Wednesday, July 22, 2015

மன வேர்ப் பிடிக்கும் கிளைகள்.

எனக்கு இங்கு வந்தபொழுது ஒரு தடுமாற்றம்.. நீங்களும் எழுதலாம் என ஒரு சிறு நம்பிக்கை விதையை விதைத்து சென்றவர் ஈரோடு கதிர்.. நன்றிகள்.

கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர் எழுத்துகள் உதாரணம், எந்த எழுத்தும் நம் கற்பனையைத் தூண்டி காட்சிப்படுத்த வேண்டும். இவரின் ஒரு வார்த்தைக் கூட கண் முன் காட்சியைக் கொண்டு வந்து விடும். 

கட்டுரை என்றால் செய்திகள் இருக்கும், தகவல்கள், விவாதங்கள், நடைமுறைகள் என்றுப் போகும்..ஆனால் கட்டுரையைக் கவித்துவமாக படைப்பது இவருக்கு கை (கி போர்ட்) வந்தக் கலை.

எத்தனையோ வாசிக்கிறோம், கடக்கிறோம். ஆனால் ஒவ்வொன்றிலும் தனித்துவத்தை உணரச்செய்வது கதிரின் தமிழ்.

வாசிக்கும் நேரங்களில் ஒரு வார்த்தையில் சிக்குண்டு, அடுத்ததற்குப் பயணப்பட முடியாமல், அந்தக் காட்சியில் நின்று விடுவதுண்டு அது ஒரு அழகிய படக்காட்சியை ஸ்டில் போட்டுப் பார்ப்பதைப் போ. அதே சமயம் சில பாடல்களை ஒன்ஸ் மோர் போட்டுக் கேட்பதைப் போல... சில பாராக்கள் திரும்பத் திரும்ப படிக்கச்சொல்லும்..

இலக்கிய வாசிப்பு என்றால் அதன் தரத்திலும், வாசகனின் முதல் வாசிப்பு என்றால் அந்த எளிமையிலும் இருக்கும். யார் வேண்டுமானாலும் வாசித்து, எழுத்துகளோடு வசித்து பயணப்பட முடியும்.

எளிமை, அழகியல், கவித்துவம்,மென் சோகம், குறும்பு, இயல்பு எல்லாம் இருக்கும் எழுத்து..

ஒரு வரியில் புரட்டிப் போடவும், அழ வைக்கவும், இளகிடச் செய்யவும், நிமிர்ந்து உட்கார வைக்கவும், இப்படியும் இருக்கா? என யோசனை செய்யவும் வைக்கும் மாயாஜால எழுத்து..

நம் மனம் தொட்டு உலுக்கிச் செல்வது மட்டுமல்லாமல், கொஞ்சம் நல்லவழியில் மாற்றிக் கொள்ளவும், சொல்லாமல் சொல்லும் பாஸிடிவ் வரிகள் பல.

ரசனையாக எப்படியெல்லாம் இருக்க முடியும்.
அதை எப்படி அழகியலோடு வடிக்க முடியும் என்று சொல்லும் எழுத்து.

ஒரே காட்சியை ஓராயிரம் பேர் பார்த்துக் கடந்திருப்பார்கள். அது கதிரின் கண்ணில் பட்டு, கையில் வடியும் பொழுது அந்தக் காட்சி புதுவிதமாக ஆயிரக்கணகான மனதிற்குள் பயணப்பட்டிருக்கும்..

இன்னும் சொல்ல ஆயிரம் வார்த்தைகள் உண்டு. அவை புத்தக விமர்சனத்திற்காக சேமித்து வைத்திருக்கிறேன்.

மிக்க மகிழ்ச்சி.
புத்தகம் போடும் கணங்கள் இன்னும் ஐம்பது முறையாவது அமைய இது தொடக்கமாக அமையட்டும்.

இனி வாசகர்களின் மனதில் கிளைகள் விருட்சமாகும்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அன்பருக்கு வாழ்த்துகள்...

'பரிவை' சே.குமார் said...

அண்ணாவின் எழுத்து அருமையானது...
அவருக்கு வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

வாழ்த்துக்கள் புத்தகம் வெற்றிவாகை சூடட்டும்.