Tuesday, November 3, 2015

வாத்து ராஜா

வாத்து ராஜா.

ஒரு புஸ்தகத்தை எளிதாக நான் படித்து எடைப் போட முடியும் என்ற எண்ணத்தை  ஒரு எளிய கதையால் பொடி பொடியாக ஆக்க முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.

சிறுவர்களை சிறுவர்களின் மனதோடு மட்டுமே அணுக முடியும் என்று விஷ்ணுபுரம் சரவணன் அழுத்தி சொல்லி இருக்கிறார். ஆனால் மிக மிக எளிமையாக.கதை என்று பெரிதாக இல்லை, அழுத்தமான எழுத்து இல்லை. மிக எளிமை..எல்லாமே எளிமை. அத்தனை எளிமையில்தான் குழந்தைகளை கவர் முடியும் என்று சொல்லி இருக்கிறார்.


ஒரு ராஜா தன் முட்டாள்தனத்தால் வாத்து ராஜா என்று ரகசியமாக அழைக்கப்படுகிறார். அதை காவலன் வாத்து ராஜா வருகிறார் பராக், பராக் என்று டங் ஸ்லிப் ஆகி உளறிவிடுகிறான். அதுவும் அந்த காட்சிக்கு ஒஜு சிரித்த சிரிப்பு..அதை திருப்பி படிக்க சொல்லி கேட்டுவிட்டு உடனே இதை அங்கிள் (விழியன்) எழுதினாரா என்று கேட்டான். இல்லடா இது வேற அங்கிள் என்று வாய்ஸ் நோட் அனுப்ப சொன்னேன். முகத்தில் நல்லக் கதை கேட்ட மகிழ்ச்சி தெரிந்தது.

அந்த சிறுமி வாத்தை காப்பாற்ற போராடும் பொழுது ஒரு எளிய யோசனை செய்து காப்பாற்றுவது குழந்தைகளுக்கு பொருத்தமாக இருக்கிறது. இப்படி கதை முழுக்க அவர்களாகவே யோசித்து இருக்கிறார். எந்த பேண்டசியும் இல்லாமல் கவர்ந்து இருக்கிறார்.

குழந்தைகள் மேல் மிகுந்த ஆழமான நேசம் இருந்தால் மட்டுமே அவர்கள் மனதுடன் அந்த உலகில் இறங்கி சஞ்சரிக்க முடியும். அத்தனை உயரங்களையும், வளர்ச்சியையும் நிறுத்தி விட்டு ஒரு ரிவர்ஸ் கியரில் அந்த வயதுக்கு செல்வது பேசும் அளவுக்கு எளிதான விஷயமில்லை. 

இது போன்ற எளிய படைப்புகளின் மூலமே குழந்தைகளை கொஞ்சமாவது தமிழ் புத்தகங்களின் பக்கமும், தமிழ் கதைகள் மீது ஆர்வமும் கொண்டு வர முடியும். மிக்க நன்றி மிக அழகான சிறுவர் படைப்புக்கு..இன்னும் நிறைய புத்தகங்கள் எதிர்பார்க்கிறோம்.

2 comments:

Nagendra Bharathi said...

அருமை

”தளிர் சுரேஷ்” said...

பகிர்வுக்கு நன்றி! நூல் கிடைக்குமிடம், விலை போன்றவையும் வெளியிட்டிருக்கலாம்!