Wednesday, April 3, 2013

கல்வி பாடத்திட்டங்கள் ஒரு அறிமுகம்


கல்வி பாடத்திட்டங்கள் ஒரு அறிமுகம்.

பாடத்திட்டம் (சிலபஸ் )என்றவுடன் நான் மெட்ரிகுலேஷன்,ஆங்கிலோ இந்தியன் ,தமிழ்நாடு பாடத்திட்டம் எல்லாம் ஒழிந்து சமச்சீர் கல்வி வந்துவிட்டதே என்று நினைக்கலாம்.உண்மை என்னவென்றால் இது தமிழ்நாட்டுக்குள் மட்டும் இருந்த வேறுபாடு.மற்ற அண்டை மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தில் வேறுபாடு கிடையாது.இப்போது எல்லா பாடத்திட்டங்களை பற்றியும் ஒரு சிறிய அறிமுகம் கொடுக்கிறேன்.தேவையானவர்களுக்கு உதவியாக இருக்கும்.



மாநில பாடத்திட்டம் :சமச்சீர் கல்வி.

இப்போது சமச்சீர் கல்வி எனபது மெட்ரிகுலேஷன்,ஆங்கிலோ இந்தியன் ,மாநில பாட திட்டத்தில் இருந்த பள்ளிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு மாநில முழுதும் ஒரே பாடத்திட்டத்தில் கொண்டு வரப்பட்டது.இதில் தமிழ் மொழி பாடம்,ஆங்கில வழி பாட முறை இரண்டு இருக்கிறது.இதில் புதிதாக அறிமுகப்படுத்தபட்ட பாடங்கள் எளிமையாகவும் அதே சமயத்தில் புதுமையாகவும் இருக்கிறது.ஆனால் அதே புத்தக வழி கல்விதான்.தமிழ்நாட்டில் மட்டுமே வசிக்கும் மாணவர்களுக்கு,தாய் மொழி வழி கல்வி கற்கும் மாணவர்கள் பயனடைவார்கள்.சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களின் தரம் பாடத்திட்டதிற்கு ஏற்ப இல்லை என்ற குற்றசாட்டு இருக்கிறது.ஆனால் தமிழ்நாட்டில் என்ட்ரன்ஸ் எக்ஸாம் ஒழித்துவிட்டதால் சமச்சீர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு இருகிறது தமிழ்நாட்டு கல்லூரிகளில் இடம் பெறுவதற்கு.தமிழ்நாட்டில் மேற்படிப்பு படிக்கவிரும்பும் மாணவர்களுக்கு இந்த கல்வி முறையில் வாய்ப்பு அதிகம்.மதிப்பெண்கள் எடுக்கவும் அதிக வாய்ப்பு.அதில் வரவேற்கதக்க அம்சங்கள்

முப்பருவ முறை ,மூன்று முறை பாடத்திட்டம் புத்தகங்களின் சுமையை குறைகறது.
http://www.tnschools.gov.in/Trimester.html

Continuous & Comprehensive Evaluation (CCE
இந்த முறை பரீட்சை பயத்தை குறைகிறது.
மதிப்பெண்களுக்கு பதிலாக தரங்கள்.தொடர் பதிப்பு கூட்டல் போன்றவை வரவேற்கதக்கவை.
http://www.tnschools.gov.in/
இது ஒரு அறிமுகம்.பிரச்சனைகள் பற்றி அடுத்த கட்டுரையில் விவாதிக்கப்படும்.

CBSE Central Board Of Secondary Education.மத்திய கல்வி பாடத்திட்டம்.

இந்தியா முழுக்க மிக பிரபலமான முறை.அடிக்கடி வேலை மாற்றல் அல்லது மாநிலம் விட்டு மாநிலம் செல்லுபவர்கள் தேர்ந்தெடுத்து கொள்ள சரியான பாடத்திட்டம்.இங்கும் இப்போது படிபடியாக மாற்றங்கள் கொண்டு வரபடுகிறது.பத்தாவது பொது தேர்வு முறை மாற்றப்பட்டு மதிப்பிடும் முறையும் ,மதிப்பெண்கள் பதிலாக தரங்கள் கொடுக்கும் முறையும் ஏற்படுத்தப்பட்டது.முக்கியமாக இந்திய அளவில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இதில் அதிகம் பயன்பெறுவர்.இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம் இந்த முறையில்.ஆனால் பத்தாவது வரை மாணவர்களை படிக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளால் பத்தாம் வகுப்பு வரை எளிமை படுத்தபட்ட படிப்புதிட்டம்.
http://www.cbse.nic.in/


The Indian Certificate of Secondary Education (ICSE)
Indian School Certificate (ISC)

இதுவும் இந்தியா முழுமைக்கும் ஒரே முறை என்றாலும் அதிகபடுத்தபட்ட பாடங்கள் உண்டு.முக்கியமாக இந்த பாடத்திட்டத்தில் ஆங்கில மொழி சிறப்பாக சொல்லி தரப்படும்.பத்தாவது வரை ICSE என்றும்,பிறகு ISC என்றும் இருக்கிறது.இதில் ஒன்பதாம் வகுப்பில் இருந்து தேர்ந்தெடுத்தபட்டவிருப்ப பாடங்களை படிப்பது ஒரு வசதி.இது அரசாங்கம் நடத்தாத ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாடத்திட்டம்.இந்தியா முழுமையும் பள்ளிகள் இருந்தாலும் மதிப்பெண்கள் அதிகம் பெறமுடியாத ஆனால் அருமையான பாடத்திட்டம்.
பாடத்திட்ட முறைகள் பற்றிய லிங்க்.

http://www.cisce.org/


NIOS ,National Institute Of Open Schooling.திறந்தநிலை பள்ளி கல்வி.

மத்திய அரசு அனைவருக்கும் கல்வி வழங்க சீரிய நோக்கோடு கொண்டு வந்தது.இதை பற்றி அநேகம் பேர் அறியவில்லை.பள்ளிக்கு போகாமல் ,இல்லை என்றால் வீட்டில் இருந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.படிக்காதவர்கள் கூட தபால் மூலம் இல்ல சென்டர் மூலம் பாடங்கள் கற்று பரிட்சை எழுதலாம்.இது கிட்டத்தட்ட மத்திய அரசு பாடத்திட்டத்தை சார்ந்து இருந்தாலும் தேர்வு முறை கொஞ்சம் எளிது என்று கேள்வி.ஆனால் பாடத்திட்டம் அத்தனை எளிது அல்ல.இதில் தேர்ந்து எடுக்க நிறைய விருப்ப பாடங்கள் இருப்பது மிக்க சிறப்பு.இது இந்தியா முழுக்க அனைத்து பள்ளிகள்,கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்ட பாட்திட்டமாகும்.வெளிநாட்டில் மேல் படிப்பில் அங்கீகாரம் எந்த அளவுக்கு உண்டு என்று நிச்சயம் இல்லை.ஆனால் பள்ளி செல்லாமலையே படிக்க அருமையான் வாய்ப்பு கொடுக்கும் பாடத்திட்டம்.கொஞ்சம்,கொஞ்சமாக பிரபலம் ஆகி வருகிறது.மாற்று பாடம் உள்ள பள்ளிகள் இந்த தேர்வுக்கு மாணாக்கர்களை தயார்படுத்துகிறது.குறைந்தபட்ச பத்தாம் தேர்வு எழுத வயது பதினைந்து.ஸ்பெஷல் பள்ளிகளில் பெரும்பாலும் இந்த பாடமுறைக்கே தயார் படுத்துவார்கள்.

http://www.nios.ac.in/default.aspx

CAMBRIDGE IGCSE .கேம்பிரிட்ஜ் பாடத்திட்டம்.

இப்போது முளைத்து வரும் இண்டர்நேஷனல் பள்ளிகளில் பெரும்பாலும் இங்கிலாந்தை சேர்ந்த கேம்ப்ரிட்ஜ் பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது.இது சிறப்பான பாடத்திட்டமாக இருந்தாலும் மிக்க அதிக தொகை கட்டி படிக்க வேண்டி வரும்.லட்சகணக்கில் வருட பள்ளி கட்டணம் கட்ட வேண்டும் எனக்கு தெரிந்து வருடத்திற்கு மூன்றில் இருந்து பத்து லட்சம் வாங்கும் பள்ளிகள் உள்ளன.விருப்ப பாடங்கள் தேர்வு மட்டுமே 70க்கு மேல் இருக்கின்றன.மாணவர்களுக்கு எந்த பாடம் விருப்பமோ அதை மட்டும் எழுதலாம்.கணிதம் வராத மாணவன் பத்தாம் வகுப்பை தாண்ட முடியாத இந்திய சூழலில்..எந்த மேல்படிப்பு வேண்டுமோ அதற்கு ஏற்றார் போல விருப்ப பாடங்கள் படிக்கலாம்.அருமையான முறை,புரியும் விதத்தில் அமைந்த பாடத்திட்டங்கள் இதன் சிறப்பு.இந்திய கல்வி முறையின் சூழலும்,இந்த சூழலும் வித்தியாசமானவை.விரிவாக அடுத்த கட்டுரையில்.இங்கும் தனியாக மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.ஹோம் ஸ்கூலிங் செய்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு.முக்கியமாக விளையாட்டு துறை,கலை துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு..தனி தேர்வுக்கு குறைந்தபட்ச வயது வரம்பும் இல்லை.உலகம் முழுதும் ஏற்றுகொள்ளப்பட்ட பாடத்திட்டம்.இந்தியாவிலும்ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.

http://www.cie.org.uk/qualifications/academic/middlesec/igcse/overview


IB The International Baccalaureate ஐ.பி.முறை.

இந்த பாடத்திட்டம் உலக அளவில் வளர்ந்து வரும் பாடத்திட்டம்.இதுவும் இண்டர்நேஷனல் பள்ளிகள் மூலம் இந்தியாவிற்கு வந்து இருக்கிறது.கேம்ப்ரிட்ஜ் பாடத்திட்டத்தை விட இதற்கு கட்டணம் அதிகம்.அருமையான பாடத்திட்டம்.சிறந்த உள் கட்டமைப்புகள் அதிகம் தேவைப்படும்.உலகம் முழுதும் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம்.வெளிநாட்டில் போய் படிக்க இந்த பாடத்திட்டம் ஓரளவுக்கு உதவும்.வெளிநாடு அளவுக்கு கட்டணம் அதிகம் என்பதால் பள்ளிகள் குறைவு.

http://www.ibo.org/

National Curriculum..(for Higher secondary students) இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம் பதினொன்று,பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு.

இன்னொரு முக்கிய விஷயம்.இப்போது இந்தியா முழுமையும் பதினொன்று,பன்னிரண்டு வகுப்புகளில் ஒரே பாடத்திட்டம் இருப்பது போல முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.National Core Curriculum என்ற முறை.இது மதிய அரசு பாடத்திட்டத்தில் உள்ள புத்தகங்களை மாநிலங்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு வடிவமைக்க பட்டு வருகிறது.தமிழ்நாட்டில் இன்னும் ஏற்று கொள்ளபடவில்லை.ஆனால் கர்நாடக உள்பட ஆறு மாநிலங்களில் இந்த பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.அதனால்அனைத்திந்திய நுழைவு தேர்வு எழுத மாணாக்கர்களுக்கு வசதியாக இருக்கும்.இந்தியா முழுமைக்கும் சிறிது வருடங்களில் வந்துவிடும்.அப்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பு எங்கு,எந்த பாடத்திட்டத்தில் படித்தாலும் ஒரே பாடங்கள்தான் இருக்கும்.வரவேற்க வேண்டிய விஷயம்.படி,படியாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்திய அளவில்.மொத்தம் அங்ககரிக்கப்பட்ட பாடத்திட்டங்கள்.

The following boards of education have been recognized by Government of India
Andhra Pradesh Board of Secondary Education
Andhra Pradesh Board of Intermediate Education
Assam Higher Secondary Education Council
Assam Board of Secondary Education
Board of Secondary Education, Madhya Pradesh
Board of Secondary Education, Madhya Bharat Shanti Niketan Satya Dev Nagar Gwalior (M.P.)
Bihar School Examination Board
Bihar Intermediate Education Council
Central Board of Secondary Education
Council for the Indian School Certificate Examination
Chhattisgarh Board of Secondary Education
Goa Board of Secondary & Higher Secondary Education
Gujarat Secondary Education Board
Haryana Board of Education
Himachal Pradesh Board of School Education
J&K State Board of School Education
Karnataka Secondary Education Examination Board
Karnataka Board of the Pre-University Education
Kerala Board of Public Examinations
English School Leaving Certificate Examination Travancore
Maharashtra State Board of Secondary and Higher Secondary Education
Manipur Board of Secondary Education.
Manipur Council of Higher Secondary Education
Meghalaya Board of School Education
Mizoram Board of School Education
Nagaland Board of School Education
National Institute of Open Schooling
Orissa Board of Secondary Education
Orissa Council of Higher Secondary Education
Punjab School Education Board
Board of Secondary Education, Rajasthan
Tamil Nadu Board of Secondary Education
Tamil Nadu Board of Higher Secondary Education
Tripura Board of Secondary Education
Uttar Pradesh Board of High School and Intermediate Education (UPB), Allahabad, Uttar Pradesh, India
West Bengal Board of Secondary Education

1 comment:

Kurinji said...

Sister, can you review our blog if u like introduce us to ur friend kurinjinet.blogspot.com