Wednesday, April 3, 2013

மாண்டசரி கல்வி முறை



மரியா மாண்டசரி கண்டுபிடித்தஅற்புதமான முறை மாண்டசரி கல்வி முறை. சரியான பொருட்களை கொண்டு தானே கற்றல் முறையையும்,கற்று கொள்ளலில் ஆர்வத்தையும் தூண்டுவதே மாண்டசரி பள்ளியின் நோக்கமாகும்.
இந்த கட்டுரைக்காக சந்தித்தது பெங்களூரில் உள்ள 39 வருடமாக இந்த துறையில் அனுபவமுள்ள இரு மாண்டசரி பள்ளிகளை நடத்துவபவருமான சோபி சிவசங்கர் அவர்களை .அவர் தந்த விவரங்கள் அப்படியே கொடுத்துள்ளேன்.
1. வழக்கமான பள்ளிகளில் ஆசிரியர் முதன்மையாக இருப்பார்.அவர் சொல்வதை கேட்டு கொள்ள வேண்டும்.இங்கு குழந்தைகள் முதன்மையாக இருப்பார்.ஆசிரியர் என்று யாரும் இல்லை.நடத்துனர் (டைரக்டர்) பின்னணியில் வழிநடத்துவார்.
2. மனப்பாட முறை கிடையாது .யோசனை செய்து பதில் அளிக்க வேண்டும்.
3. நன்றாக கவனித்து (அப்ஸர்வ் செய்து ) தானே கற்று கொள்வதால் அறியாமல் மனதில் பதியும். (subconscious )
4. கரும்பலகை முறை கிடையாது.காபி செய்து எழுதும் முறை கிடையாது.தானே கற்று கொண்டு எழுதுவதைதான் எழுத்து (writing ) என்பர்.
5. தொடுகை முறை கல்வி. பொது பள்ளிகளில் தொட்டு உணர்ந்து கற்று கொள்ளல் இல்லை.

6. தனி,தனி குழுந்தைகளுக்கு தனியாக கற்று கொடுக்கும் முறை.முப்பது பேருக்கும் ஒரே பாடத்திட்டம் கிடையாது.
7. கற்று கொள்ளலில் நேர வரைமுறை கிடையாது.ஒரு குழந்தை அரை மணியிலும் கற்றுக்கொள்ளலாம்,இரண்டு மணி நேரமும் ஒரே பாடத்தை கற்று கொள்ளலாம்.
8. இங்கு அனைவரும் ஒன்று என்று கிடையாது, ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம் என்பதை புரிந்து யூனிபாரம் உடை கிடையாது.
9. நீண்ட நேரம் ஒரே பாடத்தை கற்றுக்கொள்ளும் பொழது நடுவில் குழந்தையை இடைஞ்சல் செய்வது இல்லை.அதனால் அட்டேன்ஷன் ஸ்பான் அதிகரிக்கறது.
10. இரு வழி உரையாடல்.என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல வேண்டும். பொது பள்ளிகளில் ஆசிரியர் சொல்லுவதை மட்டும் கேட்க வேண்டும்.
11. .ஒரே குழுவில் வயது வித்தியாசமுடன் குழந்தைகள் இருப்பார்கள்.பெரிய குழந்தை சிறு குழந்தைக்கு சொல்லி கொடுத்து இருவரின் உறவும்,அறிவும் வளர வாய்ப்பு.( 0-3, 3-6, 6-9 ,9-12 வயதுகளில் )
12. .சொல்லி கொடுக்க மிக அதிகமான பொருட்கள் வைத்து சொல்லிகொடுகிறார்கள் ஒரே கணக்கை சொல்லி கொடுக்க மணிகள்,ப்ளாக்குகள் அட்டைகள் என்று வித,வித பொருட்களை உபயோகிப்பார்கள்.
13. கற்பனை, பாண்டசி கதைகள் ஆறு வயதுக்கு மேலே அனுமதி. அது வரை நிஜ கதைகள் ,சம்பவங்கள் மட்டுமே கூறப்படும்.
14. பரிட்சைகள்,வீட்டு பாடங்கள் கிடையாது.
15.ஒழுக்க விதிகள் திணிக்காமல் படி,படியாக கற்று கொடுக்க படுகிறது.
16..தொட்டு பார்க்க வேண்டும்,கவனமாக எடுக்க வேண்டும்,திரும்ப கவனமாக கையாண்டு அதே இடதிலையே வைக்க வேண்டும்.அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் இருக்கவும்,அமைதி காக்கவும் சொல்லி கொடுக்க படுகிறது.
17.வீட்டுக்கு சென்றால் அம்மாவுடன் நேரம் செலவழிக்க,வீட்டு வேலைகளில் உதவி செய்ய ஊக்கபடுத்துகிறார்கள்.
இனி என் கேள்விகள் சோபி சிவசங்கர் பதில்கள் .
ஏன் மற்ற கல்வி முறைகளை சாடுகறிர்கள்?
அவர்கள் கார் அசெம்பிளி லைன் போல குழந்தைகளை ட்ரீட் செய்வது எங்களுக்கு வருத்தம் கொள்ள செய்கிறது.ஆயிரக்கணக்கில் குழந்தைகளை சேர்த்து ஒரு அறையில் அடைத்து இயற்கையோடு கலக்க விடாமல் கற்க விடாமல் ஒவ்வொரு குழந்தையின் தனித்தன்மையை கவனத்தில் கொள்ளாமல் ஒரு பேக்டரி பொருட்கள் போல மந்தை மனப்பான்மையுடன் குழந்தைகளை ஒட்டு மொத்தமாக கையாள்வது எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது.
எப்படி பரீட்சை இல்லாமல் கற்றுக்கொண்டதை கண்டு பிடிப்பீர்கள் ?
பரீட்சை வைத்தால் அவர்கள் கற்றுக்கொண்டு விட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை (அவருக்கு டெஸ்ட்,எக்ஸாம் போன்ற வார்த்தைகள் பிடிக்கவில்லை,கோபம தருகிறது )ரிபிடேஷன் அதாவது திரும்ப,திரும்ப கற்று கொடுக்கும் பொழுது அவர்கள் அறியாமல் மனதில் பதியும்.நாங்கள் வருடம் முழுதும் கவனித்து அசெஸ் செய்கிறோம்..ஆனால் ஒரு பரீட்சை வைத்து மார்க் கொடுத்து சோதிப்பது சரி இல்லை.
போட்டிகள் இல்லாமல் வளர்ந்தால் எப்படி பின்னாட்களில் சமாளிக்கமுடியும் ?பிறகும் இங்கிருந்து பொது பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் நிலை ?
எங்கள் பள்ளியை பொருத்தவரை பத்தாம் வகுப்பு வரை இங்கயே சொல்லிகொடுக்கிறோம்.பதினொன்றில் அவர்கள் நன்றாகவே செய்வார்கள். உயர் பள்ளியில் மாறும் குழந்தைகளும் மிக நன்றாகவே செய்கிறார்கள்.ஆனால் அந்த பாடத்திட்ட முறையை அவர்கள் விரும்புவதில்லை.இங்கயே தொடர விருப்பபடுகிறார்கள். இங்கு படிக்கும் சிறுவர்கள் எந்த போட்டிகளில் பங்கு பெற்றாலும் சிறப்பாகவே செய்கிறார்கள்.நாங்கள் சொல்லி கொடுக்கும் தன்னம்பிக்கை பாடம் அலாதியானது.
உங்கள் பள்ளி மாணவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்களா ?
ஆமாம்.எங்கள் மாணவர்களை அடைத்து வைப்பதில்லை.எந்த பாடத்தையும் ,எத்தனை நேரங்களிலும் அவர்களே கற்று கொள்ள முடியும்.கற்று கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கி,வழி காட்டுவதே எங்கள் வேலை.கற்றல் ஆர்வத்தை ஊட்டுகிறோம். மற்ற பள்ளியில் ஆசிரியர் இல்லாவிட்டால் கூச்சல் புறப்படும். அன்று நாம் ஒரு பள்ளிக்கு போகும்போது பார்த்தாயே நாம் நுழைந்தவுடன் நம்மை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்கள்.ஆனால் இங்கு நீ உள்ளே போய் பார்…அவர்கள் வேலையில் கவனத்துடன் இருப்பார்கள். அந்த அளவுக்கு இங்கு குழந்தைகளுக்கு கல்வியில் கான்சென்ட்ரேஷன் (கருத்துடன் இருத்தல் )அதிகம்.
அவர்கள் இஷ்டதிற்கு சில பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் கஷ்டம் இல்லையா ?
நாங்கள் வழி நடத்தி கொண்டு இருக்கிறோம்.எல்லா பாடங்களிலும் ஆர்வம் உண்டாக்குவோம்.எடுத்துகாட்டாக பிதாகரஸ் தியரத்தை இரண்டாவது படிக்கும் குழந்தை முக்கோணத்தை சுற்றி மணிகள் வைப்பதன் மூலம் எளிதாக புரிந்து கொள்ளும்.இலைகள் எடுத்து வர சொல்லி அதை பற்றி நேரடியாக சொல்லி கொடுப்போம். ஒரு பாடம் என்று தனியாக இல்லாமல் எல்லா பாடங்களும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுத்தி கற்று கொடுப்போம். அனைத்திலும் படத்துடன் கூடிய அட்டைகள் மூலமாக ஆர்வமாக கற்றுகொள்ளவே செய்கிறார்கள்.முடிவில் அவர்கள் கற்றுக்கொண்டதை தொடர்ந்து ,தினமும் கவனித்து பெற்றோருக்கு தெரிவிக்கிறோம்.

montessori-classroom kiruthi - mar 5
பாடத்திட்டங்கள் எப்படி வித்தியாசபடுகிறது ?
சிறு குழந்தைகளை நிறைய வரைய சொல்லுகிறோம்.அதன் மூலம் கைகளுக்கு சக்தி ஏற்படும்.மூளைக்கும்,மணிகட்டுக்கும் நல்ல பயிற்சி. தேவை இல்லாமல் கேபிடல் எழத்துக்கள் முதலில் கற்று தரபடுவதில்லை.நான்கு வயது வரை எழுத அனுமதிப்பதில்லை. எடுத்துக்காட்டாக noun சொல்லி கொடுக்க வேண்டுமானால் ஒரு இடத்தில உள்ள பெயர்களை அவர்கள் மூலமாக சொல்ல வைத்து அதனை பகுப்பு ஆய்ந்து கலந்து பேசி சொல்லிகொடுப்போம். அனைத்தும் லாஜிகலாக கற்று கொடுக்கப்படும். பாடங்கள் எதற்கு உபயோகப்படும் என்ற தெளிவை ஏற்படுத்துவோம். வாழ்க்கை பாடம் முதலில் கற்று தரப்படும்.
வயதுபடி வகுப்புகள் இல்லையென்றால் எப்படி குழந்தைகள் ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்புக்கு செல்வார்கள் ?
நாங்கள் படி படியாக குழுக்கள் மாற்றுவோம்.இப்போது மூன்றிலிருந்து ஆறு வயது வரை ஒரே குழுவில் இருப்பார்கள்.சில குழந்தைகள் மிக வேகமாக கற்று கொள்வார்கள்.அவர்களுக்கு அடுத்த பாடத்தை ஆரம்பிக்க விட்டால் கற்றலில் ஆர்வம் குறைந்துவிடும்.சிலர் மிக்க மெதுவாக கற்று கொள்வார்கள் அவர்களை ஊக்கம் கொடுத்து கற்று கொள்ள வைக்க வேண்டும் . அறிவுக்கும்,முயற்சிக்கும் ஏற்றார் போல கற்றுகொள்ள வாய்ப்பு. இதை பற்றி இன்னும் நிறைய கூறவேண்டும் சுருக்கமாக கூறி இருக்கிறேன்.
குழந்தைகள் கற்று கொள்ள ஆர்வமாகதான் இருகிறார்கள்.அதுதான் இயற்கையும். ஆனால் சோதிப்பது அவர்களுக்கு பிடிக்காது.ஆனால் டெஸ்ட் ,பரீட்சை என்ற பெயரில் ஆர்வமாக கற்று கொள்வதை தடுக்கிறார்கள்.
Montessori and meஎன்ற புத்தகத்தை அனைத்து பெற்றோருக்கும் பரிந்துரைக்கிறேன் என்றார்.
இன்னும் எத்தனையோ விஷயங்களை விவாதித்தார். முதன் முதலில் நான் இதற்காக சந்தித்தது குழந்தைகளின் மேல் அன்போடும்,காதலோடும்,அக்கறையோடும் உள்ள மாண்டசரியன் .கல்வியில் மாற்றத்தை கொண்டுவர உழைக்கும் ஒரு மகத்தான பெண்மணி. மிக்க உறுதியானவரும்.
அடுத்த வாரம் இன்னும் விவாதங்களோடு தொடருவோம். இந்த கட்டுரை மாண்டசரி பற்றிய அறிமுக கட்டுரை. உங்கள் கருத்துகளை பதிய மறக்கவேண்டாம்.]\


No comments: