Tuesday, April 22, 2014

அப்பா -2

அப்பா -2..

அப்பாவோடு வயலுக்கு போகும்பொழுது சிறு வயதில் பாம்பை பார்த்தவுடன் அப்பா பாம்பு, பாம்பு என்று கத்தினேன். உடனே வேலை செய்தவர்கள் ஏறி வந்து பாம்பு எங்கே என்று பேச்சு மும்முரத்தில் வேலை ஒரு மணி நேரம் கெட்டு போனது.

அப்பா கூப்பிட்டு..வயல்ல பாம்புகள் சாதாரணம், பார்த்தா ஒதுங்கி போகணும், அது எலியை சாப்பிட்டு நமக்கு நன்மை செய்ய வந்துருக்கு, அதை அடிக்கணும் என்று நினைக்க கூடாது..பிறகு வேலை கெடும் அளவுக்கு இப்படி நடந்து கொள்ள கூடாது என்று அறிவுரை.

ஒரு நாள் அறுவடை செய்த வயலில் இறங்கி நடக்கும் பொழுது நிறைய பாம்புகளை பார்த்தப்பொழுது சிறு பதட்டம்..ஆனால் பயமில்லை...அன்றில் இருந்து இன்று வரை பாம்பை கண்டால் ஒதுங்கி போகும் வித்தை அப்பா சொல்லி தந்தது..ஆனால் தேனிக்கு கூட பயப்படும் பசங்களை மாற்ற முடியவில்லை என்னால்.

No comments: