Sunday, October 12, 2014

ஜன்னல் 3

ஜன்னல் கதை 3
காரை விட்டிறங்கி பேருந்தினாள்..யுவதி... இருபக்கமும் மஞ்சள் தேய்த்து ,கனகாம்பரம் வைத்த பெண் கொஞ்சம் நகரும்மா என்ற கண்டக்டர் சொன்னதுக்கே சுற்றுமுற்றும் புன்னகை கண்ணோடு பார்த்து வெட்கபூரிப்புடன் ஒதுங்குவதை பார்த்து இன்னும் இதுபோன்ற மனங்களும் என்ற எண்ணத்துடன் ஸ்லேட், ஸ்லேட் ஆக கையில் வைத்திருந்த ஜீன்ஸ் யுவதிகள் வரிசையில் நின்றுக்கொண்டாள்.
பொதுவுடைமை பள்ளியிலும் பார்த்திராத பெண் பேருந்தில் தரிசித்துவிட்டு ஆண்களை நோக்க.. நோக்கியா போன்ற சிலவற்றில் கண்ணும் கருத்துமாய் அல்லது வெற்றிடம் நோக்கி, வெளியே நோக்கி என்றே பெண்ணை நோக்கிய பார்வை இல்லாமல் இருப்பது வித்தியாசமாய் இருந்தது..
வெளியெங்கும் உள்ள கண்களை நோக்கி, நோக்கி தரிசித்த கண்களில் எந்த கண்ணும் அவளை பார்க்காமல் போய்..கண்கள் பூத்து.. ஃபேஸ்புக் ல் எழுதினாள் ஆண்கள் பார்வை சரியில்லை என்று...

No comments: