும், ஆண்களும் பாதுகாப்பாய் பயணம் செய்வது 

என் பெண்களும், ஆண்களும் ஒரே இனமாய் மதிக்கப்படுவது 

என் பெண்களும் ஆண்களும் உலகம் முழுக்க கல்வி 

என் பெண்களும் , ஆண்களும் வாழ்வை தேர்ந்தெடுக்கும் சரி சம வாய்ப்பு 

இரவு நேர பயணம், பொருளாதார சுதந்திரம், சரி சமமாய் குடும்ப அமைப்பு. 

எனக்கு ஒரு கனவு இருக்கிறது. 

ஆணும் பெண்ணும் சமம் எனும் காலம் காண..

Wednesday, September 7, 2016

பிள்ளையார் சுழி.

                                                                           ௨
                                                                           =
பிள்ளையார் சுழி.

எனக்கு ஒரு சந்தேகம். சிறிது தீர்த்து விட்டு செல்லுங்கள்.

நம் பாரம்பரியத்தை குழந்தைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. ஊருக்கு அழைத்து செல்வது, அங்குள்ள வழக்கங்களை அறிமுகப்படுத்துவது, திருமணங்கள் பற்றி சொல்வது , வீட்டில் பூஜைகள் செய்யும்பொழுது பழைய முறைகளை கதைகளாக சொல்வது, தமிழில் அதிகம் பேசுவது பழைய விளையாட்டுகள் சொல்லிக்கொடுப்பது போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகம்.

திடீர் என்று ஒரு காகித தாளை எடுத்து எழுத ஆரம்பித்தப் பொழுது வழக்கம் போல ௨ அதாவது பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பித்தேன். இதற்கு ஒரு வரலாறே உண்டு. திடீரென்று யோசனை.. பசங்களுக்கு என்ன என்னவோ சொல்லிக் கொடுத்து இருக்கேன், பரம்பரை, பரம்பரையாக போடும் சுழியை மறந்து விட்டேன்.

முதன் முதலில் எம். எஸ். வோர்ட் டைப் அடிக்கும் பொழுது ௨ க்கு கீழே இரண்டு கோடு போட்டு டாலர் சைன் போல பிள்ளையார் சுழி சைன் வைத்தால் என்ன என்று திட்டிய ஆள் நான். இப்பொழுதோ எங்கு விட்டேன் அந்த பழக்கத்தை? வருடணக்காக பிள்ளையார் சுழி போடாமல் எழுதி இருக்கிறேன் என்பது நேற்றுதான் உறுத்தியது. எப்படி மாறினேன்!!!!!!

ஒண்ணாவது படிக்கும் பொழுது பிள்ளையார் சுழி இல்லாத நோட்டோ அல்லது புத்தகமோ என்னிடம் இல்லை. அது ஒரு மத சடங்கு போல தீவிரமாக பின்பற்றும் விஷயம். நாத்திக வாதிகள் கூட பிள்ளையார் சுழி போடும் வழக்கம் உண்டு. கர்நாடகா வந்து அவர்களும் பிள்ளையார் சுழி போடுவார்களா என்று தேடி இருக்கிறேன்.

சிவன் ஒரு போருக்கு சென்று தோற்றுவிட்டார் எனவும்..கடவுளே போரில் தோற்ற காரணம் தேடியப் பொழுது..மகன்தானே என்று அலட்சியமாக பிள்ளையாரை வணங்காமல் சென்றதே என்ற காரணம் அறிந்து மறுநாள் மன்னிப்பு கேட்டு பிள்ளையாரிடம் சொல்லிவிட்டு அவரின் ஆதரவோடு சென்று வெற்றி பெற்றார். எனவே எதைத்தொடங்கினாலும் பிள்ளையார் வழிபாடு இல்லாமல் தொடங்க கூடாது என்ற ஐதிகம் உண்டு. சைவ, வைணவ சாமிகள் இருந்தாலும் மந்திர பூஜைகளில் மஞ்சள் பிள்ளையாருக்குதான் முதல் இடம். புல் அடிச்சிவிட்டு பிள்ளையார் முன் ஆட்டம் போடுபவர்கள் கூட பிள்ளையார் கும்பிட்டு ஆரம்பிப்பதை இன்று விநாயகர் ஊர்வலத்தில் கண்டறிந்தேன்.

இப்படி புராண கதைகள் கேட்டு பிள்ளையார் சுழி இல்லாமல் எழுதினால் அது சரியான தொடக்காமக இருக்காது என்று உணர்ந்து அந்த பழக்கத்துக்கு அடிமையானது வேறு கதை.. செக் புக்கில் நிரப்பி, கையெழுத்து போடும் பொழுது கூட ௨ கீழே இரு கோடுகள் ஆட்டோமேடிக்காக போட்ட கதையும் உண்டு.

எங்கள் சொந்தங்களில் சிலர் கார்டில் நுணுக்கி, நுணுக்கி எழுதி இருப்பர்.. ' ௨' சுழி, ஸ்ரீராமஜயம் இல்லாமல் எழுதி இருக்க மாட்டார்கள். சில அந்தக்காலத்து தீவிர ஒழுக்கம் கற்பிக்கும் பெரியவர்கள் பிள்ளையார் சுழி இல்லாத கடிதங்களை திருப்பி அனுப்பிய கதைகளும் உண்டு. பிள்ளையார் சுழி இல்லாத பேப்பர்களை காணவே முடியாது. இப்போது பிள்ளையார் சுழிகளை நினைவுக்கூறலுக்கு கொண்டு வந்து விட்டோமோ??!!!.

எங்கே விட்டோம் என்று யோசிக்கும் பொழுது..முதன் முதலில் வட இந்திய முறையில் பெரிய பிள்ளையார் சிலை வைத்து கடலில் கரைக்கும் பொழுதா என்று சந்தேகம் வந்தது..நாம அப்போவே கிணற்றில் கரைச்சு இருக்கோம்..எனவே மெரினாவில் அந்த சுழியை விட்டு இருக்க முடியாது என்ற தீர்மானம் வந்தது. பிறகு...அப்பா, அம்மா, அக்கா,தோழிகள், நண்பர்கள் எல்லார் கடிதத்திலும் நீக்கமற இருந்தது, பிறகு ஆபிஸ் லெட்டர் பேடுகள், கணக்கு புத்தகங்கள் எல்லாவற்றிலும் வந்தது..நடுவில் தொலைத்த பிள்ளையார் சுழி...ஆங் இந்த ப்ளாக், ஃ பேஸ்புக் வந்தப்பிறகு தொலைத்து இருக்கிறேன். மனிதன் மாறிவிட்டான் என்ற BGM இப்போ மனசில் ஒலிக்கிறது.

பேனா எழுதி பார்க்க, இங்கு ரீபில் பண்ண, பென்சில் கூர்ப்பு செக் செய்ய எல்லாவற்றுக்கும் உதவியாக இருந்தது பிள்ளையார் சுழியே. இரட்டை சுழி தலையில் இருந்தால் அதிர்ஷ்டம் என்று சொல்லுவார்கள். ஆனால் தலைப் பகுதியில் பிள்ளையார் இல்லாமல் எதுவும் தொடங்கியதே இல்லை. இல்லாவிடில் இரவில் சிவன் தோற்றது கனவாகவே வரும்.

இப்படியெல்லாம் வாழ்வில் ஒன்றாக இணைந்த ஒன்றை இழந்ததுக் கூட எப்போ நினைவுக்கு வந்தது தெரியுமா..டிராக்டர் பின்னாடி அபார்ட்மென்ட் பிள்ளையாரை கரைக்க செல்லும்பொழுது ஆடிக்கொண்டே பார்த்தேன்..மூன்று பட்டை விபூதி..திடிரென்று பிள்ளையாருக்கு ஏன் பிள்ளையார் சுழி போடாமல் வெறும் மூன்று கோடுகள் போட்டு உள்ளார்கள் என்று மண்டையில் பிளாஷ் அடித்தது. இப்படிதான் காரணமே இல்லாமல் சில விஷயங்கள் மண்டைக்குள் உதிக்கும். ஐன்ஸ்டீன் க்கு உதித்தால் ஆராய்ச்சி மேதை என்பார்கள்..நமக்கு உதித்தால் வேற வேலை இல்லையா என்பார்கள். இதான் உலகம்.

சரி..ஆங் பிள்ளையார் சுழியை விட்டு விட்டு சுழன்று போகிறது மனசு..ஒவ்வொருவரும் ஒரு ஸ்டைல் வைத்து இருப்பார்கள் இதற்கு. ௨ போடும் விதம்..சிலரர் அலை அலையாக போடுவார்கள். ஒரு அக்கா ரிகார்ட் நோட்டில் செம்பருத்தி பூ அத்தனை அழகாக இருந்தது. அதை விட அந்த பிள்ளையார் சுழியை படமாகவே வரைந்து இருந்தாள். முழு மார்க் அதற்கே கொடுக்கலாம். இப்பொ போல FB மார்க் இல்லாத காலம் என்பதால் சுழிக்கு நிறைய வேலைபாடுகள் எல்லாம் செய்ய நேரம் இருந்தது. இரண்டு  போட்டு..இரண்டு  கோடுகள்  போடுவதில்  கூட  எவ்ளோ  இருக்கு எழுத..தீராமல்.

கையெழுத்து ஜோசியம் போல பிள்ளையார் சுழி ஜோசியம் ஆரம்பித்து இருப்பார்கள்.. அதற்குள் அது குறைந்து விட்டது. எனக்கு ஒரு சந்தேகம்..எம்.எஸ். வோர்ட் ல பிள்ளையார் சுழி ஏன் போடுவதில்லை?

இன்னும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் பிள்ளையார் சுழி போடும் வழக்கம் இருக்கிறதா?

என் பையனுக்கு சொல்லிக்கொடுத்தால் எங்கு போடுவான்?

Tuesday, August 30, 2016

நினைவிடுக்கின் எச்சம்..உணவு.

காலையில் ஒரு ஆர்கானிக் பால் வாங்குகிறேன் என்று   தோழி  சொன்னது  என் நினைவுகளை சிறிதல்ல நாள் முழுக்க  வேலி இடுக்கு   கோழி  போல  கிளறிவிட்டது.

சேவல்  சத்தம்  வருமுன்  கோனார் குரல் ஒலிக்கும்..கோனார் வர நேரமானால் பாட்டி எண்ணெய் கிண்ணத்தோடு கிளம்பிடுவார். நன்றாக மாடு காம்புகளில் எண்ணெய் தடவி கைகளால் வழித்து இதமாய் காலிடுக்கில் சொம்பு வைத்து பால் பீச்சுவது ஒரு வேடிக்கை என்றால் கோனார் சர் சர் என்று இரண்டு லிட்டர் பாலை ஐந்து நிமிடத்தில் கறந்து அவர் தினம் கொண்டு வரும் நாகத்தகடு கேனில் இருந்து வீட்டு பாத்திரத்தில் ஊற்றி விட்டு வேகமாக சைக்கிளில் செல்வது ஒரு கலை..சைக்கிளில் அவர் வீட்டில் கறந்த பால் கேனில் இருக்கும். இதுக்கு காவலுக்கு குட்டிஸ் போகணும். பழகிய கோனாராக இருந்தால் அவரே கறந்து வைத்துவிட்டு போய்விடுவார்.

அடுத்து வாரா வாரம் மாடுகளை குளிப்பாட்டும் கொண்டாட்டம். வீட்டில் இரு  மாடுகள்., லக்ஷ்மி, சரஸ்வதி..அதில் லக்ஷ்மி சேப்பு மாடு, சரஸ்வதி கருப்பு மாடு..மிகவும் சாது. அதுதான் மிக அழகு..ப்ரெண்ட்லியாக இருக்கும். லக்ஷ்மி பொல்லாது அதன் அருகில் போக மாட்டோம். வைக்க பிரிதான் நார்,பிரஷ்...சோப்பெல்லாம் இல்லை..அதை வைத்து உடம்பு முழுக்க தேய்த்து குளிப்பாட்டுவோம். பால், தயிர், வெண்ணை , நெய், திரட்டுப் பால், பால் அல்வா எதுவும் காசு கொடுத்து வாங்கியதில்லை.

