Sunday, October 12, 2014

ஜன்னல் 1

ஜன்னல் கதை..1
காலையில் ஆன்லைன் எப்.எம் ல் ஒலித்த வாழ்வே மாயம் மனதிலும்.ஹம் செய்துக்கொண்டே குளித்து உயரக்கொண்டை துண்டுடன் அலமாரியை திறந்தவள் அதிர்ந்தாள்.
நீலத்தில் பல, கருப்பில் சில என அடுக்கிவைக்கப்பட்ட தடிம துணி கால்சராய்கள் ......அடுக்கிவைக்கப்பட்ட இடத்தில் பல முகங்கள் சிரித்துக்கொண்டு இருந்தன...ஒவ்வொன்றும் ஒரு வீர வசனம் பேசியப்படி...ஒன்றை விரட்ட இரண்டு, நான்கு, எட்டு, பதினாறாகி..பல்கி பரவியது..
பயந்து சாத்திவிட்டு உடல் நடுங்க அமர்ந்தவள் துணிந்து உதறினாள். உடுத்த இருந்த கால்சராயில் இருந்த முகங்கள் தரையெங்கும் சிதறி இன்னும் வீராவேச வசனங்கள். பேசியதை உற்று நோக்க.....
கொஞ்சம் நடிங்க பாஸ் மக்கள் பேசும் வீர வசனங்கள் நினைவுக்கு வந்து விழுந்து விழுந்து சிரித்துவிட்டு முகங்களை பத்திரமாக்கினாள் நாளைய ஆதித்யா என்டேர்டேயின்ட்மென்ட் க்கு..
Disclaimer..
இந்த கதை கற்பனை..


No comments: