Wednesday, May 20, 2015

வாழ்த்துகள் மட்டுமா வாழ்வு?

வாழ்த்துகள் மட்டுமில்லை இங்கு.

பன்னிரெண்டாம் வகுப்பு தோல்வி...கர்நாடகாவில் ரிசல்ட் வந்துவிட்டது.
..நம்ம ஊர்ப் போல இங்கு மதிப்பெண்கள் அதிகம் வாங்க மாட்டார்கள்..அதுப் போல தேர்ச்சி சதமும் குறைவு. அறுவது சதவிகிதமே தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்..அதாவது பத்து மாணவர்களில் நான்கு தோல்வி..

ஒரு மாணவியின் தந்தை போன் செய்தார். நீங்கள் வந்து பேசினால் நல்லா இருக்கும் என்று...நம்பிக்கை தவிர கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்றாலும் அதை விட சிறந்த பரிசு கிடையாது என்று அறிந்தே இருக்கின்றனர்.

மாணவி திரும்ப திரும்ப நன்றாகத்தான் செய்தேன் என்றார். மிகுந்த சஞ்சலம்..தந்தையும் மாணவியின் கண்ணீரை பார்த்து சஞ்சலத்தில் இருந்தார். எதிர்பார்க்கவில்லை.நடந்து விட்டது..அடுத்து என்ன செய்யப் போகிறாய் என்றுக் கேட்டேன்..அவருக்கு ஒன்றும் புரியவில்லை..இத்தனை வேகமாக கேட்பேன் என்று எதிர்பார்க்கவில்லை..அந்த கேள்விக்கு அவள் தயாராகவில்லை ...

உடலில் வலி ஏற்படுவது இந்த இடத்தில பிரச்னை என்று உணர்த்த..அதை சரியாக வைத்தியம் செய்து சரி செய்ய வேண்டும். அதுபோல தோல்வியின் மூலம் வருத்தம் ஏற்படுவது, வலி வருவதும் உன்னை சரி செய்துக் கொள்ள..அதை முதலில் உணர வேண்டும்.

இதே பார்டரில் பாஸ் செய்து இருக்கலாம்.. நீ கடவுளை நம்பினால்..இது கடவுள் கொடுத்த பரிசு என்று நினைத்துக் கொள்..இந்த நேரத்தில் உன் வலிமைக்கு வந்த சோதனை..அதில் மீண்டு விட்டால் எந்த பிரச்னையும் உன்னால் சமாளிக்க முடியும்..தோல்வியில் இருந்து மிகபெரிய வாழ்க்கைப் பாடங்கள் கற்றுக் கொள்ளலாம்..எங்கோ ஏதோ சமயத்தில் ஏற்பட்ட அலட்சியம் ..இந்த தோல்வி..இனிமேல் உன்னிடம் எந்த விஷயத்திலும் அலட்சியம் வராது..அது வாழ்கையில் வெற்றிப் பெற மிக உதவும்..எனவே இந்த வருத்தத்தை கூட உனக்கு சாதகமாக, நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பொறியியல் கல்லூரியில் பெரிய நிறுவனத்தின் தலைமை பணியில் இருப்பவர்கள் கேம்பஸ் சென்றார்கள்..ஒரு மாணவன் அரியர்ஸ் வைத்து இருந்தான்..ஆனால் நிறுவனத்துக்கு வேண்டிய திறமை அவனிடம் இருந்தது..மற்றவர்கள் பற்றி கவலைப் படாமல் அந்த தலைமையாளர் வேலைக்கு மாணவனை எடுத்துக்கொண்டார்.. அவன் சென்றவுடன் எப்படி அரியர்ஸ் மாணவனை எடுக்கலாம்..நம் கம்பெனி ரூல்ஸ் இருக்கே என்று கேட்டு இருக்கிறார்கள்..அதற்கு அப்படி என்றால் பன்னிரெண்டாம் வகுப்பில் நான் பெயில்  என்னை என்ன செய்வது என்று கேட்க..அவர் கீழ் வேலை பார்ப்பவர்கள்..வாயடைத்து  போனார்கள்..இது நிஜக் கதை..எனவே பன்னிரெண்டாம் வகுப்பு தோல்வி என்பது வாழ்கையில் ஒரு துளி..அவ்வளவே என்றேன்..


அழுகை வரும்..நன்றாக அழு..உன் துக்கங்கள் கரையும் வரை அழு..அதை அடக்க வேண்டாம்..வருத்தமா இருக்கா..வருத்தப்படு..அது உணர்வு..அது வரும், போகும்..இப்பவே போய் ஆதித்யா டி.வி பாரு..ப்ரெண்ட்ஸ் கூட வெளில போ..மனசை மாத்திக்கோ என்று சொல்ல மாட்டேன்..இந்த சமயத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தீவிரமாக யோசிக்க வேண்டும்..

வருத்தத்தில் சுனங்கி அடுத்த வாய்ப்பை தவற விடக் கூடாது..அதற்கு அந்தப் பெண் ரி வேல்யுவேஷன் அனுப்பனும் என்றாள்..அனால் அடுத்த தேர்வு நாற்பது நாட்களில்.. ரி வேல்யுவேஷன் முடிய இன்னும் இருவது நாட்கள் ஆகும்..மிக முக்கியமான நேரம் கையில் இருந்து நழுவுகிறது...எனவே அழக் கூட நேரமில்லாமல் அடுத்த தேர்வு காத்துக்கொண்டு இருப்பதை உணர்த்தினேன்..

அடுத்து நீ ஒரு பெண்..நாளைக்கு யாரை சார்ந்தும் இருக்க கூடாது..சார்ந்து இருக்க முற்படும் நேரத்தில் உன் சுயம் தொலையும்..அப்பா, கணவன், மகன் என்று யாரையும் சாராத வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் பணமும் முக்கியம். அதற்கு இப்பொழுது நம் கண் முன்னால் தெரியும் ஒரே வாய்ப்பு கல்வி மட்டுமே.

எல்லாருக்கும் தெரியும்...நீ நன்றாக படிப்பாய் என..எனவே யாரை பார்த்தும் அவமானம் கொள்ள வேண்டாம். யாருக்கும் நம்மை நிருபிக்க தேவை இல்லை. நம் எதிர்காலம் மட்டுமே நமக்கு முக்கியம்..யார் யாரோ பேசுவார்கள் என்று யோசித்துக் கொண்டு இருந்தால் நம் மனம்தான் இன்னும் கெட்டுப்போகும்..நம்மை நன்றாக அறிந்தவர்கள் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். அறியாதவர்கள் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

உன் எதிரில் இரு பாதை இருக்கு..வருத்தப்பட்டுக்கொண்டு சுணங்கி போய்..அழுதுகொண்டு இருப்பது..அடுத்து அழுது முடிச்சிட்டு இதை பாடமாக எடுத்துக்கொண்டு மனதுக்கு வெறி ஏற்றி அடுத்த தேர்வுக்கு படிக்க ஆரம்பிப்பது..உனக்கு வெளியில் இருந்து யாரும் ஊசியோ, மாத்திரையோ கொடுத்து எதுவும் செய்ய முடியாது..உன் மனம், உன் வாழ்வு நீதான் தேர்ந்து எடுக்க வேண்டும்..போக வேண்டிய பாதையை..

இது எல்லாவற்றையும் விட நம்பிக்கை மிக முக்கியம். போன தேர்வின் பொழுது அது எங்கோ தவறி இருக்கிறது..அல்லது கடின உழைப்பை தூண்ட வில்லை. கடின உழைப்புடன் நம்பிக்கையும் மிக முக்கியம். எனவே கல்லூரி சேரப் போவதை கனவாக கொண்டு..அதில் துளிக் கூட நம்பிக்கை இழக்காமல் நேர்மறையாக எல்லாம் சிந்தித்து தேர்வுக்கு தயார் ஆனால் கண்டிப்பாக நாம்தான் வெற்றிப்பெறப் போகிறோம்..கனவுகள், கடின உழைப்புடன் சேரும் வேளையில் அதிர்ஷ்டம் எனப்படும் வெற்றி நம்மை சேரும்..அதற்கு உதவியாக எல்லா வாய்ப்பும் நமக்கு கிடைக்கும்.

அனைவரும் வெற்றியை பற்றியே பேசுவதால் தோல்விகள் இல்லை என்று ஆகாது...இத்தனை லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்து இருக்கிறார்கள். வருடா வருடம்..எனவே கோடிக்கணக்கான மாணவர்கள் இந்தியா முழுவதிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கான ஒரு வாழ்கை இருக்கவே இருக்கிறது. கண்டிப்பாக அதில் பலர் மிகப்பெரிய இடங்களை அடைந்து இருப்பார்கள். எனவே தோல்வியை எப்படி கையாளுகிறோம் என்பதுதான் முக்கியமே தவிர..தோல்வி என்பது பெரிய விஷயமே இல்லை..அதுவும் நல்லதுக்கு..

பள்ளிகளில் படி, மதிப்பெண் வாங்கு, பாஸ் செய்யா விட்டால் உன் வாழ்கை போச்சு என்று  பயத்தில் வைத்து இருக்கிறார்கள்..அதற்குமேல் பெற்றோர்கள்..அந்த பயமே தோல்வி வேளையில்  வாழ்கை இருண்டார் போல இருக்கிறது..இனிமேல் அலட்சியம்  என்பது எத்தனை மோசமானது என்ற படிப்பினை வாழ்வின் முதல் படியில் கிடைத்து இருக்கிறது..இதுவும் நல்லதுக்கு..இதைப் படிப்பினையாக கொண்டால் இனி வாழ்வில் எங்கும் அலட்சியமாக இருக்க முடியாது..எனவே எழுந்து வந்து வேலையைப் பார்...யாரையும் இப்பொழுது பார்க்க தேவையில்லை..பிறகு பார்த்துக் கொள்வோம்..நம்பிக்கை மட்டுமே முக்கியம் என்று முடித்தேன்..

எப்படி வெற்றி ஒரு இயல்பான விஷயமோ அதேப் போலதான் தோல்வியும் என்றேன்..

அவளிடம் பேசும் வேளையில் அவள் எனக்கு செய்த மிகப்பெரிய உதவி..என்னை என்னிடம் இருந்தும மீட்டுப் பார்க்க முடிந்தது. அவளுக்கு கொடுத்த நம்பிக்கையை எனக்கும் கொஞ்சம் அள்ளிக் கொண்டு வந்தேன்.

திரும்பும் வழியில் பையனிடம் தோல்வி வலிப்பற்றி பேசினேன்..அவனால் அதை புரிந்துக் கொள்ள முடியவில்லை..அதற்கு ஒரு கேர்ள் ப்ரென்ட் ஆவது உன்னை விட்டு விலகி இருக்கணும்..அப்பத்தான் தெரியும்..அந்த வலியை விட தேர்வு தோல்வி மிக வலிக்கும் என்றேன்..அம்மா அதுக்கெல்லாம்  நேரமே இல்லை..அப்புறம் நானும், என் ப்ரெண்ட்ஸ் குருப்  படு சோம்பேறிகள்.. எனவே அந்த தோல்விகள் எல்லாம் எங்களுக்கு வந்ததே இல்லை..என்றான்.

இந்த போட்டு வாங்கும் அம்மா புத்தி போவதே இல்லை நம்மை விட்டு..ஹப்பாடா என்ற நிம்மதியுடன்,,இதில் என்ன ஆனந்தமோ..நமக்கு..வீடு திரும்பினேன்.

நினைவில் அந்தப் பெண்..விடைபெறும் பொழுது.. அந்தப் பெண்ணின் கண்கள் நம்பிக்கையில்  ஒளிர்ந்தது ..போகும் பொழுது இருந்த வெடித்து வந்த அழுகை இல்லை. தோல்வி அடையும் வரை நாம் ஏன் தோல்விகள் பற்றி பேசுவதே இல்லை? 






4 comments:

Unknown said...

உண்மையிலேயே அந்த மாணவி ,உங்க அறிவுரையை முழுவதையும் கேட்டு உள்வாங்கியிருந்தாலேயானால்....வெற்றி நிச்சயம் .!!!

பி.கு : உங்க இந்த பதிவ படிக்கசொல்ல..எனக்கே ரெண்டுதடவ கொட்டாவி வந்துச்சு....
just for fun...really good !!!

Unknown said...

உண்மையிலேயே அந்த மாணவி ,உங்க அறிவுரையை முழுவதையும் கேட்டு உள்வாங்கியிருந்தாலேயானால்....வெற்றி நிச்சயம் .!!!

பி.கு : உங்க இந்த பதிவ படிக்கசொல்ல..எனக்கே ரெண்டுதடவ கொட்டாவி வந்துச்சு....
just for fun...really good !!!

Anuprem said...

இன்று தான் உங்கள் தளத்திற்கு வந்தேன் ...அருமையான பகிர்வுகள் ........தொடர்வதில் மிகவும் மகிழ்ச்சி ....

Unknown said...

அருமை நம்பிக்கை அறிவுரை சாதிப்பாள் சகோதரி...