அடுத்து கொல்லைக்கு செல்லும் வைபவம். எங்கள் வீட்டில் கழிவறை அம்மா திருமணத்தின் பொழுதே காட்டினார்களாம். பெண்கள் தண்ணீர் தூக்கி கொண்டு கஷ்டப்படக் கூடாது என்று வீட்டிற்கு உள்ளேயே தாத்தா கிணறு வெட்டி வைத்து இருந்தார். (சிலர் அதுக்கு கூட பெண்களை வெளியே அனுப்ப மனமில்லாமல் உள்ளே வெட்டினார் என்று சொல்லியும் கேட்டேன்)

தாத்தா  வீடுகளில்   கொல்லைப்புறம் போவோம். மிகச் சிறு வயது.  புகை மூட்டமாய்   நினைவுகள். FM ல்ந் ஐந்து  நிமிடத்திற்கு ஒரு முறை கழிவறை கட்டு என்று வரும் மோடி விளம்பரம் தேவையா என்று தோன்றும்.. ஏன் என்றால் கழிவறை கூட இயற்கைக்கு எதிரானதே. நீர் அதில் விரயம் அதிகம். அதை கழித்துக் கட்ட சாக்கடை என்று ஒன்று உருவாயிற்று. அந்தக் காலத்தில் வீட்டு கழிவு சாக்கடை அப்படியே மரங்களுக்கு விடப்படும்.. மலம் போன்றவைகள் மண்ணோடு மக்கி உரமாகி விடும். சாக்கடை என்று தோன்றியதோ அப்போவே கொசுக்களும் அதற்கான மோசமான வியாதிகளும் உருவாக தொடங்கியது. ஆனால் நகர்புறத்தில் அது இல்லாமல் சாத்தியமில்லை. கிராமத்தில்  சாக்கடை  வாய்க்கால், ஆறுகள்  இல்லாதது  கூட  ஆரோக்கியத்தின்  ஒரு  அம்சம். நேற்று  கேட்ட கி.ரா  பற்றிய  எஸ். ரா  உரையில்  கிராமத்தில் புகும்  காற்று   எந்த பக்கத்தில்  இருந்து  வந்தாலும்  இந்த  வாசனையை  தொடாமல்  வர  முடியாது  என்று கி.ரா எழுதியதாக  குறிப்பட்டு இருந்தார்.  ஏன் என்றால்  அந்த  ஊரில்  ஒரு  பக்கம்  பெண்கள்  ஒதுங்குவதும், ஆண்கள்  ஒரு  பக்கம்  ஒதுங்குவதும்  உண்டாம்.  இதெல்லாம்  வாழ்வின்  ஒரு  அம்சமாய்  இருந்ததை   குறிப்பிட்டு இருக்கிறார். 

அடுத்து குளியல்..பெரும்பாலும் ஆறு, குளம், கிணறு. கை  பம்புகள்  லேட்டஸ்ட். துணி  தோய்ப்பதும் அங்கேயே முடிந்துவிடும். ஆண்கள் துறை, பெண்கள் துறை தனியாக  உண்டு. பாட்டி வீட்டுக்கு அருகில் காவிரியின் துணை ஆறு நாட்டாறு..அங்கு போனால் குளியலே கொண்டாட்டம். தண்ணீர் இல்லா காலங்களில் வெயில் கொதிக்கும் மணல்தான் விளையாட்டு கூடம். சமிபத்தில் சென்ற பொழுது ஆறு மணல் அள்ளப்பட்டு கோரமான ஓட்டை பனியன் போல காட்சி அளித்தது. ஒரு முறை தண்ணிர் பாய்ந்த பொழுது சென்றோம்..குளித்துவிட்டு உடம்பு முழுக்க ஒரே அரிப்பு. சேறு, சகதி..மணலே இல்லா ஆறு, பிளாஸ்டிக் பைகள் , சாக்கடை கலந்த நீர்..
அடுத்து இப்போ போல உடை கலாசாரம் பற்றியெல்லாம் தெரியாது. என் இரு பாட்டிகள் சட்டை போட்டதே இல்லை. ஸ்லீவ் லெஸ்.. எங்காவது வெளியே சென்றால் லேசாக போர்த்திக் கொள்வார்கள். மிக கம்பீர ஆளுமைகள்..அவர்கள் வைத்தது சட்டம. வீட்டில் புளி குத்துவது, துடைப்பத்திற்கு தென்னங்கீற்று கீறுவது, கொல்லைப்பக்கம் களிமண்ணில் அடுப்பு கையால் செய்வது, உளுந்து உடைப்பது, துவரை சரி செய்வது, அரிசிக்கு கல் பொறுக்குவது, கருப்பு உளுந்து களைவது போன்றவை அவர்களே செய்வார்கள்.

தேங்காய் காய வைத்து எண்ணெய் ஆட்டுவது, எள் எடுத்து அல்லது வாங்கி நல்லெண்ணெய் ஆட்டுவது, எது மீந்தாலும் வற்றல் போட்டு விடுவது, வடகம் அப்பளம் போன்றவை செய்வது, மாவடு பொறுக்கிக் கொண்டு வருவோம்..அது ஒரு பெரிய முதுமக்கள் தாழி போன்ற ஜாடியில் போட்டு வைக்கப்படும். ஒரு வருடம் கழித்து புது மாவடு வரை வரும். சென்னை சொந்தங்களுக்கு குடுத்து அனுப்பப்படும்.

ஆங் எங்கே விட்டேன்..அடுத்து  பல் விளக்குதல்..கோபால்  பல்பொடி இன்றைக்கும் அதன் ரோஸ் நிற சுவை நாவில் மெலிதாக நிரடுகிறது. காலையில் பாட்டிக்கிட்டே போனால் கோபால் பல் பொடியின் மெல்லிய நறுமணம் இருக்கும். அதை ரகசியமாக சாப்பிட்டு கூட இருக்கேன். பேஸ்ட் கெமிக்கல் எல்லாம் இல்லை. ஆற்று, குளத்து  பக்கம்  வேப்பங்குச்சி  பிரஷ்  தேய்ப்பு  வைபவங்கள்  தினம்  நடக்கும்.

அடுத்து காபி போடும் நிகழ்ச்சி... நல்ல தரமான கொட்டைகள் மாயுரத்தில் இருந்து  வந்துவிடும். அதை கருப்பாக வறுத்து மூன்று நாட்களுக்கு சேமிக்கப்படும்..ஒரு வாரம் மட்டுமே. திரும்ப புதிதாக வறுக்கப்படும். அதை காபி மெஷின் கையால் சுத்தணும். காலை ஐந்து மணிக்கு டூர், டுபுக், டூர் டுபுக்,,சக் என்று ஒரு விசித்திர இசை காபி மெஷின் எழுப்பும். கையால் பாட்டி லாவகமாக சுழற்றுவது பார்த்து ஆசையாக சுழற்ற போவேன்..என் உயரத்துக்கு அது குரங்கு பெடல் சைக்கிள் வித்தை போல இருக்கும்..அலுப்பு பட்டுக்கொண்டு ஓடிவிடுவேன். ஆனால்  அது  ஜெர்ரி  சீஸ்  மணத்தில்  மிதந்துக்  கொண்டே  போவதுப்  போல  அந்த  மணத்தில்  மிதந்துக்  கொண்டே  போய்  பாட்டி  காபி  எனக்  கேக்கலாம்..அத்தனை  திடம்  அந்த  நாசியை  இழுத்த  வாசம்.
அதில் பிததளை பில்டரில் டிகாஷன் இரக்கப்படும். அதுவும் வீட்டின் ஹைரார்ச்சி விதிப்படி வரும். திக் டிகாஷனில் தாத்தாக்கு அப்பா செல்லம் எனவே அப்பாக்கும் கொடுக்கப்படும்..இருவருக்கும் நுரைப்பால், முதல் கள்ளி சொட்டு டிகாஷனில் காபி, அடுத்து டிகாஷன் கீழே நிரம்ப பத்து நிமிடம் ஆகும். அடுத்து நமக்கு வரும்..பெண்களுக்கு அடுத்து நீர் ஊற்றிய டிகாஷன்..பெரிய பாட்டிக்கு யாரை பிடிக்கவில்லையோ அவர்களுக்கு தண்ணியாக மூன்றாவது நீர் ஊற்றிய டிகாஷன். இந்த கொடுமைக்கு சில சமயம் ஆளாவது சின்ன பாட்டியாக இருப்பார். இந்த காபி போடுவது என்பது கிட்டத்தட்ட தலைமை பதவி போல. கடைசியாக வேலை செய்பவர்களுக்கு. அந்த காபி பொடி சகல நிவாரணி போல பல் தேய்க்க, பாத்திரம் விலக்க என்று பல விஷயங்களுக்கு பயன்படும்.. ரீ சைக்கிள் ஆகாத விஷயங்களே அந்தக் காலத்தில் இல்லை.


இன்னும் வரும்.

Saturday, June 25, 2016

கவிதை எழுதுவது எப்படி?

கவிதை  எழுதுவது  எப்படி?   கவிஞ்சர்  ஆவது  எப்படி?

ஒரு  அனுதாப  பயணம்.

எல்லாரும்  கவிதை  எழுதறாங்க..நேற்று வந்த  ஸ்டேடஸ்  போடக்கூட தெரியாத  கத்துக்குட்டிகள்  கூட  கை மீறி  தொகுப்பு  வெளியிடும்  அளவுக்கு  போய்..தன்னலம்  பார்க்காமல் ஐந்து  வருடங்களாக  ஃபேஸ் புக்கில்  புகழ்பெற்ற   அஞ்சு பைசாக்கு  பிரயோஜனம்  இல்லாத  தன்னாலவர் வேலை  செய்யும்  நாம் முழிச்சிக்க  வேணாமா?

கவிதை  என்றாலே  காதல்தான்..அதுக்கு  முதல்ல பிடிக்க  வேண்டியது. நிலா..

காதல்  சிச்சுவேஷன்.. லிஸ்ட்  எடுத்தேன்.
நிலா
ரயில்
மலை.
மழை
(இப்படி சொன்னா  டோரா  சொல்ற  மாதிரியே  இருக்கே..நண்பர்களே  எங்கே திருப்பி  சொல்லுங்க) கவிதை  முக்கியம்.

நம்பர்  ஒன் நிலா..(மூணுக்கு  ஏன்  ஒண்ணுக்குனு சொல்றேன்னு  இந்த  மைன்ட்  வாய்ஸ் ..இத   கண்ட்ரோல்  செய்யணும்)
வெளியே  போய்  எட்டி  பார்த்தா  வெள்ளையா தகடு  போல  கொஞ்சம்  ஆங்காங்கே  மேடு  பள்ளத்துடன்  இருக்கு.. இதுல போய்  ஈர துணி  போல  கவிதையை  போய் பிழி  பிழின்னு  பிழியாறாங்களே  எப்படின்னு  யோசிச்சேன்..

ஆங்  நமக்கு தூர பார்வை வேணும்னு பிளானிடோரியம்  போய்  டெலஸ்கோப்பில் நிலாவை  பார்க்கப்  போனேன்.  ஒரு  மணி நேர  கியூ..சுத்தி என்ன  என்னமோ  பேசாறாங்க..  ஏங்க  கவிதைகள்  பற்றி  பட்டிமன்றம்  செய்யறீங்களா என்று  கேட்டேன்..உடனே  நோ, நோ..this year Indian  astronomers  may step up in moon..We r discussing about the advantages and disadvantages of moon mission from India..

அப்போ  இது  கவிதை  மிஷன்  இல்லையா..என்று  கேட்டுவிட்டு  பதில்  பார்க்காம  நிலாவை பார்த்துக்கிட்டே  வந்ததுல தடுக்கி விழ்ந்து  முகத்தில்  சிவப்பு நிலா.. லிஸ்ட்ல  நிலா அடிக்கப்பட்டது.

ரெண்டு  ரயில்.

சரி  ரயில பத்தி  கவிதைன்னு பேனாவும், பேப்பருமா ரயில்வே  ஸ்டேஷன்  போனேன்..ரயில்  பயங்கர  சத்தம்..அதுவும்  இல்லாம நிலையம்  முழுக்க ஒரே  முட்டு முட்டாய் கழிவுகள்.. நாத்தம்  வேற.. மூக்கை  பிடிசிகிட்டு  ஓடி வந்துட்டேன். ரயிலும்  கூன்னு லிஸ்ட்லேர்ந்து  ஓடிடுச்சு.

மூணு..மழை..
(குழந்தை ஒன்னுக்கு  அடிக்கிறாப்ல  விட்டு விட்டு  பெய்யுது..கவிதையாம்ல..மைன்ட்  அ  கழட்டி  தட்டி வைக்கணும்)
ஆடி  பார்த்தேன், ஓடி  பார்த்தேன்..நனைந்து  பார்த்தா  செம குளிரு..பல்லு தந்தி  அடிக்குது..சரின்னு கொண்டு  போன பேப்பரை வேஸ்ட்  பண்ண்ணாம போட்  செய்து விட்டு விட்டேன்..மழை  வரப்ப..பஜ்ஜி சாப்பிட்டு வடிவேலு  போல  மழை  கவிதை பேப்பரை எண்ணேய்  எடுக்கத்தான்  வருது..கவிதய  மழைக்குள்  நுழைந்து  தேடினா கூட கிடைக்கல்..

நான்கு..  மலை  பிரதேசம்(டோரா  வாய்ஸ்)
.  ஊட்டி  போகும் சான்ஸ்  வந்துச்சு...விடுவேனா..ஒஜு  குளிர்  கண்ணாடியில்  ஒஜு  என்று  எழுதினான்..ஆக   வந்துடுச்சு  வந்துடுச்சு  என்று  கத்தினேன்..

வீட்டுல  லேசா  கண்ணு திறந்து  பார்த்து  வந்தா போ..ஏன்  கத்தற என்று  திரும்ப  குமபகர்ணன் மோடுக்கு..போக..இனிமே கும்ப  ராசி  நேயர்களை  கல்யாணம் செஞ்சுக்க கூடாது  என்று அவசரமா  தீர்மானம்  போட்டேன்..

சரி  கவிதை  மிஷனை  விடவே  கூடாது..

"குளிரும்  கண்ணாடியில்
உன் பெயர் செதுக்கினேன்
பூத்திருக்கிறதே
அடடே'

   எப்படி  ஒரு  காதல் கவிதை..என்னை  நானே  மெச்சிக்கொண்டே  பயங்கர  சந்தோஷமா ஒரு  பக்கிக்கு அனுப்பினேன்.. அது  என்னை  கன்னாபின்னா  என்று  திட்ட  அப்படியே  வடிந்து விட்டது.
முயற்சி உடையார்  இகழ்ச்சி  அடையார்  என்று  வேதாளம்  தேடி கிளம்பினேன்..ஒரு  விக்கிரம்மாதித்தியளாய்..

சரி..காதலுக்கு  என்ன வேண்டும்  ...ஆகா..அது  ஒரு உணர்வு..அதானே  வேணும்..அது  இல்லாம  எப்படின்னு  ..சரி  எப்படியாவது  காதலிக்கனும்னு  முடிவு  எடுத்துட்டேன்.. 

"காதலிக்கணும்"..வார்தையிலையே  காதலி  இருக்காளே..ஆகா..கவித..கவித.
காதல் பீல்..  கொண்டு வந்து  கொண்டு  வந்து   நாம  ஹாப்பிலி  எவர்  ஆப்டரா  ஆயிட முடிவு  செய்தேன்..நாம்தான்  பீல்  மேல்  ஆச்சே..

நேரா  போய்..டேய்  டேய்  என்றேன்..யார்  இது  என்ன  மரியாதை  இல்லாம..பேசறே..இல்ல.இப்படிதான்  பேசணுமாம்  ..சின்ன  பசங்க  சொன்னாங்க  என்றேன்..சரி  சரி  வேலைய  பாரு என்று  கிளம்பிவிட்டார் ..என்ன  பார்க்கிறது..

ஆங்..அடுத்து ரொமாண்டிக் லுக். பார்த்து  பார்த்தே  கவிதை  எழுதணும்..ஒரு  கவிதைத் தோழி  எழுதியிருந்தா.."குறைந்தபட்சம்  உன்னை கவிஞர்  கூட  ஆக்காவிடில் என்ன  காதல்  அது" ..(Sridevi Ramya) என்று..இன்னொரு  தோழியோ.."இந்த அன்பு காதலை கூட   கொண்டு வராவிடில்  என்ன அன்பு"   என்றாள்..இந்த   கோட்  லாம் நல்லாத்தான்  இருக்கு..இனிமே  காலை  வேளையில்  கத்தாம  காதலோடு  பார்க்கணும்..பாவம்  இன்னும்  அன்பா இருந்தா அது  வந்துடும்..நாமும்  கவிதையா  போட்டு  ஐநூறு  லைக் வாங்கிடனும்..என்று  தீர்மானம்..
அடுத்து  ரொமாண்டிக்  லுக்..கண்ணாடி  முன்  நின்று  தினமும்  பிராக்டீஸ்  செய்ய  வேண்டும் என்று  வித  விதமாய்  பார்த்தேன்..கண்ணில்  காதல்  வழிய  ஒரு  பார்வை  எனக்கே  பிடிக்க  நானே  கண்ணாடியை  பார்த்து திருஷ்டி கழித்து..அடியே  ராசாத்தி  உன்னை  பார்த்தா உனக்கே  காதல் வரும்..போ  போ..இந்த லுக்கோட போனா பீல்  வந்து  பீல்மேல் கவிதைதான்..அடுத்த வருஷம் தொகுப்புதான்..விழாக்கு  அந்த கவிதை பிரபலத்தை  கூப்பிட்டா   ஆயிரம் பிரதி  கியாரண்டி..(அவரோட  புத்தகமே  நூறுதான்  போயிருக்கு என்ற  விவரம்  எனக்கு  இன்னிக்குதான்  தெரிஞ்சுது)
ஆங்..ட்ராக்  மாறுது,..

ரொமாண்டிக்  லுக்..இரவு  சாப்ட்டு வரப்ப  சரியான  நேரம்..என்று  பார்வையை  சரி  பண்ணிக்கிட்டு  எதிர்த்தாப்ல இருக்கிற  சோபால  தலையை  லூஸ்  ஹேர்ல விட்டு, செமையா  ட்ரெஸ்  பண்ணிக்கிட்டு கால்  மேல  கால் போட்டுக்கிட்டு உக்காந்தேன்.

என்னம்மா, என்னம்மா என்றார்..மனசுக்குள்..ஆகா..காதல் பொங்க போகுது..பார்வைகள் சந்தித்து  மோதி..பிரளயம் வெடிக்கும்..அதிலிருந்து  காதல்  கவிதைகள்  பிறக்கும்..என்று  மனசுக்குள்  பட்டாம்பூச்சிகள்  பறக்க..

என்னடி  நல்லாருக்கியா என கேக்க..எத்தன நாளாச்சு..நம்ம நேர்மறை  சிந்தனைக்கு  கிடைத்த வெற்றி..ரகசியம் புத்தகம்  சொன்னது  போல. சக்தி  வேலை  செய்து..என்று  சூரியன்  வெள்ளிச்சம் அடிச்சுது..சாதிச்சிட்டோம்ல. ..என்ற கர்வத்துடன்..அந்த  ரொமாண்டிக்  லுக்  கை தொடர்ந்தேன்..

"என்னடி  செய்யற..இப்படி  பார்க்காதே..என்னமோ  போல  இருக்கு"  (இன்னும்  என்னை  என்ன  செய்ய  போகிறாய்  சிச்சுவேஷன்  டியூன்  வேற  மைன்ட்ல ஓடுது ) என  சொல்ல..ஆஹா...இப்படியே  பிக்  அப்  பண்ணி  இந்த  பீல் ல  பத்து  கவிதைகள்  போட்டுடனும்னு மைன்ட்  வாய்ஸ்  திரும்ப சொல்ல.. "உங்களதாங்க அன்பா பார்த்துகிட்டு  இருக்கேன்"  என  நான் சொல்ல.. அவர்  கண்கள் மின்னும்..காதல்  பிறக்கும்..உணர்வுகள்  பொங்கும்..டுயட்  சிச்சுவேஷன்  இன்னும் தேடனும்..என்று ஒரே  கற்பனை  கவிதைகளா ஒடிச்சு...அப்படியே  சினிமாக்கும்  லிரிக்ஸ்  என்று  தறிகெட்டு  ஓடுது..எண்ணம்...அங்க..முதல்   முறையா  என்னை  பார்த்து  கலங்கிவிட்டார்..பேஸ்புக்  பைத்தியம் பிடிக்கும்னு நினைச்சேன்..இப்படி மோட்டு வளைய  வெறிச்சு வெறிச்சு  பார்க்கிற  அளவுக்கு முத்தும்னு  நினைக்கல.ன்னு  சொல்ல..தல  சுத்திடுச்சு.. "உங்களைதான்  பார்த்துக்கிட்டு  இருந்தேன்  மாமா" ன்னு  சொல்ல..தலை தெறிச்சு..தெறி படம்  பார்த்த  மாதிரி  ஓடறார்.

காதல் பிக் அப்  செய்ய  போனா..ஓடின  வேகத்துல கார்ல  போய் பிக்  அப்  பண்ற  நிலைமை  ஆயிடுச்சு.

முத்தும்..ஆக...அவர்  வாயாலையே  பாயின்ட்  எடுத்து  கொடுக்க.ஆங்  முத்த  கவிதை..இனிமே  இவங்க  ஹெல்ப்லாம்  இல்லாம சொந்தமா  யோசிக்கணும் என்று களத்தில் இறங்கினேன்..

"முதுகில் முத்தம்
ஜில்லென்று
இறங்கி கரையும்
ஐஸ்  கத்தி போல".

இதையும்  அந்த  பக்கிக்கே  அனுப்பி வச்சேன். ஏண்டி..முதுகுல  கத்தியால  கதற  கதற  குத்தற..முடியல்.. ..பீல் இருக்கணும்டி..என்று  ரிஜக்ட்  செய்ய..கிரர்ர்ர்ரர்ர்ர்ர்..ஆனால்..மனதுக்குள்  ராபின்  ஷர்மா  வந்து வெற்றி, விடா முயற்சி  கிளாஸ் எடுக்க  கவிதை நோக்கிய  பயணம்  நிற்கவில்லை.

வெண்பா  என ஒருத்தர்  தூண்டி விட..

"கற்க  காதல்  கசடற கல்லாவிடில்
கவிதைக்கு கெஞ்ச  தக".

இது  என்னனு  அந்த  பக்கி  கேட்டுச்சு..குறள் வெண்பாவில்  காதல்..அது  ப்ளாக் பண்ணிட்டு  போக.காதல் கவிதை  படிக்க வேற  பக்கி   தேட  வேண்டிய நிலைமை.

சரி  வராத  காதலை  வா  வான்ன  எப்படி வரும்..எப்படியாவது..சிச்சுவேஷன்  கவிதை  எழுதிடுவோம்னு  மண்டைய உடைச்சேன்..அப்போ  சிச்சுவேஷன்  என்னன்னா பர்பிள் லெக்கிங்க்ஸ்  காணாம போய்  தேடிகிட்டு  இருந்தேன்..வெளியே நாலு இடத்துக்கு  போய்  வந்து பிரயோஜனமில்லை..இருக்கிற  சிச்சுவேஷனை  பிடிச்சு  ஏறிட  வேண்டியதுன்னு  முடிவு  பண்ணிட்டோம்ல.
பர்பிள்  ..ஆங்  கத்திரி  பூ  கலர்..வெளிர், அடர்  என்று..இடையில் இருக்கும் நிறம்..இடர் ன்னு வரும்மா தமிழில்  என்று யோசித்தேன்.

"அடர்  கத்திரி காலை அழுத்த
இடர் செய்யும் அலமாரியை அகற்றி
படர்ந்திருந்த" 
.ம்ஹூம் அடி..முதல்லேர்ந்து..

"நான் அடர் கத்திரிப்பூவைத்தான்  தேடினேன்
பச்சை, நீலம், சிவப்பு கலைக்க
வெள்ளை, கருப்பு வா வா என கண் சிமிட்ட
நான்  கத்திரிப் பூவைத்தான்  தேடினேன் ..

நாளை கரும் மஞ்சளாக இருக்கலாம்
நேற்று  இளம் ஆரஞ்சாக இருக்கலாம்
நான் அடர் கத்திரிப் பூ வதான் தேடினேன்...

கதவின் இடுக்கில் எட்டி பார்க்கும் துப்பட்டாவை
நகர்த்தி வைத்தலில் பெண்ணியம் மிளிர 
நான் அடர் கத்திரிப் பூவைதான்  தேடினேன்.

அடுத்த, முன் பொழுதுகளின்  பொருத்தம்
பொருத்தமற்று  போகும் கணத்தில்
நான் அடர் கத்திரிப் பூவைதான்  தேடினேன்.

நிறமென்பது  நிறமில்லாததும்
கத்திரி   என்பதெல்லாம்  கத்திரி அல்ல.
நான் அடர் கத்திரிப் பூவைதான்  தேடினேன்.
நானே  அந்த  கத்திரி ப்பூ  என்றறியாமல்."

வந்து  கொட்டிக்கிட்டே  இருக்கு..ஆஹா  கவிதை  வந்துடுச்சு..என்று  இன்னும்  நாலு சிச்சுவேஷன்..அப்புறம்  நாலு  போட்டோ  எடுத்தேன்..அருவி  போட்டா..
" உன் ஷேவிங் கிரீம் நுரையாக
அருவி  நீர்.. நிற்கும் கணத்தில்
மணம் நனைத்தது"..

ஆஹா..அருவி  நுரையும்..ஷேவிங் நுரையும்..வெள்ளை வெள்ளை..பிடிசுட்டோம் ;ல..இனிமே  என்னை  யாரும் தடுக்கமுடியாது..நானும்  கவிஞ்சர்  ஆகிட்டேன். பெண்ணியம்..பித்தளை  கவிதைகள்  போட்டு  பிரபலமாவதே  லட்சியம் இனி.
ஒரு  கவிஞர்  உருவாகி  விட்டார். 
.



Friday, June 10, 2016

என்னை வென்ற தருணம்.

என்னை வென்ற தருணம்.
மிக நெகிழ்வான ஒரு பயணம். எதிர்பார்த்து, இதற்காக உடை அதற்கு மேட்சாக கொலுசு முதல் ஜிமிக்கி வரை வாங்கி, கடைசி நிமிடம் வரை டைலரிடம் அலைந்து..ஆச்சு.
காரை மிதித்தால் ஆறு மணி நேரம்..வீட்டில் மூவருக்கும் கார் பயணம் பிடிக்கும் என்பதால் கார் முடிவாகிவிட்டது. எப்பவும் நடுவில் கொஞ்சம் வாங்கி ஓட்டுவேன். சென்ற இருமுறையாக நிறையவே லாங் டிரைவ் ஓட்ட ஆரம்பிச்சாச்சு.
சிறு முதுகு பிடிப்பால் சரியான வலி தரனுக்கு. மிகுந்த வேலைகளுக்கு நடுவில் வந்ததால் உடனே திரும்ப நிலைமையும். நான் டிரைவ் பண்றேன் கவலையை விடுங்க என்றவுடன் அவருக்கும் ஆசுவாசம் ஆகியது.
இங்கு தரன் முழுக்க நம்பி அவரின் வண்டியை கொடுத்தாலும் (இருவரும் ஒருவரின் வண்டியை அடுத்தவர் தொட மாட்டோம்..போன் போல..) என்னை நான் வெல்வதே எனக்கு மிகப்பெரிய பிரச்னை. அடுத்தவர்களை கவனிக்க முடியாமல்தான் ஓட்டமாய் வாழ்க்கை துரத்திக்கொண்டு இருக்கிறது. யாருக்காவது ஏதாவது சொல்ல வேண்டும் என்றாலும் சோதித்து கொள்ளாமல் சொல்லமாட்டேன். எனக்கான முதல் எலி நான்தான். நிற்க.
சில வருடங்களுக்கு முன் அக்காவின் காரை எடுத்துக்கொண்டு குழந்தைகளுடன் தஞ்சாவூரில் இருந்து மாயூரம் வந்துக்கொண்டு இருந்தோம். அதற்கு முந்தைய மூன்று நாட்கள் தூக்கமில்லாத அலைச்சல்.
ஆர்.ஜே பாலாஜியின் நகைச்சுவை தொகுப்பு..போன் போட்டு கலாய்ப்பது கேட்டு சிரித்துகொண்டே வந்தோம்.. ஒருசமயத்தில் காரில் அனைவரும் தூங்கி விட நானும் கேட்டுக்கொண்டே கார் ஒட்டினேன். கண் சொக்குவதாய் தோன்றியது..வழியில் கும்பகோணம் காபியின் ஒரிஜினல் வர்ஷன் அப்போவே..பித்தளை டபரா, டம்ளர் அழகிய வேலைப்பாடு உள்ள இடம் என்று காபி கண் சிமிட்டி கூப்டது. போயிருக்கலாம்.. கண் வேறு கெஞ்சியது...மன உறுதி அது இது என்று சமாதானப்படுத்திக்கொண்டு கண் கெஞ்சியதை ஓரம் கட்டினேன்.
சொன்னப் பேச்சை கேக்கும் உடல் என்று கொஞ்சம் கொழுப்பும். உடல் சொல்வதை கேக்காமல் சென்றதற்கு அது சரியான பழிவாங்கல் வைத்து இருந்தது தெரியாமல் போய்விட்டது. எதிரில் வேகமாக பேருந்துகள் அந்த ஒற்றை ரோடில்..
டமார் சத்தம். கார் ஒரு மரத்தின் மேல் மோதி நின்றது. ஒரு குடிசை வீடு. மரம் இல்லாமல் இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று தெரியவில்லை. பின் சீட்டில் குழந்தைகள்,.எதுவும் நினைவில் இல்லை. எப்படி மோதியது என்றே தெரியவில்லை. ஒரு கணம் எல்லாம் இருட்டிகொண்டு சென்றது மட்டும் நிஜம். கண் அசந்து என்னை ஏமாற்றி விட்டது.
அதுவும் கூட உணர முடியாத ஷாக்கில் நானும் ரவுடி வடிவேலு போல பேஸ்மென்ட் விடாமல் நடுங்கிக்கொண்டு இருக்கிறது. எல்லாரும் சமாதானப்படுத்தி ஊரில் விட்டு..மாமாக்கு சரியான வேலை மற்றும் செலவும். நான் கண் அசந்தது பற்றி யாரும் என்னை எதுவும் சொல்லாமல் சென்றது குற்ற உணர்வு ஆழமாக இருந்தது. எந்த மன்னிப்பும் ஈடு செய்ய முடியாத பெருந்தவறு அது.
அன்றைய பாதிப்பு வெளியே தெரியவில்லை. ஆனால் ஆழமாக வெளியே சொல்ல முடியாதவாறு மனதில் பாதிப்பு. எங்கையாவது அதிக நேரம் நேரான ஹை வேசில் ஓட்டினால் என்னை அறியாமல் கண் சொக்கும்..என்ன செய்தாலும் தடுக்க முடியாது. அதாவது கால்விரல் நுனியில் இருந்து தூங்கியே ஆகவேண்டும் என்பதுபோல் உடலெங்கும் ஒரு உணர்வு எழும்பும்.. வண்டியை நிறுத்தி சரி செய்துகொண்டு மேலே போக வேண்டும். என்ன செய்தும் இதில் இருந்து மீள முடியவில்லை. அந்த விபத்தில் இருந்து விவரிக்க முடியாத தூக்க உணர்வு என்னை துரத்துவதாக நம்ப ஆரம்பித்தேன்.
இரண்டு மணிநேரம் மேல் ஓட்டினால் தரனிடம் கொடுத்துவிட்டு அடித்துப்போட்டதுப்போல தூங்கிடுவேன். இந்த முறை மூணாறில் இருந்து வரும் பொழுது ஏழு மணி நேர டிரைவிங் என்றாலும் நடுவில் தூங்கிகொண்டேன். தூக்கம் வருதா என்றுக்கேட்டால் கூட எனக்கு வந்துவிடும்.
இந்த முறை நான் தூக்கத்தில் இருந்து விடுபட்டு முழுக்க ஓட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். இத்தனை நாள் அதிகம் விவாதிக்காத விஷயமாக வெக்கப்ப்ட்டுகொண்டு சொல்லாமல் வைத்து இருந்தேன். மூன்று மணி நேரம் கழித்து தூக்கம் ஆரம்பித்தது. தரனிடம் இந்த பிரச்னையை விரிவாக சொன்னேன். சொன்னவுடனே கொஞ்சம் அந்த டென்ஷன் குறைந்தது. கொஞ்சம் கண் சொக்கும் இருந்தாலும் நீர் குடித்து. சுக்கு காபி குடித்து சரி செய்துகொண்டு நானே பிடிவாதமாக கார் ஒட்டிக்கொண்டு வந்தேன். தரனும் மிகுந்த சப்போர்டிவாக பேசிக்கொண்டே வந்தார்.
முதன் முறையாக ஒரு இடத்தில கூட கொடுக்காமல் நானே செய்த லாங் டிரைவ். என்னை வெல்ல வேண்டியதுதான் எனக்கு சவாலே. இதில் இருந்து முதல் படியில் வென்றுள்ளேன் என்றே நினைக்கிறேன்.
பார்க்க ஒரு சிறு பிரச்னையாக இருப்பினும் இது மனதிற்குள் மிகு தொந்தரவு கொடுத்து வந்தது என்பதே உண்மை.
நம்மை வெல்ல இதை நான் முயற்சி செய்கிறேன்..
நம் பிரச்சனையை வெளியே சொல்லிவிடுவதே நல்லது. அதிலையே பாதி டென்ஷன் வெளியேறி விடும்.
நம்மால் தீர்க்க முடியாவிடில் அடுத்தவர் துணையை நாடுவது தவறில்லை.
ஒரு இலக்கு வைத்துகொள்வது நல்லது. இதை செய்தால் நான் வந்து போஸ்ட் போடுவேன் என்று நினைத்துகொண்டேன்.
எதையும் ஏற்றுகொள்ளும் மன உறுதி அவசியமாகிறது.
முதலில் நெகடிவ் எண்ணங்களை தூக்க பாசிடிவாக யோசிக்க வேண்டிய அவசியம் அதாவது தூங்கிடுவேன் என்ற எண்ணத்தை விரட்ட...என்னால் விழிப்பாக ஓட்ட முடியும் என்ற பாஸிடிவ் எண்ணம்..
தூங்க மாட்டேன் என்ற எண்ணம்இருந்தால் மனம் தூக்கத்தை மட்டும் சுத்தி நிக்கும். இதுபோல பழைய நெகடிவ் எண்ணங்களை களைய வேண்டியது அவசியமாகிறது.
இப்படிதான் என்னை நான் கொஞ்சம் கொஞ்சமாக ஜெயித்துக்கொண்டு இருக்கிறேன். எல்லாருக்குமே அவரவரை ஜெயிப்பதுதான் பெரிய சவால். ஏனென்றால் நம் பேச்சை நாமே கேக்கமாட்டோம் என்ற மனம்..வெல்வது கடினம் என்றாலும்..வெல்ல முடியும்..என்ற நம்பிக்கை வளராமல் இல்லை.
அடுத்து விடாமல் ஒரு கோவா ரோட் ட்ரிப் என் டிரைவிங்கில் செல்ல வேண்டும். அம்புட்டுதான் ஆசையே.